Tuesday, February 24, 2009

தமிழ் சகோதரியின் நெஞ்சை ஆழ உருக்கும் கண்ணீர் மடல்!

தமிழ் சகோதரியின் நெஞ்சை ஆழ உருக்கும் கண்ணீர் மடல்
ஈழ தமிழ்ர்கள் ஒவ்வொருவரும் இலங்கை இனபடுகொலை இராணுவத்தால் படும் கொடிய கஷ்டங்களை சுமந்து வரும் மடல்


தகவல்: http://www.nerudal.com/

அன்புள்ள அப்பாவுக்கு!

தேசம் காக்கப் புறப்பட்டு விட்ட சேயிடமிருந்து..

இலக்கம் 109,
இடதுகரை வாய்க்கால்,
இரணைப்பாலை,
வன்னிப் பெருநிலப்பரப்பு,
தமிழீழம்.
மாசி 21, 2008.

அன்புள்ள அப்பாவுக்கு!


வழமை போல நலம்; நலமறிய ஆவல் என்று எழுத எனக்கு இன்று மனம் வரவில்லை; காரணம், நீங்கள் அறிந்ததே.

பூமிப் பந்து சுற்றுகையையோ அல்லது சூழற்சியையோ நிறுத்தினாலும் என் மனப்பந்து எம் மண்ணை விட்டு அகலாது என்பதை உளமார உணர்ந்து, பனி விழும் தேசத்தில் எம்மை(யும்) நினைத்து ஏங்கிக் கொண்டிருக்கும் உங்களுக்காகவும் அண்ணா மற்றும் அண்ணிக்காகவும் இம்மடலைச் சற்று விரிவாக எழுதுகிறேன்.

கடந்த வருடம் நீங்கள் எழுதி அனுப்பிய கடிதம் சில வாரங்கள் முன்னர் பல தடைகள் தாண்டி உடைத்து ஒட்டப்பட்டு இடம்பெயர்ந்து இயங்கிய எமதூர்த் தபாலகத்தில் இருந்து எமக்குக் கிடைத்தது.
அதில் நீங்கள் எதிர்வு கூறி எழுதியிருந்தவாறு, இங்கு நாளாந்த நிலவரம் வரவர மோசமாகிக் கொண்டே போகிறது. கடந்த வருடம், ஐந்தாம் மாதம் 23ம் திகதி எங்களுடைய வீட்டுக்கும் முறிகண்டிச் சந்திக்கும் இடையில் சிறிலங்காப் பயங்கரவாத அரசின் ஆழ ஊடுருவும் படை நடாத்திய ‘கிளைமோர்’த் தாக்குதலால் 6 சிறார்கள் உட்பட்ட 16 பேர் அநியாயமாய் அவலச்சாவடைந்து விட்டதைப் பற்றியும் புதூர் நாகதம்பிரான் கோவில் விழாவுக்குச் சென்று கொண்டிருந்த மக்கள் மீது இரவு நேரத்தில் மாங்குளத்திற்கும் கரிப்பட்டமுறிப்பிற்கும் இடைப்பட்ட 19 ஆம் கட்டைப்பகுதியில் ‘கிளைமோர்’த் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை பற்றியும் அறிந்து நீங்கள் மிகவும் பயந்ததாகவும் கவனமாக இருக்கும்படியும் எழுதியிருந்தீர்கள்.

அப்பா! அன்றைய சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களின் உடல்கள் மறு தினம் சனிக்கிழமை மக்கள் வணக்கத்துடன் ஓரே இடத்தில் பெருங் கதறல்களுடன் அடக்கம் செய்யப்பட்டதை என் கண்களால் நேரிற் கண்டேன் என்று நான் உங்களுக்கு எழுதிய மடலை அனுப்ப முன், நானும் அம்மாவும் எமது அக்கராயன்குளப் பிரதேசத்தை விட்டு இடம்பெயர வேண்டியவர்களாகி விட்டிருந்தோம்
அதன் பின் நிகழ்ந்த கோழைத்தனமான - அப்பாவி மக்கள் மீதான சிறிலங்காப் படையினரின் ஆழ ஊடுருவும் அணியினரின் பல்வேறு கொடூரத்தாக்குதல்களுக்குப் பின்பாகவும் இன்று வரையும் எமது தாயகம் எங்கும் எத்தனையோ சாவடிப்புகள் பல்வேறு வடிவங்களில் சிங்கள அரச படைகளாலும் ஒட்டுக் குழுக்களாலும் குறிப்பிட்ட சில நாடுகளின் போர் உதவிகளுடன் நிகழ்த்தப்பட்டு விட்டன.

கொத்துக் கொத்தாக குடும்பம் குடும்பங்களாக எமது உறவுகள் பல சிங்கள பேரினவாதப் பூதத்தின் இனப்படுகொலையில் உயிரிழந்து விட்டன. எமது மக்கள் பல்லாயிரக் கணக்கில் வயது வேறுபாடின்றி காயப்பட்டு, ஊனமுற்று சிகிச்சை எதுவுமின்றி பட்டினியோடு பரிதவித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

அப்பா! பாருங்கோ, எத்தனை தரம் நாங்கள் அந்தக் கோயிலுக்கு அந்தப் பாதையால் போய் வந்திருக்கிறோம்? நீங்கள் வெளிநாடு போனதன் பிற்பாடு அம்மாவும் நானும் சித்தி வீட்டுக்குப் போகிற போதும் மருத்துவர் பொன்னம்பலம் ஞாபகார்த்த மருத்துவமனைக்குப் போகிற போதும் பல தடவைகள் போய் வந்த பாதை அது.

ஆனால், இங்கு இப்பவுள்ள நிலைமையை நீங்கள் எல்லோரும் தினமும் இணையத்தளங்களூடாக அறிந்து கொண்டுதானே இருப்பீர்கள்? சில வாரங்கள் முன் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் என்னுடன் படித்த பிள்ளை ஒருவர் எறிகணை வீச்சில் காயப்பட்டு இருந்ததை அறிந்து பார்க்கச் சென்றபோது நானும் எதிர்பாராத வகையில் பல்குழல் பீரங்கித் தாக்குதலில் அகப்பட்டுக் கொண்டேன்.

இப்போ நினைத்தாலும் குலை நடுங்குகிறது - அதில் நான் கூட அகப்பட்டு காயப்பட்டோ இறந்தோ இருக்கலாம் தானே? அப்பா, எங்களை மாதிரி நான்கு பேருள்ள ஒரு குடும்பத்தில், தந்தையும் மூத்த மகனும் அந்த இடத்திலேயே சாக, தாயும் இளைய மகளும் அதே சம்பவத்தில் படு காயம் அடைந்து அங்கங்களை இழந்து இருக்கிறார்கள்!!

அரைநூற்றாண்டு காலத்துக்கும் மேலாக, இப்படி எத்தனை எத்தனை துன்பியல் நிகழ்வுகள்…. கற்பனைக்கும் எட்டாத, நம்பவே முடியாத சம்பவங்கள், எமது இனத்தின் வரலாற்றில் கறையாய்ப் படிந்துள்ளன?!

அப்பா! ஐம்பத்தெட்டில் நடந்த இனப்படுகொலையின் போது, இலங்கைத்தீவின் தென் பகுதியில் சிறுவர்களாய் இருந்த நீங்களும் அம்மாவும் எவ்வளவு தூரம் துன்பப்பட்டு, மயிரிழையில் உயிர்பிழைத்தீர்கள் எனப் பாட்டாவும் அப்பம்மாவும் சொன்ன வரலாற்றுக் கதைகள் இன்னும் பசுமரத்து ஆணியாய் என் மனதில் நன்றாகப் பதிந்துள்ளன.
பின், 77ம் ஆண்டு இனப்படுகொலையின் போது அண்ணாவுடன் மலைநாட்டிலிருந்த போது அகதியாகிப் பிரபல பாடசாலையில் உயிருக்கஞ்சி நீங்கள் தஞ்சமடைந்ததும் பிறந்து சில நாட்களேயான பாலகனாய் இருந்த பெரியண்ணா கடும் தொற்று நோயினால் பாதிக்கப்பட்டு எதிர்பாராத வகையில் உயிரிழந்ததும் நீங்கள் சொல்லி நான் நன்கு அறிவேன்.

அதன் பின், மீண்டும் 83ம் ஆண்டு இனப்படுகொலையின் போது எமது வீட்டிற்குக் காடையர் கூட்டம் தீயிட ஒருவாறு தப்பிப் பிழைத்துக் கப்பலில் வடக்கு நோக்கி அகதியாய் அனுப்பப்பட்ட அவலமும், மாற்றுடையின்றி நீங்கள் தவித்ததும், பக்கத்து வீட்டு ஆட்கள் உதவியுடன் குடிசை போட்டு அவர்கள் வளவுக்குள் தற்காலிகமாய்த் தங்கியதும், பங்கீட்டு அட்டை உணவுக்காகச் சங்கக்கடை வாசலில் விடிய முன்பே போய் நின்றது பற்றியும் நீங்களும் அம்மாவும் சின்னண்ணாவும் அவ்வப்போது கூறிய அநுபவக்கதைகள் இன்னும் என் மனப்பாறையில் ஆழப் பதிந்து அழியாது உறைந்துள்ளன.

இருபதாண்டுகள் முன், ‘அன்பு வழி’ யில் ‘பூமாலை’யோடு என்று கூறிக் கொண்டு அயல் நாட்டிலிருந்து வந்திறங்கிய ஆக்கிரமிப்புப் படையினன் ஒருவன், ஒரு நாள், தேசம் காக்கின்ற காவற் தெய்வங்களுக்கு உணவு கொடுத்த ஒரு மூதாட்டி பற்றித் தெரியுமா என்று கேட்டுப் பள்ளி சென்ற அண்ணாவின் காதைப் பொத்தி அடித்ததில், அண்ணாவின் செவிப்பறை வெடித்துக் குருதி கசிந்தது, அண்ணாவுக்கு, மறந்திருக்காது தானே?

அதன் பின், நான் பிறந்த பின்பு குடாநாட்டுக்குள்ளேயே எத்தனை தரம் சொந்த வீட்டை விட்டு இடம் பெயர்ந்து அலைந்து திரிந்து இருக்கிறோம் என்று உங்களுக்கும் நினைவிருக்கும் தானே?

அப்பா! நீங்களும் அண்ணாவும் உங்களுக்கு ஒரு (வீட்டுக்) கடமை, பொறுப்பு இருக்கிறது என்று கூறியபடி அதைச் செய்திடீங்கள். ஆனால் நான்..? இதுவரை உங்களதும் அம்மாவினதும் ஆசைப்படி, பல துன்பங்களிற்கு இடையில் படித்து முடித்து விட்டேன். இப்போது பல்கலைக்கழகம் போகக் கூடிய தகுதி எனக்கு இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும்.ஆனால் யோசித்துப் பாருங்கோ, பல்கலைக்கழகம் போவதற்கு உரிய சூழ்நிலை இருக்கிறதா, போனவர்களுக்குப் பாதுகாப்பு உத்தரவாதம் இருக்கிறதா என்று?கடந்த ஒரு வருடத்தில் மட்டும், அங்குள்ள அரச படையும் அதன் கூலிப் பட்டாளங்களைச் சேர்ந்தவங்களும் எத்தனையெத்தனை மாணவர்களைச் சுட்டுத் தள்ளிவிட்டங்களென்று உங்களுக்குத் தெரியுமா?
எத்தனை அப்பாவி மாணவியரை மானபங்கப்படுத்தி இருக்கிறாங்கள் தெரியுமா?யுத்த நிறுத்தம் வந்தபின் சமாதானம் வந்து விட்டது, சுகவாழ்வு கிடைத்து விட்டது, பிரச்சனை தீர்ந்து என்று நீங்களும் மற்றவர்கள் மாதிரி உவ்விடமிருந்து நம்பி நம்பி ஏமாறி இருக்க மாடீர்கள் என்றே நினைக்கிறேன். யுத்த நிறுத்தத்தைக் கண்காணிக்க வந்தவர்களே தாக்கப்பட்டதும், தாங்கள், யுத்தத்தைத் தான் கண்காணிப்பதாக அவர்களே அறிக்கை விட்டதும் நீங்கள் அறிந்திருப்பீர்கள் தானே?

இதைவிட வேறென்ன வேண்டும் இங்கு இருந்த நிலை பற்றிக் கூற? ஆனால் தற்போது, சமரசம் பேசி தூது வந்து பேச்சுவார்த்தைக்கு இடைத்தரகராய் இருந்தவரே அண்மையில், எங்கள் தரப்பு, எமது மக்களின் சுயபங்களிப்பிலும் எதிரியிடமிருந்து கைப்பற்றியும் சிறுகச் சிறுகச் சேகரித்த ஆயுதங்களைக் கீழே வைக்க வேண்டும் என்று கூறி அறிக்கை விட்டதை அறிந்த போது எமக்கு அழுவதா சிரிப்பதா என்றே தெரியவில்லை.யுத்த நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்தாகி இரண்டாயிரத்து ஐந்நூற்றுக்குச் சற்று மேற்பட்ட இன்றளவுமான நாட்களுக்குள் இந்த சர்வதேசத்தின் உண்மை முகம் எது என்பதும் உள்நோக்கம் என்னவென்பதும் எமக்குப் புரியவில்லை என்று இனியும் நாங்கள் கூற முடியுமா?

அப்படி நினைத்து, நம்மை நாமே, ஏமாற்றலாமா? உங்கள் தலைமுறைத் தலைவர்கள் போல நம் தலைமுறைத் தலைமையுமில்லை; உங்கள் தலைமுறை போல ஏமாற்றுப்பட நாங்களும் தாயாராக இல்லை. ஏனெனில்,பெரும்பாலும் பெற்றோர்கள் விடும் பிழைகளால் பாதிக்கப்படுவது அவர்களது பிள்ளைகளைவிடப் பேரப் பிள்ளைகளே என்பது எமது வாழ்வின் பெரும் பட்டறிவு.

அம்மாவுக்கு ஏனோ நாம் கடைசியாகக் கட்டி வாழ்ந்த நம் சொந்த வீட்டை விட்டு வெளியேறும் வரை யதார்த்தம் புரியவில்லை…. இலையில்லை, புரியாத மாதிரி இருந்திருக்கிறா என்று தான் சொல்ல வேண்டும். அவ கூட இருந்ததால், என்னால் எங்களுடைய தாய் நாட்டுக்குச் சின்ன சின்னப் பங்களிப்புத்தான் செய்ய முடிந்தது.

பதுங்கு குழி வெட்டுவது, உடுப்புச் சேர்ப்பது, இளநீர் சேர்ப்பது ‘கிபிர்’ தாக்குதல்களில் காயப்பட்டவர்களுக்கு முதலுதவி செய்வது, குருதித் தானம் வழங்குவது போன்றவற்றை மட்டும் தான் இதுவரை நான் செய்து இருக்கிறேன்.

அதுவும் அம்மாவிடம் ‘நல்லா வாங்கிக் கட்டிக் கொண்டு தான்’!இப்படியான வேலைகளைப் பொதுவாக எல்லாருமே செய்யலாம். ஆனால், எல்லையில் நிற்க, எல்லாராலும் முடியாது. என்னைப் போல இள வயது ஆட்கள் தான் இப்போ அதற்கு அவசியம் தேவை.
இந்த நிலை என்று மாறுமோ எனக்குத் தெரியாது. ஆனால், நிச்சயம் மாறும். அதற்குரிய காலம் கனிந்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும்.அவர்களுக்குள்ளேயே குத்து வெட்டுகளும் குளறுபடிகளுமாய் அசுரரின் ஆட்சி விரைவில் ஆட்டம் காணப்போகிறது.

பேரினவாதப் பூதம் கக்குகின்ற தீக்கங்குகள் அதனைச் சுற்றியுள்ள கூட்டத்தைப் பொசுக்கத்தான் போகிறது. புலம்பெயர்ந்து வாழும் நம் மக்களினதும் தமிழக மக்களினதும் எழுச்சி மிகு செயற்பாடுகள் நமது விடுதலைக்கு கட்டியம் கூறி நிற்கின்றன.

இனியென்ன, சந்தேகமே வேண்டாம்… அஞ்சி அஞ்சி… அடங்கி ஒடுங்கி நாம் ஊரூராக ஓடத் தேவை இல்லை. எதிரிக்குப் பயந்து குலை நடுங்கின காலம், காலமாகி விட்டது!நம் சேனைகள் சாணக்கியத்துடன் சாண் இறங்குவது, முழம் முழமாய் முன்னேறி எம் மண்ணை முழுமையாய் மீட்டுச் சாதனை படைக்கவே!!

சுற்றிவளைப்புகளும் தேடுதல்களும் சித்திரவதைகளும் வன்புணர்வுகளும் அநியாயக் கருவழிப்புகளும் காணாமற் போகச் செய்தல்களும் கடத்தல்களும் கொள்ளையடிப்புகளும் கொத்துக் குண்டுவீச்சுத் தாக்குதல்களும், பதுங்கு குழி வாழ்க்கையும் இனி, நமக்கில்லை!

பட்டினி போட்டு, பாதைகளை மூடி, நோய் தீர்க்கும் மருந்துகளைத் தடை செய்து, மருத்துவ வசதிகளை நிறுத்தி, குண்டுகளை மழையாய்ப் பொழிந்தும் கிளைமோர்த் தாக்குதலால் அப்பாவிகளைக் கொன்றழித்தும் நம் சுதந்திர தாகத்தை நசுக்கிட எண்ணுபவனுக்கு, நாம் எல்லோரும் இறுதிப் பதிலடியைப் பரிசாகக் கொடுக்கின்ற காலம் கனிந்து நெருங்கி வந்து விட்டது.

அதற்காக, ஆயிரமாயிரமாய்த் தம்முயிர் ஈய்ந்த மாவீரர் கனவை நனவாக்கிடவும் உலகெங்கும் அகதியாய் அலைந்து வாழுகின்ற நம் தமிழர் மானத்துடன் தலை நிமிர்ந்து எங்களுடைய சொந்த மண்ணில் வாழ்வதற்காகவும் நானும் என்னை எதிர்வரும் “மகளிர் எழுச்சி நாள்” முதல் முழுமையாய் - முழு நேரப் போராளியாய் மண் மீட்புப் போரிலே இணைத்துக் கொள்ளப் போகிறேன்
இதுவரை நான் முழு நேரப் பங்காளியாவதற்கு இருந்த ஒரே தடை எனது வயது. அதுவும் அன்றுடன் தீர்வது உங்களுக்குப் புரியும் தானே? நீங்களும் அண்ணாவும் தாயகம் நீங்கி அகதியாகப் புகலிடம் நாடிப் பனி விழும் தேசமொன்றுக்குச் சென்று ஏறத்தாழ எட்டாண்டுகள் ஆகி இருந்தாலும், இவ்வளவு நாளும் இங்கு நடந்த சம்பவங்கள், சண்டைகள், இடப்பெயர்வுகள், தாக்குதல்கள், மரணங்கள், வீரச்சாவுகள் எல்லாம் பள்ளி மாணவியாய் இருந்த என்னை எத்தனை தூரம் பாதித்து இருக்கும் என்று உங்களுக்கும் நன்றாக விளங்கும் தானே?

என்னைப் பொருத்தவரையில், எமது பெருமதிப்புக்குரிய தேசியத் தலைவர் அவர்கள், ஏறத்தாழப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன் தீர்க்கதரிசனத்துடன் கூறியபடி எமது விடுதலைப் போராட்டத்திற்குக் கல்வி கவசமாகவும் எமது கல்விக்கு எமது போராட்டம் காப்பரணாயும் இருத்தல் இன்றைய நெருக்கடியான சூழ்நிலையில் அத்தியாவசியம் ஆகும். அதற்கு, ஆகக் குறைந்தது, வீட்டிற்கு ஒருவராவது காலமிட்ட கட்டளைப்படிப் போராடினாற்தான் எமது மண் விரைவில் மீட்கப்பட்டு மாணவர் சுமுகமாகக் கற்கக் கூடிய நிலைமை நிரந்தரமாக்கப்படும்.

அப்பா! இப்போதெல்லாம் எமது கிராமத்தவரில், அயல் வீடுகளில், வீட்டுக்கு இரண்டு, மூன்றென மாவீரரும் போராளிகளும் உள்ள குடும்பங்களும் உள்ள நிலையில், வீட்டுக்கு ஒரே பிள்ளையாய் இருந்தும் போராளியாகி உள்ளவர் மத்தியில் அண்ணா இங்கிருந்து செய்யாத பணியை, நானாவது நிறைவேற்றாமல் இருக்கலாமா?

அப்படிச் செய்தால், இந்த மண் எம்மை மன்னிக்குமா? சுதந்திர தமிழீழத்தில் எமது குடும்பமும் எதிர்கால சந்ததியும் தலை நிமிர்ந்து வாழுமா? நீங்களும் அண்ணாவும் உவ்விடமிருந்து எங்கள் தலைவர், கடந்த சில ஆண்டுகளாகத் தனது மாவீரர் நாள் உரைகளில் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டபடி, வழமை போல அல்ல, அதற்கும் மேலாகவும் விரைவாகவும் உங்களுடைய பங்களிப்பை, எந்தெந்த வடிவிலெல்லாம் முடியுமோ அந்தந்த வடிவங்களிலெல்லாம் இயன்றளவு தொடர்ந்து வழங்குங்கோ.

எங்கள் சோகங்களைச் சுகங்களாக்கவும் வலிகளுக்கு நிரந்தர நிவாரணம் தேடவும் ஏமாற்றங்களை முன்னேற்றங்களாக மாற்றவும் உங்களால் முடிந்ததை அவசியமாகவும் அவசரமாகவும் அவதானமாகவும் செய்யுங்கோ
உங்கிருக்கும் எங்கள் உறவினர் மற்றும் உங்கள் பல்லின நண்பர்களுக்கும் இன்றுள்ள நெருக்கடியான போர்ச் சூழ்நிலையில் நம் தேசத்துக்கு உதவி புரியவேண்டியதன் அவசியத்தை எடுத்துக் கூறி, இங்கு நிகழும் தமிழினப் படுகொலையை நிறுத்த உடன் பங்களிக்குமாறு வேண்டிக் கேட்டு ஊக்கமளியுங்கோ.

இந்த உலகத்திற்கு சிறிலங்கா அரசு கூறி வருவது போல நாம் பயங்கரவாதிகள் அல்லர் என்றும் எமது போராளிகளும் தமிழர்களும் வேறு வேறு அல்லர் என்றும் நாம், கால் நூற்றாண்டுக்கும் மேலாக இணைந்து நடாத்துவது அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களின் சுதந்திரத்துக்கான விடுதலைப் போராட்டம் என்றும் அவர்களுக்கு ஓயாது எடுத்துக் கூறுங்கோ.கவனயீர்ப்புப் போராட்டங்களுக்கு அவர்களையும் உங்களுடன் கூட்டிச் செல்லுங்கோ.

அப்போதுதான் எமது போராட்டத்தின் தாற்பரியமும் உண்மை நிலையும் பாராமுகமாக இருக்கும் சர்வதேசங்களுக்கும் பாரபட்சமாக நடந்து கொள்ளும் ஐக்கியநாடுகள் சபையினர்க்கும் மனிதவுரிமைகளுக்காகப் போராட்டம் நடாத்தும் அமைப்பினர்க்கும் தெளிவாகப் புரியும்.அப்பா, அண்ணா! என்றாவது ஒருநாள் எமக்கும் சந்திக்க நிச்சயம் வாய்ப்பு வரும். அது - சுதந்திர தமிழீழத்திலேயா அல்லது அதற்கு முன்னரேயா என்று நீங்களும் உங்கிருக்கும் எம்மவர்களும் தான் தீர்மானிக்க வேண்டும் .

இப்போதும் அம்மா, உங்களையும், அண்ணா, அண்ணியையும், நிழற்படத்தில் மட்டும் பார்த்துள்ள தன் பேரப்பிள்ளைகளையும் எப்போ நேரில் பார்ப்போம் என்று பெரும் ஆவலில் இருக்கிறா. எமக்கருகில் விளையாடித் திரியும் தன் பேரக் குழந்தைகளின் வயதுப் பிஞ்சுப் பாலகர் எதிரியின் தாக்குதல்களில் கண் முன்னே கொல்லப்படும் போதும் காயப்பட்டு குருதி வெள்ளத்தில் மிதக்கும் போதும் அவ படும் பாட்டை எழுத்தில் விவரிக்க என்னால் முடியாது
அவவுக்கு நான் எது பற்றிச் சொன்னாலும் முன்பு விளங்குவதில்லை. ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன் கொடியவன் கோத்தபாய தன் படையினரை உச்சாகப்படுத்தும் வகையில் ஆற்றிய உரையில் “இனிமேல் முல்லைத்தீவில் அகப்படும் பெண்கள் அனைவரும் படையினருக்கு விருந்தாகட்டும்; அங்கு அகப்படும் ஆண்களின் இரத்தத்தினால் இந்து சமுத்திரம் சிவப்பாகட்டும்” என்று கூறியது அவவுக்கு எல்லாவற்றையும் நன்கு தெளிவாக்கி விட்டது.

அப்பா, எங்கட முன் வீட்டுக் கற்பகம் மாமி, பக்கத்து வளவு அருமை மாமா, சந்தைக்குப் பக்கத்து வீட்டு சுந்தரம் சித்தப்பாக் குடும்பம், திருநாவுக்கரசுப் பெரியப்பா குடும்பம் என இப்போ எத்தனையோ குடும்பத்தினர் - முழுமையான பங்காளிகள். தரைப்புலி, கடற்புலி, வான்புலி, கரும்புலி என்று சிறப்புப் படையணிகளுடன் வளர்ந்து பெருவிருட்சமாகியுள்ள எமதியக்கம் தற்போது மக்கள் படை, எல்லைப் படை, மாணவர் படை என்றும் கிளை பரப்பி வியாபித்துள்ளது உங்களுக்கும் தெரியுமென என நம்புகிறேன்.

எனக்கும் மனச்சாட்சி இருக்குத் தானே? நானும் உணர்வுள்ள ஒரு சாதாரண மனிதப் பிறப்புத் தானே? தன் மானமும் இனமானமும் காக்க வேண்டியது எனதும் கடமை தானே? தமிழீழ அன்னை மண் இதனைத்தானே எங்களிடம் எதிர்பார்க்கிறது?முதல் மாவீரன் சங்கர் அண்ணா, தியாக தீபம் திலீபன் அண்ணா, முதல் பெண்புலி மாலதி அக்கா, வான் கரும்புலிகள் ரூபன் அண்ணா, சிரித்திரன் அண்ணா உட்பட ஏறத்தாழ இருபத்து நான்காயிரம் மாவீரரும் ஆயிரமாயிரம் போராளிகளும் எமதருமைத் தேசியத் தலைவரும் இத்தனை இலட்சம் மக்களுக்கும் எதனை எதிர்பர்த்து உள்ளார்களோ அதனை நிறைவேற்றுவது எனதும் கடைமை அல்லவா?
மேலும் அப்பா, அண்ணா, அண்ணி, மருமக்களுக்கு எனதன்பைத் தெரிவியுங்கோ.பேரப்பிள்ளைகளு??்கு தமிழை நன்கு கற்பியுங்கோ. அவர்களுக்கு எங்களுடைய வரலாற்றைச் சரியான முறையில் சொல்லிக் கொடுங்கோ. தேசப்பற்றோடு தமிழர்களாய்த் தமிழ் உணர்வுள்ளவர்களாய் வீரமும் மானமும் உள்ள மனிதர்களாய்த் தொப்பூழ்க்கொடி உறவுகளை மறவாதவர்களாய் வளரச் செய்யுங்கோ.

வேறென்ன அப்பா?

இதை எழுதத் தொடங்கும் நேரத்தில்தான் வான் புலிகளின் முதற் கரும்புலித் தாக்குதல் பற்றிய வெற்றிச் செய்தி புலிகளின் குரலினூடாக என் காதுகளில் வந்து வீழ்ந்தது. இப்போது எமக்கு அண்மையிலுள்ள மைதானத்தில் அந்தக் கரும்புலிகள் இருவரதும் நினைவாகவும் வேறும் சில மாவீரர் நினைவாகவும் வீரவணக்க நிகழ்வு தொடங்கி விட்டது. ‘இந்த மண் எங்களின் சொந்த மண்’ என்ற பாட்டுக் கேட்கிறது.

அம்மா உட்பட எல்லோரும் புறப்பட்டு விட்டார்கள். முடிந்தால், மீண்டும் இன்னுமொரு மடலில் சந்திப்போம்.

நன்றி.

“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”

இப்படிக்கு,

என்றும் உங்கள் அன்பு மறவாது
தேசம் விடுதலை காண உழைக்கின்ற

அன்பு மகள் தேவகி

Monday, February 23, 2009

"புரிந்து கொள்ளுங்கள் மக்கா"

"போராளிகளின் எதிர்பாளர்கள்" எனக் கூறும சில சிங்களவன் வால் பிடிக்கும் சிறு புத்திகாரர்கள் ஈன செய்கைகள் கருத்தில் கொண்டு உள்குத்தில் தமிழ் இன உணர்வை கையாண்டுள்ளதாக விளக்கம் அளித்த தமிழச்சிக்கு நன்றி ..

இப்படி ஒரு சலிப்பு நிலை இனி உண்மையில் வரும் முன்னர் பொய் உரைக்கும் சிங்கள அரசின் முகமுடியை கிழித்து போரை நிறுத்த தொடர்ந்து போராடுவோம் ..



தமிழச்சியின் விளக்கம் :
பேடி, பொறம்போக்கு, முட்டாள் - உள்குத்தில் தவறான புரிதல்!
http://tamizachi.com/index.php?page=echoarticle&rubrique=01&article=987
"முல்லைதீவு முற்றுகை. இன்னும் சில நாட்களில் புலிகளிடம் இருந்து இராணுவம் மீட்டுவிடும். பொது மக்களை கேடயமாக வைத்து யுத்தம் நடந்துக் கொண்டிருப்பதால் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் ´வியூகம்´ வகுத்து போராடிக் கொண்டிருக்கிறது இலங்கை இராணுவம்." சில வாரங்களாகவே பிரான்ஸ் நாட்டு தொலைக்காட்சியில் ஈழ யுத்தத்தை பற்றி நான்கு வரியில் இதையே சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இது ஒரு பக்கம் இருந்துவிட்டு போகட்டும். இதுவரை எந்த உயிர்சேதத்தையும் ஏற்படுத்தாத வண்ணம் யுத்தம் நடந்துக் கொண்டிருப்பதாக சொல்லிக் கொண்டு இருப்பதையும் விட்டுத் தொலைத்து .விடுவோம்.

பிரான்ஸில் வசிக்கும் புலம்பெயர்ந்த தமிழர்கள் ஏகப்பட்ட போராட்டங்களை நடத்திவிட்டார்கள். ஒன்று கூட ஊகடங்களில் வரவில்லை. ஒட்டுமொத்தமாக தீவிரவாதத்திற்கு ஆதரவாக பேசுவது கண்டனத்திற்கு உரியது என்று பிரான்ஸ் அரசாங்கம் சொல்கிறது. தமிழ்நாட்டிலேயே இப்படித்தானே சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். அதனால் இதையும் விட்டுத் தொலைத்து விடுவோம்.இப்போதைய புதிய பிரச்சனை லண்டனைச் சேர்ந்த முருகதாஸ் என்பவர் சுவீஸ்லாந்தில் இருக்கும் ´ஐநா சபை´ முன்பு ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக யுத்தத்தை நிறுத்தக்கோரி தீக்குளித்து இறந்ததற்கு பின் ஐரோப்பிய மேற்கத்திய மக்களிடம் வேறு கோணத்தில் பார்க்கப்படுகிறது. சில தற்கொலை முயற்சிகள் அதுவும் மனிதர்கள் தீப்பந்தங்களாக எரிந்து போவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை அவர்கள் அறிவு அப்படி. நம் நாட்டில் முத்துக்குமரனின் தீக்குளிப்பு மக்களிடம் ஆவேசத்தையும், அரசாங்கம் மீது அதிருப்தியை வெளிப்படுத்தும் நிகழ்ச்சியாகவும் முடிந்துவிட்டது. தமிழர்கள் என்றால் தீவிரவாதி; தீவிரவாதி என்றால் அவன் தமிழன். ஏன் இப்படி வெளி உலகத்திற்கு தெரிகிறார்கள்? மேற்கு பக்கங்களில் உளவியல் மூலமாக நிகழ்வுகள் பார்க்கப்படுகின்றன. ஒரு சாரர் உளவீயல் தாக்கத்தால் அந்த இளைஞன் தற்கொலை செய்திருக்க வேண்டும் என்றும்; மற்றொரு சாரர் புலி இயக்கத்தினரின் மூளைச்சலவையாக இருக்கக்கூடும் என்றும் அபிப்பிராயம் தெரிவிக்கிறார்கள். சூழல்களை திசை திருப்புவதற்காகவும், தங்களுக்கு ஆதரவான முறையில் திசைமாற்றம் செய்வதற்காகவும் எடுக்கப்படும் தந்திரமிக்க நடவடிக்கை என்று
குற்றம்சாட்டுகிறார்கள்?தமிழ் ஊடகங்களிலும், இணையத்தளங்களிலும் உலவும் யுத்தக்காட்சிகள் இளைஞர்கள், குழந்தைகள், பலவீனமாகவர்கள் பார்க்கும் போது உளவீயல் ரீதியாக மனஅழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். அதன் சலிப்பும், விரக்தியும் தற்கொலைவரை செல்கிறது. இதை புலிகள் ஓர் யுக்தியாகவே கடைப்பிடிக்கிறார்கள் என்று ஒரு பிரென்ஞ்ச் பெண் சொன்னாள். அவளுக்கு ஈழப்போராட்டத்தின் சதிகளைப் பற்றி என்ன தெரிந்துவிடக் கூடும்? அதிக பட்சம் தொலைக்காட்சியில் சொல்லப்படும் வாக்கியங்களிலும், ஊடகங்களில் வெளிவரும் செய்திகளிலும் அர்த்தம் கண்டுப்பிடிக்கும் புத்தசாலிகள் அவர்கள். திட்டமிட்டே திரிபுவாதங்களை இந்திய, இலங்கை அரசுக்கள் நடத்திக் கொண்டிருக்கின்றன. அதற்காகத்தானே புலிகளின் மக்கள் தொடர்புள்ள நிறுவனங்களை இழுத்து மூடவைத்தது. இருபக்க கருத்து வாதங்களையும் முன்வைக்காமல் ஒருதலைப்பட்சமான கருத்துக்களை மட்டும் வெளியிட்டுக் கொண்டிருந்தால் அவை எந்தவித்ததில் ஊடக நியதியாக இருக்க முடியும்? புலிகளின் மக்கள் தொடர்புகள் முடக்கப்பட்டதும் இப்படியாகத்தானே! வன்னியில் இருந்த வெளிநாட்டு உதவி அமைப்புகளை வெளியேற்றிவிட்டு இனப்படுகொலையை செய்துக் கொண்டிருக்கிறது "கூட்டாளி கூலிப்படைகள்" அதற்கு, "இராணுவம்" என்ற பெயர். இந்தியாவில் இருந்து "கூலிப்படைகள்" (இராணுவம்) போகிறது. சர்வதேசமும் இதை அங்கீகரித்துக் கொண்டிருக்கின்றது. ஈழத்தில் தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் என்ன நடந்துக் கொண்டிருக்கிறது என்றும் தெரியிவில்லை. இணையதளம் மூலமாக ஒரளவுக்கு நடக்கும் யுத்தத்தின் கொடுரங்களை புகைப்படங்களில் பார்க்க முடிகிறது. புலிகள் யுத்தத்தில் மக்களை கேடயமாக பயன்படுத்துவதாக பலமான குற்றச்சாட்டை வைத்து இலங்கை அரசு ´திரிபுவாதம்´ செய்ய முற்படுகிறது. அதை சர்வதேசத்திடம் எப்படி அம்பல்படுத்துவது? புலம்பெயர்ந்த ஈழ தமிழர்கள் பலவகைகளில் தங்களுடைய எதிர்ப்புக்களை அமைதியான முறைகளில் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அதை ஏன் "புலிகளுக்கு ஆதரவாக பேசுகிறார்கள்" என்று புரிந்து கொள்கிறார்கள். யுத்தத்தில் கேடயமாக பயன்படுத்தும் அப்பாவி தமிழர்களை காப்பாற்றுவதற்காக பதறிக் கொண்டு இருக்கிறார்கள் என்று ஏன் எடுத்துக் கொள்ள முடியவில்லை? ஏதாவது ஈழதமிழர்களுக்கு ஆதரவாக நம் கருத்துக்களை வைக்க முற்பட்டால், உனக்கும் ´மூளைச்சலவை´ செய்யப்பட்டிருக்கிறது. அதான் இப்படி பேசிக் கொண்டிருக்கிறாய் என்கிறார்கள் மூளையில்லாதவர்கள். மௌனமாகிப் போவதா? இணையத்தில் புலம்பி வைக்கலாம் என்றாலும், எவனோ புலிகளுக்கு ஆதரவாக எழுதிக் கொண்டிருக்கிறேன் என்று வைக்க வேண்டிய இடத்தில் வத்தி வைத்துவிட்டான் பண்ணாடை. மற்ற பதிவர்களைப் போல் நான் சாதாரண ஆளாக இருந்திருந்தால் என் எழுத்துக்கள் கண்காணிப்பிற்குள்ளாகி இருக்காது. பிரான்சில் அரசாங்கம் அனுமதி பெற்ற அமைப்பை வைத்துக் கொண்டிருப்பதால் ஒன்றும் புடுங்க முடியவில்லை. புலிகளுக்கு ஆதரவாக எதுவும் செய்யக் கூடாது என்றால் ´ராசபட்சா´வுக்கு எதிராக எதையாவது கிறுக்கியாவது வைப்போம் என்று உள்குத்து வைத்து கிறுக்கினால் அதுவும் வம்பாக போய்விட்டது. என் வாசகர் வாசுக்கு மனத்தாங்கல். பொறுப்புள்ள எழுத்தாளரான நீங்கள் இப்படியொரு கவிதையை எழுதலாமா? என்று குமுறலோடு மின்னஞ்சல் செய்திருந்தார்.

தப்பாக புரிந்து கொண்டீர்களே, அதில் இருக்கும் உள்குத்து புரியவில்லையா? என்று தன்னிலை விளக்கம் கொடுத்திருந்தேன். இருப்பினும் அவர் அந்த கிறுக்கலை "ஹைக்கூ" வாக்கி விட்டார். (எப்படியெல்லாம் யோசிக்கறாங்கப்பா) அதையாவது ஒழுங்காக போட்டிருக்கலாம். தலைப்பை நீக்கிவிட்டார். தலைப்பில் தான் ஒட்டுமொத்த உள்குத்தும் இருந்தது. ´வசந்தசேனன்´ இணையத்திற்கு புதியவர் போல... இணைய உள்குத்துக்களை புரிந்து கொள்ள முடியவில்லை. "ஐயா ராசா, சில நேரங்களில் நேரடியான வார்ததைகளை விட உள்குத்துக்கு வலிமை அதிகம். நமக்கும் பாதுகாப்பானது." இதுக்கும் மேலே ஏதாவது நான் எழுத ஆரம்பித்தால் இதுவே என்னுடைய வாக்குமூலமாக போய்விடும் என்பதால் இத்துடன் முடித்துக் கொள்கிறேன்.

"புரிந்து கொள்ளுங்கள் மக்கா"

தமிழச்சி
22/02/2009

[ அந்த 'சலிப்பு' தான் எனக்கு இன்னும் புரியவில்லை மற்றபடி அனைத்து புரிந்து விட்டது ]

சிங்கள வால் பிடிக்கும் கொவனாண்டிகளே !!


போராளிகள் பிறப்பதில்லை .. உருவாக்கபடுகிறார்கள் , ஆயுதங்கள் தூக்க படுவதில்லை திணிக்க படுகின்றன்..


இந்தியா இராணுவத்தில் பொறியாளர் பிரிவில் சேர்வதை குறிக்கோளாக கொண்டு ஒரு காலம் நான் N.C.C,N.S.S என அதி தீவிரமாக பயிற்சி எடுத்து இராணுவம் மற்றும் விமான படை தான் எனது கனவு தேசமாக வாழ்ந்தது உண்டு .. இந்த அரசியல்வாதிகள் சவபெட்டி ஊழல் செய்த பொது ஒட்டு மொத்த கனவை தூக்கி வைத்து விட்டு வேறு வேலை தேடி கொள்ள முடிவெடுத்தேன் .. நான் கனவு கண்ட இந்த இந்திய இராணுவத்தின் வளாகத்தில் நின்று இந்தியா ராணுவத்தின் இலங்கைக்கு கொடுக்கும் திருட்டு உதவிக்கு எதிராக ராணுவ வீரர்களை பார்த்து ஆவேஷமாக கோஷங்கள் எழுப்பிய பொது ஒரு சில ராணுவ வீரர்கள் தலை குனிந்து நின்றதை பார்க்கும் பொது என் கண்கள் கலங்கின ..

அரசியல் நாதாரிகள் தங்கள் சொந்த ஆசை பாசைகளுக்கு ஆடும் அரசியல் பகடை ஆட்டங்களுக்கு , கீழ்த்தரமான இந்திய அரசின் வெளியுறவு கொள்கைக்கு அந்த குட்டையன் முகர்ஜி தமிழ் இன மக்களுக்கு செய்த துரோகத்துக்கு என் தாய் மண்ணை காக்கும் ராணுவ வீரர்கள் தாய் மண்ணிலேயே சகோதரர்களால் அவமானபடுதப்பட்டு தலை குனியும் நிலை .. அரசியல் வாதிகளே நீங்கள் போபர்ஸ் ஊழலையும், ச்பெக்ட்ரும் ஊழலையும் மறைப்பதற்கு எங்கள் தமிழ் மக்களை இன அழிப்பை பகடை காய் ஆக்காதீர்கள் ..

எனக்காக போராட வேண்டிய இந்த அரசு ,
நான் வாக்களித்த,வரியளித்த இந்த அரசு இன்று கை கட்டி நிற்கிறது .. அங்கு அழிவது என் சகோதர இனம் ..

இன்று நாங்கள் அஹிம்சை வழியில் போராடி பார்க்கிறோம், கதறுகிறோம்,மன்றாடுகிறோம், எங்களை தீயிட்டு வேண்டுகிறோம் .. இதற்கும் செவி சாய்க்காமல் நீ உன் சுய லாபத்திற்காக செவிட்டு முண்டமாய் நிற்கும் பொது உன் செவிபரையை கிழிப்பது எங்கள் கடமை .. எங்கள் கையில் ஆயுதங்களை திணிக்காதே ...



'இனப்படுகொலைக்கு எதிரான இந்தியர்கள்' - மக்கள் பேரணி

http://indiansagainstgenocide.org/
இனப்படுகொலைக்கு எதிரான இந்தியர்கள் அமைப்பு சென்னையில் இன்று நடத்திய ஒரு கவன ஈர்ப்பு பேரணி ஈழ தமிழ்ர்களின் வலியையும் , விடுதலை வீரர்களின் வீரத்தையும் ஒருங்கே இணைத்து சிறப்பாக நடந்தது இதில் சில வட இந்தியர்களும் கலந்து ஆதரவு கோஷம் எழுப்பியது கவனிக்கத்தக்கது ..

இந்த பேரணியை ஏற்பாடு செய்த "இன படுகொலைக்கு எதிரான இந்தியர்" எனும் தகவல் தொழில்நுட்ப வல்லுனர்கள், மாணவர்கள் , வாலிபர்களால் நடத்தப்படும் அமைப்புக்கும் பெரும் நன்றியை சொல்ல கடமைபடுளோம்

மற்றும் சிறப்புரை ஆற்றிய ஜகத் கஸ்பர் , கிறிஸ்தவ மிசினரிகளின் பங்கு தந்தைகள், சைவ சமய மடாதிபதிகள், வள்ளலார் சபை , வாழும் கலை உறுப்பினர்கள் என பலர் இதன் பின்னாணியில் இருந்து பெரிய அளவில் ஒரு கவன ஈர்ப்பு நிகழ்வை நடத்தியுள்ளார்கள் எனில் மிகையாகாது ..

ஆனால் சில நம்பிக்கைகளையும் கூடவே சிறிது சந்தேகங்களையும் இந்த " இன அழிப்புக்கு எதிரான இந்தியர்கள் " அமைப்பு விட்டு சென்றுள்ளது ..

"பொது மக்களால் நடத்தப்படும் ஒரு அமைதி பேரணி " என்ற விளம்பரத்துடன் வந்த அழைப்பை ஏற்று பங்கு கொள்ள நண்பர்கள் சகிதம் சென்றா போது அங்கு சென்னை சங்கமம் புகழ் "ஜகத் கஸ்பர் ராஜ்" தமிழின துரோகி அரசாங்கத்தின் கரிசனம் உள்ள இவர் மைக்கை பிடித்து பேசிய போது இங்கேயும் தமிழின துரோகியின் நட்பு கரங்கள் வந்து விட்டார்களா என ஒரு கணம் விக்கித்து போனேன் ..
இந்த பேரணியின் நிறைகள் :
* பெரும் திரளான பெண்கள் , குடும்ப பெண்கள், குழந்தைகள் , பள்ளி குழந்தைகள் என பலரும் கலந்து கொண்டது ஒரு நல்ல பெரும்
மாற்றம்

** கிறிஸ்தவ ஆலயங்களில் இருந்து திரளான மக்கள் வந்து இருந்தனர்..மற்றும் சில திரளான மகளீர் அமைப்புகள் வந்து இருந்தான ..

**பள்ளி சீருடை அணிந்த சிறு குழந்தைகள் கைகளில் பதாகைகளை ஏந்தி இந்திய அரசே இனபடுகொலையை தடுத்து நிறுத்து என்று அந்த பிஞ்சு குரல்களில் கூறியா போது இந்த சிறு பிள்ளைகளை கூட வீதியில் இறங்கி போராட வைத்திருக்கும் இந்த தமிழின துரோகி,பகல் கொள்ளைக்காரன் , குட்ட முண்டம் முகர்ஜி மற்றும் காங்கிரஸ் கொல்லைகாரர்களை நினைத்து மிகவும் வருத்தமாக இருந்தது ..

** வடலூர் வள்ளலார் சபையை சேர்ந்த முதியவர்கள் வந்தது சிறப்பு மற்றும் திருநங்கையர் சிலர் வந்து இருந்தனர் .. திரளான வலைப்பதிவர்கள், இணைய நண்பர்கள் வந்து இருந்ததை காண முடிந்தது.. எதிர்பார்த்ததை விட கூட்டம் அதிகம் தான் ..
**கல்லூரி மாணவர்கள் பலர் வந்து இருந்தனர்

இந்த பேரணியின் குறைகள் :

* கடைசி நேரத்தில் மெரீனா கடற்கரை சாலை வழியாக வந்து காந்தி சிலையை அடையும் என சொல்லப்பட்ட பேரணி இராணுவ வளாகம், பொருட்காட்சி சுற்றி தந்தை பெரியார் சிலையை அடையும் வகையில் மார்ரிம் அமைக்கப்பட்டுள்ளது .. இதற்கான காரணத்தி ஜகத் கஸ்பர் சொல்லவில்லை .. கவால் துறை எனும் ஏவல் துறை அனுமதி கொடுக்கவில்லையா ? விடுமுறை நாளன்று பெரும் திரளான மக்கள் கடற்கரைக்கு வந்து உள்ள போது அந்த வழியே இப்படி ஒரு பெரும் பேரணி மகலீர்களையும்,வாலிபர்கலயயும் வைத்து சென்றால் அது மக்களிடையே ஒரு பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்திவிடும் என ஆள் நடமாட்டம் குறைவாக இருக்கும் வழியில் இறுதி நேரத்தில் பேரணி மாற்றி அமைக்கப்பட்டதா ? இதற்கு பதில் எதுவும் தரவில்லை ? ஏன் தமிழின துரோகியின் சர்வாதிகார தமிழக அரசை தரும் இடைஞ்சலை வெளியே சொல்ல கூடாது என்பதற்கா ?

** இந்தியா அரசை நிர்பந்தம் செய்ய சொல்லி இயற்றப்பட்ட தீர்மானங்கள் ஒரு வரி கூட ஏன் தமிழாக மக்கள் ஓட்டை வாங்கி கொண்டு பாசை துரோகம் செய்து கபட நாடகம் ஆடும் தமிழாக அரசை கண்டிக்க வில்லை ? முதலில் தமிழக அரசை கண்டித்து விட்டு தானே இந்திய அரசை கண்டிக்க வேண்டும் .. நாங்கள் கடந்த நாடளுமன்ரா தேர்தலுக்கு வாகளித்து துரோகியின் கட்சிக்கு தானே ? எங்கள் ஓட்டை கொண்டு பாய் காங்கிரஸ்காரனுக்கு அடகு வைச்ச மகா பாவி தானே இந்த தமிழின துரோகி

பேரணியின் சிறப்பம்சங்கள் :
** அமிதிக்கு குந்தகம் விளைவிக்கும் கோஷங்கள் எழுப்ப கூடாது என்றாலும் , பெரும் திரளான போலீசார் குவிக்க பட்டு இருந்தாலும் ப்பீ சென்ற மாணவர் படைகளும், சில தகவல் தொழினுட்ப வலோனர்களும் , வார்த்தைகளில் மன்மோகன், சோனியா,முகர்ஜி,சிவசங்கரமேனன், சு.சாமி , காங்கிரஸ் ஒழிக என கோஷங்கள் எழுப்பி வருத்து எடுத்தனர்
** இராணுவ வளாகத்தின் முகப்பை கடக்கும் போது பெரும் திரளான போலீசார் கையில் தடியுடன், இராணுவ வீரர்கள் சிலரும் பாதுகாப்பு நின்று இருந்தனர் .. அப்போது உணர்ச்சி போங்க வாலிபர் படை இந்தியா இராணுவமே வந்தாலும் எதனை ஆயுதங்கள் ஏந்தி வந்தாலும் தமிழார் ஒரு போதும் பயந்ததில்லை என்பதை பறை சாற்றுவது போல் இராணுவ வீரகளை பார்த்து "இந்திய இராணுவ நாய்களே மண்ணை விட்டு வெளியேறு " எனவும் "கூட்டி கொடுக்கும் இந்தியா இராணுவமே ராடாரை , துருப்புகளை திரும்ப பெறு என்று வீர முழக்கம் இட்ட போது " இங்கு நின்ற் இராணுவ வீரர்கள் ஒரு சிலர் மவுனமாக தலை குனிந்து நின்றா காட்சி மனதை நெருடியது.. இந்திய அரசியல் துட்டு பொருக்கி தலைவர்கள் செய்யும் செப்படி வித்தைகளுக்கு , அவர்கள் கூட்டி கொடுக்கும் வெளியுறவு கொள்கைகளுக்கு , எமது தாய் மண்ணின் இராணுவ வீரர்கள் சொந்த மண்ணிலே சகோதரர்காளால் அவமானப்பட்டு நிற்பதை பார்க்கும் போது சிறிது கலக்கமாக இருந்தது ..
** மிக முக்கியமான சிறப்பம்சம் என என்றால் "கடவுள் இல்லை, இல்லவே இல்லை " எனும் பகுத்தறிவு பாசறையை சேர்ந்த அறிவுமதி, சு.ப.வீரபாண்டியன் இன்னும் சில பகுத்தறிவு இயக்கங்கள் மற்றும் இந்து சமய மடாதிபதிகள் , கிறிஸ்தவ, பவுத்த , இஸ்லாம் சமய பெரியோர்கள் என அனைவரும் ஒரே தலத்தில் இருந்து "இன படுகொலைக்கு எதிராக எழுப்பிய குரல் " ஒரு பெரிய சமூதாய கருத்தியால் மாற்றத்தை கொண்டு வந்து அனைவரும் இலங்கை இன பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு உடனே காணப்பட்டு அங்கு அப்பாவிகள் கொல்லப்படுவது உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என நினைப்பது அளப்பரியது

**ஏழு தீர்மானங்கள் நிரவேர்றப்பட்டன் (இந்திய , தமிழக அரசுகளுக்கு போய் சேருமா ? ) பேரணியின் இறுதியில் இன்று கலந்து கொண்டார்கள் அனைவரும் மீண்டும் ஒரு பேரணி இனி நடத்துவதற்கு வாய்ப்புகள் அதிகம் அதற்கு கண்டிப்பாக வருவதற்கு உறுதிமொழி தருமாறு பெறப்பட்டது ..


பேரணியில் புதிதாகவும் நம்பத்தகுந்த ஒரு செய்தி கிடைத்தது அது என்ன என்றால் இலங்கை அரசு கடந்து ஒரு சில வாரங்களாக போராளிகள் வசம் இருக்கும் இடங்களிலும் மற்றும் அதனை ஒட்டிய பாதுகாப்பு வளைய பகுதிகளிலும் சுமார் எழுபதி ஆயிரம் பேர் தான் இருக்கிறார்கள் என ஒரு பொய் பிரசாரத்தை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது .. இதன் காரணம் என்ன என்றால் ? இலங்கை அரசு இந்த போரை ஒட்டு மொத்தமாக புலிகள் வசம் இருஉகும் இடத்தை குண்டுகளால் சகல திசைகளிளுக் இருந்து சல்லடையாக அபாய குண்டுகளை தொடர்ச்சியாக பல தினங்கள் இடைவிடாது போட்டு அந்த பகுதியில் இருக்கும் சுமார் ஒரு இலட்சம் அப்பாவி தமிழ்ர்களை போராளிகளோடு சேர்த்து கூண்டோடு கைலாசம் அனுப்ப முடிவு செய்துள்ளது .. உலக வரலாற்றில் இது வரை ஹிட்லரின் நாசி படைகள் கூட செய்யா துணியாத ஒரு கொடும் இன படுகலையை இன்னும் நான்கு வாரங்களில் அதாவது சிங்கள புத்தாண்டு பிறக்கும் முன்பாக செய்து விட முடிவு செய்து அதற்கு ஆயத்த பணிகளில் ஈடுபட்டுள்ளது .... இதற்க்கு அச்சாரம் இடும் விதமாக தான் கடந்த வாரம் கோதபாய ராஜபக்ஷே இலங்கை இராணுவ வீரர்கள் மத்தியில் உரை ஆற்றும் போது
" தமிழ் பெண்கள் இலங்கை இராணுவ வீரர்களுக்கு விருந்தாகட்டும்இந்த தமிழ் இன மக்களை நாம் கொன்று குவிக்கும் குருதியில் இந்த இந்து மகா சமுத்திரம் சிவப்பு நிறமாகட்டும் " என கொக்கரித்து உள்ளான்...

ஆகவே அடுத்த நான்கு வாரங்கள் இலங்கை யுத்த வரலாற்றில் மிக கொடுமையான தினங்களாக அமையா போகிறது .. இவர்கள் உத்தேசித்துள்ள ஒரு இலட்சம் அப்பாவி தமிழ்ர்கள் படுகொலையை உலகத்தின் கண்ணில் இருந்து மறைபதற்காக தான் இன்று வன்னியில் போர் நடைபெறும் பகுதிகளில் ஆட்களின் கனக்கை குறைத்து காட்டி உள்ளது

சில சந்தேகங்கள் !

ஜகத் கஸ்பாரின் தலையீட்டை பற்றி அந்த அமைப்பை சார்ந்த சிலரிடம் கேட்டேன் .. மாணவர்களால், பொது மக்களால் நடத்தப்படும் பேரணி என சொல்லிவிட்டு எங்கு ஜகத் கஸ்பர் பேசுகிறார் என்ன என்றேன் ?

அதற்கு அவர்கள் சில தலையீடுகளை தவிர்க்க இயலவில்லை எனவும் .. குறிப்பாக காவல் துறைஇடம் போராட்ட அனுமதி , இவர்கள் உத்தேசித்துள்ள ஐ.நா. பாதுகாப்பு சபையில் இலங்கைக்கு எதிராக தீர்மான கொண்டு வர கோரிக்கை , உலக போர் குற்ற நீதிமன்றாதில் இலங்கைக்கு எதிரான் வழக்கு இன்ன பிற செய்கைகளுக்கு ஜகத் கஸ்பர் தலையீடு தேவை இருக்கிறது என்றும் ஆயினும் அவர் தலையீட்டையும் மீறி அது மாணவர்கால் , தகவல் தோழி நுட்ப வல்லோனர்காளால் நடத்தப்படும் அமைப்பு தான் தயக்கமின்றி பங்கு கொள்ளுங்கள் என்றனர் .. இதில் எந்த அளவு உண்மை என்பது ஆண்டவனுக்கு தான் வெள்ளிச்சம் ..

ஜகத் கஸ்பர் இந்த சந்தேகத்தை வலுவாக களைவதை போல தான் உரை ஆற்றினார் .. இது முற்றிலும் மனிதாபிமாந அடிப்படையில் அமைத்த அரசியல் சார்பிலாத இயக்கம் என்று .. இருந்தாலும் எனக்கும் இந்த அமைப்பு தமிழின துரோகியின் திரை மறைவு வேலையாள் தகவல் தொழினுட்ப வலூனர்களின் எழுச்சியை சிதறடிக்க செய்ய கூடாது என்பது தான் விருப்பம் .. அதனால் தான் முதலில் நான் சில சந்தேகங்களையும் இட்டு சென்றுள்ளது என பதிந்துள்ளேன் .இதை ஒரு மனிதாபிமான அடிப்படையில் உள்ள அமைப்பாக கொண்டு செல்வது வரை ஒத்து கொள்ளலாம் .

Sunday, February 22, 2009

சலிப்பு தட்டிய தமிழச்சிக்கு கடும் கண்டனம் !!

அடச்சே!சலிப்பாய் இருக்கிறது...
தெடர்ச்சியான யுத்தம்...!
சொச்சம் சொச்சமாக...ஒழித்துக் கொண்டிருக்கிறான்...
முட்டாள் ராஜபட்சே...!
மொத்தமாக ஒழித்துவிட்டு...
ஆகவேண்டிய... வேளையைப் பாரடா...
பொறம்போக்கு...!

தினசரி செய்திகளை பார்த்து...
மீண்டும் சலிப்பாய் நான்.


பதிவர் தமிழச்சி எழுதிய இந்த ஹைக்கூ தமிழ் இனம் தினம் தினம் செத்து மடிவதை கண்டு வேதனையும், வெறுப்பும், போராட்டமும், ஆத்திரமும் தமிழ் மக்கள் கொண்டு பிரவாகமாய் வெடித்து வரும் வேளையில் இந்த இனபடுகொலை செய்திகளை கண்டு அவர்களுக்கு சலிப்பு தட்டிவிட்டதாய் பதிந்து உள்ளது .. மிகவும் நெருடலான ஒன்று .. இந்த சமயத்தில் இது போன்ற பதிபர்கள் வெளிப்படையாக சலிப்பு தன்மையை வெளிப்படுத்துவது புலம்பெயர் தமிழ்ர்களையும், அங்கே முப்பது ஆண்டு காலமாக போராடி வரும் தமிழ் சமூகங்களையும் உலாவியால் ரீதியாக பலவீன படுத்தாதா ?

இத்தனை விட ராஜபக்ஷே ஒட்டு மொத்தமாக தமிழ் இனத்தை கொன்று விட்டான் எனில் அது தகும் என்பது போல் பதிந்து உள்ளது வன்மையான கண்டனத்திற்கு உரியது ..
உங்களுக்கு இனபடுகொலை செய்திகளை படிப்பதற்கு சலிப்பாக இருப்பதற்காக ஒட்டு மொத தமிழ் இனத்தை ஒரே அடியாக ராஜபக்ஷே ஒழித்து விட்டில் நிம்மதி என்கிறீர்களா .. இந்த ஹைக்கூ thamizachiyin தற்போதைய என்ன ஓட்டத்தை நன்கு பிரதிபலிப்பதாக உள்ளது ...

தயவு செய்து அங்கு நாளும் பொழுதும் தமிழ் உறவுகள் படுகொலை செய்யபடுவதை கண்டு உங்களுக்கு வேதனை வராவிட்டாலும் இது போன்று சலிப்பு தன்மையை அங்கு நாடோடிகளாய், காடுகில் ஒதுங்க,உறங்க இடமில்லாமல் தவிக்கும் தமிழ்ர்களையும், ஆயுதம் eஏந்தி இன விடுதலைக்காக போராடும் வீரர்களையும் , அவர்களின் சடலங்கள் உங்களுக்கு சலிப்பு தட்டியது போல் பதிந்து உளவியல் ரீதியாக இன உணர்வாளர்களை, தமிழ் ஆர்வலர்களை பலவீனபடுதுவதை போன்ற பதிவுகளை தவிர்த்தல் நலம்

அண்டபுழுகன் இனவெறி சிறிலங்கா அரசு

நேற்று இரவு நடந்த ஈழ விடுதலை போராளிகளின் வான் கரும் புலி தாக்குதலில் இந்தியா, சீன, பாகிஸ்தான் போன்றா வல்லரசு நாடுகளிடம் வாங்கி குவித்துள்ள அதி நாவீன விமான எதிர்ப்பு பொறிகள் , ரேடார்கள் என பலவற்றிற்கும் தண்ணி கட்டி விட்டு பொதுமக்களின் குடியிருப்பு பகுதிக்கு எந்த ஒரு சேதாரத்தையும் ஏற்படுத்தாமல் துல்லியமாக இராணுவ கட்டுப்பாடு அதிகம் உள்ள பகுதியில் மணி கணக்கில் தாழ்வாக பரந்த போராளிகளின் விமானம் தானாகவே வழிய சென்று குறைந்த உயரத்தில் இறைவனை கட்டிடத்தின் மீது மோதி வெடித்து உள்ளதை இலங்கை அரசு வெளியிட்டு உள்ள வேப்பொழி கருவி (infra red camera ) ஒளிப்பதிவு காட்டுகிறது .. இலங்கை அரசின் பாதுகாப்பு அமைச்சகதுக்கான் இணையதளம் இந்த ஒளிகொப்பை தரவிறக்கம் செய்து கொள்ள கொடுத்துள்ளது .. அதில் மிக துல்லியமாக போராளிகளின் விமானம் கொழும்பில் வட்டம் அடித்து , விமான எதிர்ப்பு பொறிகள் பலவற்றிற்கும் போக்கு காட்டி விட்டு தாழ்வாக ஒரு கட்டிடத்தில் விமான ஒட்டி மோத விட்டு தன்னை மாய்த்து உள்ளார். கட்டிடம் வெடித்து சிதறி சேதமுருவதை காணலாம் ..

இன்று போராளிகளின் விமானத்தை மிக திறமையாக, துல்லியமாக சுட்டு வீழ்த்தி விட்டதாக புளுகும் இலங்கை அரசின் குட்டு அதனாலேயே வெளியிடப்பட்டுள்ளது .. அண்ட புளுகுணி இலங்கை அரசு போராளிகல் நடத்திய தற்கொலை தாக்குதல்களை கூட தான் சுட்டு வீழ்த்தி தான்
விமானங்கள் வீழ்ந்ததாக பொய் உரைக்கும் இவர்கள் இனி எத்தனை தமிழ் பெண்களை கற்பழித்து , தமிழ்ர்களை கொலை செய்து மீண்டும் உலக நாடுகளுக்கு பொய் உரைக்க போகிறார்களோ தெரியவில்லை


http://www.defence.lk/videos/20090221_LTTE%20Craft.wmv

Saturday, February 21, 2009

வீரத்தின் மரண சாசனம் - கேணல் ரூபன்


ஒவ்வொரு தமிழரும் படிக்க வேண்டியது



15.02.2009
தமிழீழம்.

எனது அன்பிற்கும் பெருமதிப்பிற்குமுரிய தமிழக மக்களே மற்றும் புலம்பெயர் மக்களே!

மாவீரர்கள் மாவீரர்களாகப்போகின்ற நாங்கள் உங்களிற்கு தலைவணங்குகின்றோம்.

நீங்கள் எழுச்சிகொண்டு உங்களது உறவுகளாகிய எமது மக்களின் அழிவைக்கண்டு நடத்தும் போராட்டங்களைக் கேட்டு மகிழ்ச்சியும் தன்னம்பிக்கையும் அடைகின்றார்கள்.

'மாவீரன்' முத்துக்குமார் இட்ட தீ இன்று ஐ.நா வாசலில் கூட பரவியிருக்கின்றது. இப்பொழுது தான் தமிழரின் பிரச்சினை உலகத்தின் காதுகளில் விழத்தொடங்கியுள்ளது.

எனவே எமது தமிழினத்தின் விடிவிற்கு நீங்கள் செய்யும் தொடர்ச்சியான போராட்டங்கள் பலம் சேர்க்கும். தமிழகத்தில் இருக்கும் அனைத்துக் கட்சிகளும் ஒன்று சேர்ந்து போராட வேண்டும். அப்போதுதான் மத்திய அரசின் உலகத்தின் ஐ.நாவின் காதுகளில் விழும்.

மனம் தளரவிடாதீர்கள். தொடர்ச்சியாக போராடுங்கள் தமிழ் மக்களிற்கு விடிவு வரும்.

புலம்பெயர் எமது உறவுகளே!

நீங்கள் செய்த உதவிகளால் தான் எமது போராட்டம் வளர்ச்சியடைந்து நின்றது. அதனை தொடர்ச்சியாக செய்யுங்கள். விடுதலைப் புலிகள் வேறு மக்கள் வேறல்ல. இது மக்கள் போராட்டம் என்று உலகத்திற்கு எடுத்துக் கூறுங்கள். தினம் தினம் உங்களது உறவுகள் இங்கே கொல்லப்படுகின்றார்கள். அதிலும் கொடுமை இறந்தவரைக்கூட எடுத்து அடக்கஞ் செய்யமுடியவில்லை.

மருந்தில்லை. உணவில்லை. உடையில்லை. உறையுளில்லை. எவ்வளவு கொடுமைகளை சிங்கள இராணுவம் அரசு செய்கின்றது. தமிழரை வவுனியா திறந்த சிறைச்சாலைக்கு வரவழைத்து தமிழினத்தை அழித்து சிங்கள இனத்தை உருவாக்கப்போகின்றது.

வன்னியிலே இருந்து உலக நிறுவனங்களையும் கடைசியாக செஞ்சிலுவைச் சங்கத்தையும் வெளியேற்றி எமது மக்களின் அவலம் வெளியே தெரியாவண்ணம் மூடிமறைக்க முயல்கின்றது.

விரைவிலே எமது மக்களிற்கு கொடிய நோய்கள் பரவப்போகின்றது. இவற்றை நீங்கள் உலகத்திற்கு தொடர்ச்சியாக போராடி எடுத்துக்கூறுங்கள். கேளுங்கள் தரப்படும் இல்லாவிட்டால் தட்டுங்கள் திறக்கப்படும்.

அன்புக்குரிய புலம்பெயர் வாழ் தமிழ்மக்களே!

உலகத்தில் வாழ்ந்த யூத இன மக்கள் எல்லோரும் சேர்ந்து தங்களுக்கென்று இஸ்ரவேல் என்றொரு நாட்டை உருவாக்கியது போல் நீங்கள் எல்லோரும் சேர்ந்து தமிழீழத்தை அமைக்க உருவாக்க தயாராகுங்கள்.

எமது மாவீரர்களின் கனவை நனவாக்குங்கள்.

Thursday, February 19, 2009

படுகொலை செய்யப்பட்ட தமிழர்கள் எண்ணிக்கை

இலங்கை அரசால் படுகொலை செய்யப்பட்ட தமிழர்கள் எண்ணிக்கை : Feb 15' 09 தேதி வரை



படுகொலை செய்யப்பட்ட தமிழர்கள் 1316
படுகாயப்படுத்தப்பட்ட தமிழர்கள் 4059
வன்னியில் படுகொலை செய்யப்பட்ட தமிழர்கள் 1293
வன்னியில் படுகாயப் படுத்தப்பட்ட தமிழர்கள் 4054
சிறிலங்கா கட்டுப்பாட்டு பகுதிகளில் படுகொலை செய்யப்பட்ட தமிழர்கள் 37
சிறிலங்கா கட்டுப்பாட்டு பகுதிகளில் படுகாயப்படுத்தப்பட்ட 8
சிறிலங்கா கட்டுப்பாட்டு பகுதிகளில் பலவந்தமாய் கடத்தப்பட்டோர் அல்லது காணமல் போனோர் 186

சிறிலங்கா படைகளால் கைதானோர் 304

தகவல்:

புதினம்

http://puthinam.com/load.php?teci

Wednesday, February 18, 2009

மானம் கெட்ட 'மீடியா மாபீயா' மாறன் சகோதரர்கள்

மானம் கெட்ட 'மீடியா மாபீயா' மாறன் சகோதரர்கள்

மறைந்த மாறன் புதல்வர்கள் மாறன் சகோதர்கள் இவர்களை மீடியா மாபீயா கும்பல் என சொல்லலாம். தயாநதியை தி.மு.க வில் ஒரு பெரும் புள்ளியாக காட்ட தினகரன் வெளியிட்ட கருத்து கணிப்பு அதனை தொடர்ந்த மதுரையில் நடந்த தினகரன் அலுவலக எரிப்பு அனைவருக்கும் நியாபகம் இருக்கும்.

இந்த தினமலர் அலுவலக எரிப்பை முன்னின்று நடத்தியது "அட்டாக் பாண்டி" எனப்படும் அஞ்சா நெஞ்சன் அழகிரியின் கைத்தடி இதனை தினகரன் பத்திரிக்கையில் பிரசாரம் செய்தனர்.. அந்த அலுவலக எரிப்பில் உயிரொடு எரிந்து சாம்பலான மூன்று இளம் பொறியாளர்கள் அவர்கள் இறப்பிற்கு நீதியாக இந்த தினகரன் அலுவலக எரிப்புக்கு காரணமாணவர்களை தூக்கில் இட வெண்டும் என தினகரன் உணர்ச்சி பொங்க செய்தி வெளியிட்டது ..

ஆனால் காலத்தின் கோலம் இன்று யார் அந்த தினகரன் பத்திரிக்கை எரிப்புக்கு காரணமாக இருந்தாரோ அவர் தோள் மீது தோள் கொடுத்து இருவருக்கும் இடையே காற்று கூட போக முடியாத படி வார பத்திரிக்கைக்கு புகைபட போஷ் கொடுத்தனர் ..

இதில் கொடுமை என்ன என்றால் பத்திரிக்கையில் ஆதாரபூர்வமாக வெளிவந்த தினகரன் அலுவலகத்தை எரித்த அட்டாக் பாண்டிக்கு மதுரையில் தி,மு;க சார்பில் அஞ்சா நெஞ்சன் ஆசிர்வாதத்தால் பிரதிபலனாக வெளான் துறையில் ஒரு கவுரவ பதவி வழங்கி சிறப்பிக்கபட்டது..

மாறன் சகோதரர்களே உங்களகுக்கு வெட்கம் மானம் சூடு எதாவது இருக்ககா?.. உங்கள் பணியாட்கள் உயிர் உங்களுக்கு மயிர் பொல சர்வ சாதாரணமா என்ன?

நீங்கள் மீடியா மாபீயா நடத்தி கொள்ளை அடித்த பெரும் பணத்தை காப்பாற்ற மீண்டும் குடும்பம் ஒன்று இணையும்..உங்கள் மீடியா பலத்தை வைத்து நாடாளுமன்ற தெர்தலில் வெற்றி பெறலாம் என "தமிழின து__கி" கலைஞ்சர் கற்பனை கட்டுகிறார் ... உங்களை இந்த மக்கள் மறந்தாலும் உயிரொடு சாம்பலான அந்த பணியாளர்களின் ஆன்மா மன்னிக்காது

Tuesday, February 17, 2009

திதலை அல்குல் என் மாமைக் கவினே..

அந்த குறுந்தொகை பாடல் இது தான்

http://www.youtube.com/watch?v=IDEMeVPdgJ8

கன்றும் உண்ணாது கலத்தினும் படாது
நல் ஆன் தீம் பால் நிலத்து உக்கா அங்கு
எனக்கும் ஆகாது என்னைக்கும் உதாவது
பசலை உணி இயற் வேண்டும்
திதலை அல்குல் என் மாமைக் கவினே


இதனை வெள்ளி வீதியார் எழுதியது . தலைவனை பிரிந்த தலைவி பாடுவதாக அமைய பெற்றது . அதன் பொருள் இது தான்

//கன்றும் உண்ணாது கலத்தினும் படாது
//நல் ஆன் தீம் பால் நிலத்து உக்கா அங்கு

அதாவது கன்று குட்டியும் அருந்தாமல் , பால் கறக்கும் பாத்திரத்திலும் விழாமல் நிலத்தில் விழுந்து சிந்திய நல்ல பசுவின் இனிய பாலை போல ..

//எனக்கும் ஆகாது என்னைக்கும் உதாவது

தலைவனை பிரிந்து வாழும் காரணத்தால் அவள் பேரழகு அவளுக்கும் உதவாமல் ,அவள் தலைவனுக்கும் உதவாமல்

//பசலை உணி இயற் வேண்டும்
//திதலை அல்குல் என் மாமைக் கவினே

தலைவன் பிரிவால் பசலை என்னும் தோல் நிற மாற்றம் கண்டு அவள் இடையும் மேற்தொடை பகுதியும் (அல்குல்) தேமலால்(திதலை) அவள் பேரழகு (மாமைக் கவினே) வீணாய் போனதாக் சொல்லுகிறது இந்த பாடல்

Sunday, February 15, 2009

நாசமா போக!! இதை பார்க்காதீர்கள் ஈரக்குலை வெடிக்கும்

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள "மக்கள் பாதுகாப்பு வலய" பகுதிகளான புதுமாத்தளன், முள்ளிவாய்க்கால், அம்பலவன்பொக்கணை, புதுக்குடியிருப்பு ஆகிய பகுதிகளிலும் மற்றும் கோம்பாவில் பகுதியிலும் சிறிலங்கா படையினர் நடத்திய வான் மற்றும் பீரங்கி தாக்குதல்களில் 134 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 208 பேர் காயமடைந்துள்ளனர்.
புதுமாத்தளன் - சனிக்கிழமை இரவு

சிறிலங்கா படையினரின் "பாதுகாப்பு வலயம்" என்ற அறிவிப்பை அடுத்து புதுமாத்தளன் பகுதியில் மக்கள் மிகச் செறிவாக அடைக்கலம் புகுந்துள்ள நிலையில் அவர்களை கொன்றொழிக்கும் நோக்குடன் தாக்குதகள் சிறிலங்கா படையினரால் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகின்றன.

புதுமாத்தளன் நோக்கி நேற்று சனிக்கிழமை இரவு இடம்பெயர்ந்து கொண்டிருந்த மக்களை இலக்கு வைத்தும் அப்பகுதி மக்கள் வாழ்விடங்களை இலக்கும் வைத்தும் சிறிலங்கா படையினர் செறிவான ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை மற்றும் பீரங்கித் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

இதில் 12 சிறுவர்கள் உட்பட 78 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 132 பேர் காயமடைந்துள்ளனர்.




மயிரே! நீ நலமா?

இன்று பெரும்பாலோனற்கு 'மயிர்' என்பது ஒரு அலட்சிய பொருள்.. ஆனால் ஒரு மனிதனின் வாழ்கையில் சலனமில்லாமல் பல தாக்கங்களை இந்த மயிர் (தலை முடி மட்டும் கணக்கில் கொள்க ) நிகழ்த்திக் கொண்டு உள்ளது என்றால் மிகையாகாது .. குறிப்பாக ஆண்களில் பலர் தன் தலை முடியை பற்றி அதிக கவனம் கொள்வது கிடையாது.. ஒரு மனிதன் கருப்போ , சிவப்போ , நெட்டயோ ,குட்டையோ ஆனால் தலை மயிர் அவனின் தோற்றத்தை,வயதை நிர்ணயிக்கிறது. முடி வளர்ச்சி எண்பது இயற்கையாக உடலை பாதுகாக்க உடலில் இருந்து உரோமகால்களின் மூலம் வளர்ச்சி பெரும் ஒரு வேதி பொருள் ..
உண்மையில் மயிர் என நாம் அலட்சிய படுத்துவது கவர்ச்சியின் முக்கிய பொருள் .. ஒரு ஆடவனின் தலை முடியினன் செறிவை பொறுத்தே இன்று பெரும்பாலோனோர் அவனின் வயதை குத்து மதிப்பாக கணகிடுகின்றனர்... ஆண்களில் சிலருக்கு சொட்டை , ஏறு நெத்தி விழும் பொது அவர்கள் வயது அதிகமானவர்கள் போல் தோற்றம் கொள்கின்றனர்..

ஒவொரு மனிதர்களும் தங்கள் வாழ்வில் ஏதாவது ஒரு கட்டத்தில் தலை முடி உதிர்வதை பற்றி கவலை கொண்டு அதற்காக சிறப்பு எண்ணைகளை , வைத்தியங்களை மேற்கொண்டு இருப்பார் ... பெண்களுக்கு உதிரும் தலை முடிக்கு எர்றவாறு பெண்கள் இன்று தங்கள் கேசத்தின் அமைப்பை போனி டெயில் , பாப் என்று மாற்றி அமைத்து கொண்டு இருப்பார்..

அது சரி இன்று தலை முடி உதிர்வதின் பின்புலம் தான் என்ன

தலை மயிர் கீழ்க்கண்ட காரணங்களால் உதிரும்

** அதீத கவலை , பசி , தூக்கமின்மை , உடலில் சத்து பற்றாகுறை
** வீரியாமான மருந்து உட்கொள்வாராயின் முடி உதிரும் குறிப்பாகா புற்றுநோய்க்கு
உட்கொள்ளும் கீமோதெரபி மருந்துகள்
** புழு வெட்டு எனப்படும் தலையில் சிலருக்கு வரும் ஓட்டுகளால் ஏற்படும் வழுக்கை

மேற்கொண்ட முறைகளாம் தலை முடி உதிர்வதை வைத்தியத்தின் மூலம் குனபடுதலாம் அல்லது சில சத்து மருந்துகளை உட்கொள்வது மூலம் கட்டு படுத்தலாம் ..

ஆனால் இதற்கு அப்பாற்பட்டு பெரும்பாலான ஆண்களுக்கு தலை முடி கொட்டுவதற்கு பாரம்பரிய ஜீன்கள் காரணமாகின்ரான .. தங்கள் குடும்பங்களில் தந்தை அல்லது மூதாயருக்கு வழுக்கை இருப்பின் ஆண்களுக்கு வழுக்கை வரும் சாத்தியகூறுகள் மிக அதிகம் ..

இதனை "Male Bald pattern" என்று ஆங்கிலதில் கூறுவர் .. இதற்கு குணபடுதும் மருந்து என்று எதுவும் கிடையாது.. ஆனால் ஆங்கில மருதுவ முறையில் சில மாத்திரைகள் , தைலங்கள் உடலின் முடி உதிர்வதற்கான செயல்பாடுகளில் மாற்றம் விளைவிக்க கூடிய வெதி மாற்றங்களை நிகழ்த்தும் வல்லமை உடையன ..

பாரம்பரிய வலுக்கை விழ காரணம் என்ன ?

ஆண்களின் உடலில் ஆண்ட்ற்றொஜன் எனும் ஆண் பால் ஹார்மொன் மிக அதிகமாக சுரக்கும் பொது அது இரத்ததில் கலந்து உடலெங்கும் பரவுகையில் இந்த ஹார்மொனின் வீரியதால் தலையில் உள்ள மெல்லிய உரொம கால்கள் பாதிப்புக்கு உள்ளாகின்றன.. இதன் அறிவியல் உண்மை யாதெனில் வழுக்கை உள்ளவர்கள் வயதானவர்கள் என நினைப்பதை விட சராசரிக்கும் அதிகமாக சுரக்கும் ஆண் இனபெருக்க ஹார்மொங்களால் சிறப்பாக இருக்கும் வாலிபர்கள் தான் ..


ஆங்கில மருந்தின் ஆபத்து!!

பாரம்பரிய முடி உதிர்வதை தவிர்க்க ஆங்கில மருத்துவத்தில் கொடுக்கபடும் சில மருந்துகள் செயல்பாடுகள் யாது எனில் அது உடலில் ஆண் பால் ஹார்மொன் ஆன ஆண்ட் ரொஜனை கட்டுபடுத்தும் .. இதனால் இரத்ததில் ஆண்ட்ரொஜன் அளவு குறைந்து அது உரொம கால்களை சிதைப்பது கட்டுபடுத்தபடுகிறது.. இதற்கு பக்க விளைவுகள் உண்டு இந்த் மருந்தை தொடர்ந்து உட்கொண்டால் உடலில் ஆண் இனபெருக்க செயல்பாடுகளில் குறைவு ஏற்பட சாத்திய கூறுகள் உண்டு .. இதனை போல தலைக்கு தேய்க்கும் மருந்துகள் உண்டு .. மிண்டாப் என லெபிலில் விற்கபடுகின்றன அவைகள் தலைமுடி உரொம துவாரங்களில் ஊடுருவி ஆண்டரொஜன் செய்ல்பாடுகளை குறைக்கிறது..

ஆகையால் தலை வழுக்கை உள்ளவர்கள் அதனை நினைத்து கவலை படுவதை விட்டு விட்டு , பணத்தை செலவழிப்பதை விட்டு விட்டு அன்றாட வேலைகளை கவனியுங்கள்

இரயில் பயணிகளை காவு வாங்க துடிக்கும் மதுரை ரயில்

மதுரை,தூத்துக்குடி,நெல்லை,செங்கோட்டை செல்லும் பகுதிகளுக்கு ரயில் பயணிகளே உஷார்
http://beta.deccanchronicle.com/2008/12-yr-old-averts-train-accident?most=LN

மேற்கண்ட சுட்டியை படிக்கும் பொது பல நூறு உயிர்களை ரயில் விபத்திலிருந்து காத்த அந்த சிறுவனை பாராட்ட தோன்றும் . அதே சமயம் பல நூறு உயிர்களை காவு வாங்க துடித்து கொண்டு இருக்கும் சென்னை - மதுரை இடையே உள்ள ரயில் பாதை மற்றும் ரயில் போக்குவரத்துக்கு நெருக்கடியான அந்த பாதையில் சிறப்பு ரயில் என்ற பெயரில் மணிக்கணக்கில் பல ரயில்களுக்கு வழி விட்டு தாமதாமாக செல்லும் ரயில்கள் என்று பல அவலங்களை பலர் சென்னையிலிருந்து தெற்கே உள்ள நகரங்கலுக் பயணிப்பவர்கள் கண்டிப்பாக அனுபவித்து இருப்பார் ..
அந்த பையனுக்கு வாழ்த்துக்கள் அதே சமயம் இந்த அரசாங்கமும் , தென்னக ரயில்வேவும் மிக மெத்தனமாக ஒரு விஷயத்தில் இருப்பதை நாம வன்மையா கண்டிக்க வேண்டியது அவசியம் ஆகிறது ... குறிப்பாக சென்னையில் இருந்து தெற்கே உள்ள நகரங்கல்லுக்க் செல்லும் ரயில் அதிக எண்ணிகையில் உள்ளன குறிப்பாக திருவிழா காலங்களில் சிறப்பி ரயில்கள் இயக்கபடுகின்றன.. அதே மாதிரி தெற்கே தூத்துக்குடி, நாகர்கோயில் , நெல்லை நகரங்களில் இருந்து ரயில்கள் சென்னையை நோக்கி வருகின்றன குறிப்பாக மதுரையிலிருந்து விழுப்புரம் வரைக்கும் மிக அதிக எண்ணிகையில் ரயில்கள் சென்று வருகின்றன , இவற்றில் சரக்கு ரயில்களுக் அடங்கும். ஆனால் தென்னக ரயில்வே இந்த பாதையை இரு வழி பாதையா மாற்றாமல் மெத்தனம் காட்டுது .. ஆந்திரா, கேரளா இன்ன பிற மாநிலங்களில் எல்லாம் இரு வழி பாதை இருக்க தமிழ்நாட்டில் மட்டும் இருவழி பாதையா மாற்றாமல் மெத்தனம் காட்டுவது சுமார் 500 உயிரை எந்த நேரத்திலாவது பலி வாங்குவதற்கு .. தினமும் தற்போதையா ஒருவழி பாதையால் பயணிகளின் பயண நேரம் அதிகமாகி சிரமதிற்குலகின்றனர்
கோடி கணக்கில் லாபம் காடும் ரயில்வே இப்படி தமிழாக மக்கள் உயிரோட அடிகடி உடையும் ரயில்வே பாதைய வைத்து விளையாடுகிறது .. அப்படி ஒரு துர்சம்பவம் நடந்தா ரவில்வே இணை அமைச்சர் வேலு , தமிழ்குடிதாங்கி மருத்துவர் மூஞ்சியில எச்ச காரி அனைவரும் துப்புவர் அதுவும் இந்த முட்டாள் , அளட்சியா அரசியல்வாதிகளால் நடக்க தான் போகிறது பாருங்கள்

http://dinamalar.com/sambavamnewsdetail.asp?News_id=7851&cls=row3&ncat=TN

குருவாயூர் பயணிகள் ரயிலின் மீது பட்ட பகலில் மோதிய ரயில் இஞ்சீன் .. இந்திய ரயில்வே துறைக்கு தமிழ்ர்களின் இரத்தத்தை பார்க்காமல் தூக்கம் வராது போல .. தமிழார் எல்லா துறைகளிலும் மடையனாக்க படுகிறான் .. மதிய ரயில்வே இணை அமைச்சை வேலு இருந்தும் இன்னும் தமிழாக்கத்தில் இருவழி தடம் மதுரை வரை அமைக்க படவில்லை

ஒரு அதிர்ச்சி ரிபோர்ட்!!

சமீபத்தில் சுவீஸ் வங்கிகளின் கூட்டமைப்பு வெளியிட்ட ஒரு அறிகையில் சுவீஸ் வங்கிகளில் பணத்தை பதுக்கி வைத்திருக்கும் நாடுகளில் இந்தியா தான் முன்னிலை வகிக்கிறது .. இந்தியார்கள் தான் அதிக அளவில் பணத்தை பதுக்கி வைத்துள்ளார்கள்
சுவிஸ் வங்கி செய்திக்கு இங்கு சொடுக்கவும்
Top five
----------
India---- $1456 billion [அமெரிக்க டாலரில் ] . so (1456 billion * 49 = indian rupees)
Russia---$ 470 billion
UK------- $390 billion
Ukraine- $100 billion
China-----$ 96 billion
ஒரு லட்சத்து நாற்பத்தி ஐயாயிரத்து அறநூறு கோடி அமெரிக்க டாலர் எனில் இதனை இந்திய ரூபாயாக ஐம்பதால் பெருக்கி பார்த்தால் கண்ணை கட்டுகிறது.. இந்த மீபெரும் பணம் முழுவதுமாக வரி கட்டாமால் மக்களை சுரண்டி சுவீஸ் வங்கிகளில் போட பட்டது..
இந்திய தொழில் அதிபர்கள் , அரசு பணியில் இருக்கும் ஐ.எ.ஷ் அதிகாரிகள், ஐ.பி.ஷ் அதிகாரிகள் , அமைச்சர்கள் ,சினிமா நடிகர்கள் , கிரிகெட் வீரர்கள் இன்ன பிற மனிதர்களால் பதுக்கப்பட்ட பணம் .. இந்த பணத்தை சுமார் 45 கோடி சாமானிய இந்தியர்களுக்கு தலைக்கு ஒரு லட்சம் விகிதம் இனாமாக கொடுக்கலாம். இந்தியா அயல் நாடுகளில் வாங்கியுள்ள கடனை போன்று பதிமூன்று மடங்கு இந்த கருப்பு பணம் பெரியாது.. ஆக மொத்தம் உழைப்பாளிகள் வர்கம் இளிச்ச வாயர்கள் ..
அடுத்தவன் உழைப்பை சுரண்டி பணத்தை திங்கும் பினந்தின்னிகளே நீங்கள் தினமும் உண்ணுவது உணவு அல்ல உழைப்பாளர்கள் மலம்

மாணவ உளவாளிகள்-காலக் கொடுமை

மாணவ உளவாளிகள்-காலக் கொடுமை
மிக பெரிய பாதுகாப்பு ஓட்டையை பாகிஸ்தான் தரப்பு கூலிப்படை தீவிரவாதிகளிடம் காட்டிய இந்திய அரசு .. இந்த இந்திய அரசின் அசைக்க இயலா அங்கமாக விளங்கும் தமிழாக அரசின் உளவு பிரிவின் கோமாளித்தனமான செயல் தான் இது ...
பல கல்லூரிகளிலும் சில மாணவர்களை அரசு வேலைவாய்ப்பு, பண உதவி, ஆடம்பர மொபைல்கள் என்று இன்ன பிற ஆசை வார்த்தைகளை காட்டி நாடுளுமன்ற தேர்தல் முடியும் வரை அவர்களை உளவுத்துறை உளவாளிகளாக ஆக நியமனம் செய்து கல்லூரியில் மாணவர் தரப்பில் இலங்கை பிரச்சனையில் ஏற்படும் மாற்றங்களை , போராட்ட திட்டங்களை உளவு தகவல் சொல்ல நியமித்து உள்ளது
மாணவர்களை அடக்கி ஒடுக்குவதில் உள்ள முனைப்பை இந்த அரசாங்கம் பாகிஸ்தான் கூளிபடையிடம் காட்டடும்
http://dinamalar.com/sambavamnewsdetail.asp?News_id=8431&cls=row4&ncat=DI

அகர முதல..

அகர முதல எழுத்தெல்லாம் அவள்
வாய் மொழிதல் அழகு

ஒளியும் ஒலியும் ..

கேபிள் டிவி வரவுக்கு முன் தமிழாக்கத்தை வெள்ளி கிழமைகளில் இரவு ஒரு மணி நேரம் விட்டுக்குள் தூதர்சன் முன் முடக்கும் மந்திர சொல். அதன் நினைவாக இன்று இணையம் வரை வந்த தமிழ் திரை இசை பாடல்கலின் ஒளி,ஒலி இழைகலின் சுட்டிகளை இங்கு

ஜனனி.. ஜனனி..

http://youtube.com/watch?v=6eFjBl_r4jE


தீண்டாய் மெய் தீண்டாய் ..
பாடலின் ஆரம்ப செய்யுள் வரிகள் இனிமை ..உணர்ச்சி குவியலாய்

http://www.youtube.com/watch?v=IDEMeVPdgJ8

மெய் சிலிர்க்கச் செய்யும் மத ஒற்றுமை பாடல் ...

http://www.youtube.com/watch?v=PBAglnjhs5c


சலங்கை தாழ் ஒரு மாது ..அமலாவின் பரதம் ..

http://www.youtube.com/watch?v=_yDUgiRTW18

அமலா ஜேசுதாஸ் குரலில் செவிக்கும்,விழிக்கும் இனிதாய்

http://www.youtube.com/watch?v=YugmmhsOtu0

என்றும் நினைவில் நிற்கும் இனிய மெல்லிசை ....

ஒரு இரவு முழுவதும் போன் பேசியதை
தூதர்ஷன் ஒளிபரப்பு நிறுத்த படுவதும் மறுநாள் காலை தூதர்ஷன் ஒளிபரப்பு ஆரம்பிப்பதாக காட்டுவது அருமை


சங்கீத ஸ்வரங்கள்
http://youtube.com/watch?v=vmCi2HVQXr0

இசைத் தமிழ் வளர்ச்சி மற்றும் மாற்றம் இன்று அளப்பரியது ஆனால் இயல் தமிழுடன் ஒட்டாமல் வெகு தூரம் வந்து விட்டது .. இலக்கிய பாடல் செறிந்த தமிழ் திரை இசை பாடல் கேட்பது அபூர்வம்..தேடி பிடித்தாலும் இணையத்தில் பதிவேற்றப் பட்டிருக்குமா என்பது சந்தேகமே ..
நல்ல அர்வம் முயற்சி செய்வோம்.

நல்ல தமிழை கையாண்ட மற்றொரு பாடல்

நறுமுகையே நறுமுகையே...

http://www.youtube.com/watch?v=I_i9Zzn6_TM

நினையே ரதியென்று நினைகிறேனடி கண்ணம்மா ..

மீண்டும் அமலா ..
http://www.youtube.com/watch?v=nXTdpHW1zgU

தீர்த்த கரையினிலே ..

வார்த்தை தவறி விட்டாய் கண்ணம்மா ....

http://www.youtube.com/watch?v=eVr1PA_3yY8

சின்னஞ் சிறு கிளியே கண்ணம்மா

http://www.youtube.com/watch?v=PV0lCPv5Q3Y

சிந்து நதியினிலே ..

http://www.youtube.com/watch?v=5r7pmpc3U9I

நிற்பதுவே நடப்பதுவே

http://www.youtube.com/watch?v=ipkLxvFhKYw

ஹேமா மாலினி மகள் ஈசாவின் யதார்த்த முக பாவனைகள் ..மெலிதான இசை

ஓர் உண்மை சொன்னால் நேசிப்பாயா ..

http://youtube.com/watch?v=gSBQGcMfzzs

தமிழ்கத்தை ஆட்டுவித்து ஓய்ந்த பாடல் .
லஜாவதியே
http://www.youtube.com/watch?v=Vq1GBf2hUgk

இரசனையான வரிகள் ..
நானே தொலைந்த கதை நானறியேன் ..
உன் முகம் தேடி காலையில் வெயில் ஆகிறேன் ..
தேர்வு அறை முழுதும தேவதையே உன் நினைவு

http://www.youtube.com/watch?v=75SvpuJPk78

சின்ன தாயவள் ..

மணிரத்னத்தின் காட்சியமைப்பில் புதிய கோணத்தில் ரஜினி

http://www.youtube.com/watch?v=glbdYU_X16I

அகத்தியன் வடித்த காதல் கோட்டையின் என்றும் பசுமையான டைட்டில் பாடல். ஜேம்ஸ் பாண்ட் படம் டைட்டில் போல ஒரு மெதுவான கோரியோகிராப்
நீ காதலி ..

http://youtube.com/watch?v=hCladlTAOnw

அஜித் ,சுவலட்சுமி பனிபிரதேசம் ,ராஜி சுந்தரம் நிழல் நடனம் அருமை
குளிர்ச்சியான பாடல் ...

மீனம்மா !!

http://youtube.com/watch?v=Zx_aNTmdcwQ

மவுனம் பேசியதே படத்தில் யதார்த்தமான பாடல் .. சூரியாவின் நடிப்பு ,அழுத்தமான வரிகள் , சீரிய இசை இன்னும் பல

காதல் செய்தால் பாவம் .. மவுனம் பேசியதே உனக்கு அது தெரியலையா ..

பெண்கள் உள்ள வரை ஆண்கள் ஜெயிப்பதில்லை

http://youtube.com/watch?v=4i4Z1hANq8g

எந்தன் நெஞ்சில் நீங்காத - கலைஞன்

http://youtube.com/watch?v=w7Oy1TUafcA

தத்துவ பாடல் ..

ஆத்தாடி பாவாட காத்தாட..

http://youtube.com/watch?v=NHJaRQ3OFkg

♫♫கங்கை கரை மன்னனடி♫♫ ..

ஜேசுதாஸ் குரலில் ♫♫ .. பசுமையான பாடல்

http://youtube.com/watch?v=kKak9Rzcm4I

என்னவளே அடி என்னவளே ..
பனி பிரதேசத்தில் குளிர்ச்சியான பாடல்

http://youtube.com/watch?v=h9dQD35CzW8

சின்ன சோதிகா அண்ட் சூர்யா !
சென்தொரித்த ! சென்ஷோரிதா
அழகிய பாடல்

http://youtube.com/watch?v=Kn6MwNofCes

இறைவா !! இறைவா !! சக்தி கொடு ..

காலத்தின் கட்டளையை நான் மறுக்க மாட்டேன் ..

http://youtube.com/watch?v=LOHnjFhUiWk

விடுகதையா இந்த வாழ்கை .. விடை தருவார் யாரோ

எனது கை என்னை அடிப்பது போல்
எனது கைவிரல் கண்ணை கிழிப்பது போல்

அழுது அறியாத என் கண்கள்
ஆறு குளமாக மாறுவதோ

ஏன் என்று கேட்கவும் நாதியில்லை
ஏழையின் நீதிக்கு கண்கள் பார்வையில்லை

பசுவினை பாம்பென சாட்சி சொல்ல முடியும்
காம்பினில் விஷம் என்ன கறக்கவா முடியும்

உடம்பில் வழிந்தோடும் உதிரம் உன்னை கேட்கும்
நான் செய்த தீமை என்ன ! நான் செய்த தீமை என்ன ?


http://youtube.com/watch?v=Gs10OjUNpgc

வாழ்வே மாயம் படத்திலிருந்து கமலின் இயல்பான நடிப்பில் மீண்டும் ஒரு சோக பாடல்

வந்தனம் என் வந்தனம் ..
http://youtube.com/watch?v=t2s9IRZRNaU

சோகமோ சோகம

ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு காத்தாடி போலாகுது ..

http://youtube.com/watch?v=z7DLYPVdk1I

இளைமை காலங்கள் திரைப்படத்தில் இருந்து ஒரு சோகமான் மிக இனிய பாடல் "மைக்" மோகன் நடிப்பில்

ஈரமாந ரோஜாவே என்னை பார்த்து மூடாதே ..

என்னை பார்த்த ஒரு மேகம் ஜன்னல் சாதி விட்டு போகும்
உன் வாசலில் என்னை கோலமிடு இல்லை என்றால் ஒரு சாபம் இடு !!

http://youtube.com/watch?v=uW5GOEM-R2g



இந்த பாடலின் லொகேஷன் எதுவென்று யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள் ?

அருமையான கலை அம்சம் நிறைந்த லொகேஷன். ஹூப்ளி கலாசார கட்டிட கலையை ஒத்து உள்ளது .


அந்த குறுந்தொகை பாடல் இது தான்


கன்றும் உண்ணாது கலத்தினும் படாது
நல் ஆன் தீம் பால் நிலத்து உக்கா அங்கு
எனக்கும் ஆகாது என்னைக்கும் உதாவது
பசலை உணி இயற் வேண்டும்
திதலை அல்குல் என் மாமைக் கவினே

இதனை வெள்ளி வீதியார் எழுதியது . தலைவனை பிரிந்த தலைவி பாடுவதாக அமைய பெற்றது . அதன் பொருள் இது தான்

//கன்றும் உண்ணாது கலத்தினும் படாது
//நல் ஆன் தீம் பால் நிலத்து உக்கா அங்கு

அதாவது கன்று குட்டியும் அருந்தாமல் , பால் கறக்கும் பாத்திரத்திலும் விழாமல் நிலத்தில் விழுந்து சிந்திய நல்ல பசுவின் இனிய பாலை போல ..

//எனக்கும் ஆகாது என்னைக்கும் உதாவது

தலைவனை பிரிந்து வாழும் காரணத்தால் அவள் பேரழகு அவளுக்கும் உதவாமல் ,அவள் தலைவனுக்கும் உதவாமல்

//பசலை உணி இயற் வேண்டும்
//திதலை அல்குல் என் மாமைக் கவினே

தலைவன் பிரிவால் பசலை என்னும் தோல் நிற மாற்றம் கண்டு அவள் இடையும் மேற்தொடை பகுதியும் (அல்குல்) தேமலால்(திதலை) அவள் பேரழகு (மாமைக் கவினே) வீணாய் போனதாக் சொல்லுகிறது இந்த பாடல்

குனித்த புருவமும் கொவ்வை செவ்வாயில் குமின் சிரிப்பும்
பனித்த சடையும் பவளம் போல் மேனியிற் பால் வெண்ணீறும்
இனித்தமுடன் எடுத்த பொற்பாதமும் காண பெற்றாள்
மனித்த பிறவியும் வேண்டுவதே இம்மானிலத்தே

தேவாரம் பாடல்

http://youtube.com/watch?v=0q3YTw1HbZY

இந்திரை யோயிவள் சுந்தரி யோதெய்வ ரம்பையோ
மோகினியோ - மன
முந்திய தோவிழி முந்தியதோ கரமுந்திய
தோவெனவே -உயர்
சந்திர சூடர் குறும்பல விசுரர் சங்கணி
வீதியிலே - மணி
பைந்தொடி நாரி வசந்தவோய் யாரி பொற்
பந்து கொண்டாடினாளே

திரு குற்றால குறவஞ்சியில் திரிகூட ராசப்ப கவிராயல் எழுதிய பாடல்

http://youtube.com/watch?v=F83zV4fCciA

"கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்" திரை படத்தில் இருந்து ஐஸ்வரியா பச்சன்

சுட்டும் விழி சுடர் தான் கண்ணமா சூரியர் சந்திரரோ ,

வட்ட கரிய விழி கண்ணம்மா வானக் கருமை கொல்லோ
சோலை மலர் ஒளியோ உனது சுந்தர புன்னைகை தான்

நீலக் கடல் அலையே உனது நெஞ்சில் வளைகலடி
கோலக் குயில் ஓசை உனது குரல் இனிமையடி

http://youtube.com/watch?v=k_bVG1fluw8

பாயும் புலி!! பதுங்கும் நாகம்!!

நண்பர்களே சமீப காலமாக ஆங்கில திரைப்படங்கள் தமிழில் மொழி பெயர்க்கப் படும் பொது ரசனையான பெயர்கள் வைத்திருப்பதை கண்டுள்ளோம் .. அது போல நாமும் நமது பங்குக்கு சில ஆங்கில , பிற மொழி திரை படங்களுக்கு ரசனையான பெயர் வைத்தால் எப்படி இருக்கும் ?

Brave Heart - நெஞ்சுல மாஞ்சா!!
casino Royale - மங்காத்தா மடம்
X-Men - மீசை மச்சான் மச்சக் காளை.
Tommorrow Never Dies - நாளைக்கு பூட்டுக்காது ..

வாருங்கள் நமக்கு தெரிந்த பிற மொழி திரைப்படங்களுக்கு ரசனையான தமிழ் பெயர் சூட்டி பார்ப்போம் .. உங்களுக்கு சட்டுன்னு நினைவுக்கு வரும் படங்களுக்கு பட்டுனு ஒரு டைடில போடுங்க

சங்க இலக்கியங்கள் வர்ணிக்கும் பெண்மை ..

தமிழ் இலக்கியங்களுக்கு உள்ள ஒரு சிறப்பு அதன் உவமை . அழகிய வார்த்தைகளினால் ஒன்றை உவமை படுத்தி கூறுவது .. உவமை என்றவுடன் பரவலாக நினைவுக்கு வருவது "பெண்கள்". பெண்மையை விவரிக்காத இலக்கியங்கள் இல்லை .

காலத்துக்கு ஏற்ப இன்று திரை இசை பாடல்களிலும், புது கவிதை,ஹைக்கூ என பல வகைகளிலும் வர்ணிக்கப்படும் பெண்களை அக்கால இலக்கியங்கள் கலை நயமாக ,கண்ணியமாக எவ்வாறு வர்ணித்தன என்பதனை இவ்விழையில் பதிவோம் , விவாதிப்போம்

குற்றால குறவஞ்சியில் நாயகியின் வர்ணனை
-----------------------------------------------------

இருண்ட மேகஞ்ச்சுற்றி சுருண்டு சுழி எரியுன் கொண்டையாள் குழை
ஏறி ஆடி நெஞ்சை சூறையாடும் விழிக் கெண்டையாள்
திருந்து பூ முருக்கின் அரும்பு போலிருக்கும் இதழினால் வரிச்
சிலையை போல் வளைந்து பிறையை போல் இலங்கு நுதுலினால்

விளக்கம் :
------------
மேகங்கள் சில சுருண்டு சுழித்தது போல கூந்தல் உடையாள் .. காது வரை நீண்டு ஆடவர் மனதை கொள்ளை கொள்ளும் கெண்டை விழியுடையால் , அழகான அரும்பை போல இதழினால் , அழகிய வில்லை போல் வளைந்து மூன்றாம் பிறை திங்களை போல ஒளி விடும் நெற்றி உடையாள்

சிலப்பதிகாரம் :-----------------

கோவலன் விவரிக்கும் கண்ணகியின் அழகு:
---------------------------------------------------

மாயிரும் பீலி மணி நிற மஞ்சை நின்
சாயர் கிடைந்து தங்கான் அடையவும்
.........
அன்ன நன்னுதல் மென்னடை கழிந்து
நன்னீர்ப் பண்ணை நளி மலர் செரியவும்
...........
அளிய தாமே சிறு பசுன் கிளியே
குழளும் யாழும் அமிழ்துங் குழைத்த நின்
மழைக் கிளவிக்கு வருந்தின வாகியும்
மட நடை மாது நின் மலர்க்கையீ நீங்காது

விளக்கம் :
------------
கரிய பெரிய மயில்கள் உன் தோற்றத்தை கண்டு தோற்று அவைகள் கூட்டை சென்று அடைகின்றன ..

அன்னப் பறவைகள் உன் மேன்மையுடைய நடைக்கு பயந்து நன்னீர் பூக்கள் பின் சென்று மறைகின்றன ..

பசுங் கிளிகள் குழழின் இசையையும், யாழின் இசையையும்,அமிர்த்தத்யும் கலந்த உன் சொற்களுக்கு போட்டி இட முடியாமல் வருந்தி அதனை கற்பதற்காக உன்னை பிரியாமல் உள்ளன ..

கலித்தொகையில் வர்ணனை !


வேய் என திரண்ட தோள் வெறிகமழ் வணரைம்பான்
மாவென்ற மடநோக்கின் மயிலியர்றளர் பொல்கி
யாய் சிலம்பரியர்ப்ப வவிரொளியிழையமைப்பை
கொடிஎன்ன மின்னென வணங்க்கென்ன யாதொன்றுந்த்
தெரிகல்லா விடையின் கண் கண் கவர் பொருங்கோட

விளக்கம் :
------------
மூங்கீலென திரண்ட தோளினையும் , மணம் வீசும் ஐம்பாலினையும் ,மா நோக்கி (அரசனையும்)வென்ற மடப்பத்தையுடைய நோக்கையும் , மயில் போன்ற சாயலையும் ,அழகிய சிலம்பில் உள்ளிருக்கும் மணிகளால் ஆன கலங்களை உடைய , துடக்கதான் கொடியென கண நேரத்தில் யாதென்றே தெரியாத அந்த மெல்லிய இடையை கண்கள் நாடி செல்கின்றன

"அரிசந்திர புராணம்" வர்ணிக்கும் பெண்களின் விழி அழகு


கடலினைக் கயலைக் கனையமேன் பினையைக்
காவியை கருவிள மலரை
வடுவினைக் கொடிய மறலியை வலையை
வாழை வெண் ர்ரவுநீன் டகன்று
கொடுவினை குடி கொண்டிருபுறம் தாவிக்
குமிழையும் குழைyaiயும் சீறி
விடமெனக் கறுப்பூர் றரிபரந துங்கை
வேலினும் கூறிய விழியால்

விளக்கம் :
------------
ஒப்புமையில் கடலினையும்,மீனையும்,அம்பையும், மென்மையான பெண் மானையும் நீலோற்பல மலரையும் கருவிளம் பூவையும் , பார்வையால் ஆடவரை துன்புறுத்தி கவர்வதில் கொடிய எமனையும் ,வலையையும், வாளையும் வென்று முற்றிலும் செவியளவு நீண்டு அகன்று கண்டார் உயிர் உண்ணும் கொடுந்தொழில் நிலை பெற்று இரண்டு பக்கங்களிலும் தாவி குமிழாம் பூ போன்ற மூக்கும் , விசம் போல் கருநிறம் பொருந்தி கூரிய வேலை விட கூர்மையான கண்களை உடையவள்

காயகல்ப முறை !

காயகல்பம் என்பது என்றும் தேகத்தை இளமையாய் வைத்து,ஆயுளை நீடிக்கும் முறை. இந்த காய கல்ப முறைக்கு பல்வேறு சித்தர்கள் , ஆயுர்வேத நிபுணர்கள் பல்வேறு குறிப்புகளை கொடுத்துள்ளனர்

குறிப்பகா சித்தர் தேசமான "சதுர கிரி" மலையை சுற்றி சில மூலிகைகளை ,மரங்களை மூல பொருளாக பயன்படுத்தும் குறிப்புகள் உள்ளன.காலத்தால் அத்தாவரகள் அழிந்திருபினும் இதனை கான மஞ்சரி தொகுத்துள்ளார் .

இந்த காய கல்ப முறை பற்றி அனைவரும் தெரிந்த கருத்துகளை ,முறைகளை விவாதித்து அனைவர் ஆயுளையும் நீட்டிபோம்

குறிப்பு:

இது தொகுக்கப்பட்ட சித்தர் குறிப்புகளின் சுருக்கம்.இதன் நோக்கம் இங்கு குறிபிடபட்டுள்ள மூலிகைகளை கேள்விபட்டு இருக்கிறீர்களா என்பது?

இதன் குறிப்புகளுக்கு ஒத்து உள்ள செடிகளை தேர்ந்த சித்த வைத்தியரிடம் உறுதி படுத்தி கொள்ளாமல் பரிசோதிக்க வேண்டாம்

புசுண்ட மகரிஷி கூறும் காயகல்பம் :
------------------------------------

சதுரகிரி வனங்களில் "அழுகண்ணி " என்ற மூலிகை உண்டு இதன் பூ மஞ்சள் நிறமாகவும் , இலைகள் பலாச்சுளை போலவும் எந்நேரமும் நீர் வடிந்து இருக்கும் அதனால் அலுகன்னி என பெயர் . காய்கள் செந்தட்டிகாய்கள் போல் இருக்கும் இதனை வேருடன் பிடுங்கி வந்து காய வைத்து இடித்து ,பசு நெய்யுடன் கலந்து ஒரு மண்டலம் சாப்பிட நரை திரை மாறும்.

"தொழுகன்னி" என்ற மற்றொரு மூலிகை உண்டு .இதன் இலை அலறி இல்லை போலவும்,தூர் கருப்பு நிறமாகவும் இருக்கும் இது எப்போது கதிரவனை நோக்கியே இருக்கும் இந்த தொழுகன்னி இலையில் சிறிதும் அழுகண்ணி இலையில் சிறிதும் சேர்த்து இடித்து பொடி செய்து சாப்பிட்டால் உடல் பலம் பெறும்

விபத்துகள்,தற்கொலைகள் போன்ற துர் மரணங்களை விடுத்து ஒருவர் இயற்கை மரணம் என்பது அவரவர் உணவு பழாக்கம்,கெட்ட பழக்கவழக்கங்களை பொறுத்து மாறுபடும்.

" உணவே மருந்து" என்பது இதனை தான் . நம்மை போன்ற சமைத்த உணவை உண்பதை காட்டிலும் இயற்கை உணவு உண்பவர் தேக ஆரோகியமுடன் இருப்பார் என்பது உறுதி..

உணவு பழக்க வழக்கங்களையும், வாழ்வியல் சூழ்நிளைகளையும் பொறுத்து ஆயுள் எவ்வாறு மாறுபடுகிறது என்பதற்கு ஒரு சிரூ உதாரணம்

என் கொள்ளு தாத்தா 90 வயது வரை தேக ஆரோகியத்துடன் வாழ்ந்தார். அவர் வாழ்க்கை முறையை எடுத்து கொண்டால் கிராமத்தில் அதிகாலையில் எழுந்து வில் வண்டியில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைசியாராமன் கோயில் நதியில் நீராடி , அருகில் உள்ள தியான் மேடையில் மான் தோலில் தியானித்து மணி கணக்கில் பல்வேறு ஆசன்களை செய்வார். காலையில் கருட தரிசனம் முடித்து விட்டு உணவே உண்பார். மூன்று வேலையும் வாழை இழையில் உண்பவர்.தான் உணவில் பல்வேறு கட்டுப்பாடுகளை வைத்து இருந்தவர்.நல்ல உழைபாளி . இயற்கை வைதியத்தை நம்புபவர்.எந்த ஒரு நோயும் இறுதி வரை அன்டாதவர்

அடுத்த தலைமுறையான என் தாத்தாவோ 75 வயதில் உடல் வருந்தி இயற்கை மரணம் எய்தினார். உணவில் எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லை. தியானம்,ஆசனம் எதுவும் பண்ணமாட்டார், ஊர் நாட்டாமையாக பிரச்சனைகளை குழபிக் கொண்டு அமைதி இல்லாமல் இருப்பார். சர்க்கரை நோய்க்கு ஆங்கில மருந்துகளை எடுத்து கொண்டு அதன் பின் விளைவுகளால் அவதிபட்டார்.

அவர்கள் வாழ்கை முறை , கால சூழ்நிலைகளுக்கு ஏற்ப இருவரின் மரணங்கள்
இடைவெளி 15 ஆண்டு காலங்கள் குறைந்தது.

பசிக்கு புசிக்க கொடுப்பது போல் பிணியால் வருந்தும் தேகத்துக்கு மருந்து கொடுப்பது
அவசியம்.

நம் வாழ்க்கை முறையை ஆசனம்,தியானம் என செம்மை படுத்தி கொண்டால் பிணி வெகுவாக அண்டாது, அவ்வாறு பிணி ஏற்படின் அதற்கு தக்க பின்விளைவுகள் அல்லாத வைத்தியம் சால சிறந்தது .
தர்ம,வாழ்கை நெறிமுறைகளை அனுசரித்து கடவுள் மேல் உள்ள பய்த்தினால் வாழ்பவன் ஒரு நேர் கோட்டில் கட்டுப்பாடுகளை விதித்து வாழ்க்கையை கொண்டு செல்லுவர். அவ்வாறு வாழ்ந்திடினும் பிணிகள்,ஆரோக்கிய தேக்க நிலைகள் சுற்று புற சூழ்நிலைகளால், தொற்று நோய்களால் ஏற்படலாம் அதனை நிவர்த்தி செய்ய இந்த மூலிகைகள் தேவைபடுகின்றன.

எமனை,சிதிரகுப்தனை பார்த்ததில்லை ஆனால் மரண வீட்டில் நாய்கள் வித்தியாசமாக ஊளை இடுவதை கேட்டிருக்கிறேன்

---------

**இறப்பு என்றால் என்ன ? "இருதயம் நின்று போவது ".. மூளை மட்டும் செயளிழந்தால் அது கோமா ஆனால் இறப்பு இல்லை .

**இருதயம் எப்போது நிற்கும் ? இதய தசைகள் பலவீனம் அடைந்தால் , இருதய இரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டால் .

** இதய தசைகள் எப்போது பலவீனம் அடையும் ? எப்பூது அடைப்பு ஏற்படும் ?
இதய தசைக்கு போதுமான இரத்தம் செல்லவிடின் இல்லை கொழுப்பு அடைத்து கொண்டால்.

**இரத்தம் சுத்தமாக இருந்தால் கிட்னி ,இருதயம் வேலை பளு குறையும். இருதயம்,கிட்னி வேலை பளு குறைந்தால் அதன் ஆயுள் நீடிக்கும்

** இருதயம் ,கிட்னி நீண்ட நாள் வேலை செய்தால் நமது ஆயுள் நீடிக்கும்

இரத்தத்தை சுத்தமாக் வைத்து கொள்ள இயற்கையாக அத்தி பழாம்,ஆப்பில் போன்ற பழங்களில் மூல பொருட்கள் உள்ளன. இந்த பழா வகைகளில் உள்ள அதே இரத்த விருத்திக்கான மூல பொருட்கள் சில மூலிகைகளில் உள்ளன.

**நெல்லிக்கனி ஒரு அருமையான மூலிகை . இரத்த விருத்தி ,சுத்திகரிப்பு,சீரணம் இன்னும் பல பலன்கள் உள்ளன.அதனால் தான் அதியமானுக்கு அவ்வையார் ஒரு மலை நெல்லி கனியை நீண்ட நாள் வாழ்வதர்காக் கொடுத்தார்.

** ஆக தினமும் ஒரு நெல்லிகாயை நீங்கள் சாப்பிட்டால் இரத்தம் சுத்தமாகுமா ?
அதனால் இருதயமும்,கிட்னியும் அதிக பழுவுடன் வேலை பார்ப்பது தவறிகப்படுமா ?

ஆக இருதயமும் ,கிட்னியும் அதிக நாட்கள் உழைக்கும் .அவ்வாறு உழைத்தால் நமது ஆயுள் கூடும். இந்த மூளிககளில் உள்ள வேதி , மூல பொருட்கள் உடல் பாகங்களின் வாழ்நாளை ,செயல் திறனை கூட்டி நமது ஆயுளை , இயற்கை மரண நாட்களை நீட்டிப்பு செய்கின்றன

உணவே மருந்து !!

முக்கனிகளில் ஒன்றான மாம்பழம் -------------------------------
* புற்று நோய் எதிர்ப்பு சத்து உள்ளது
* இது ஒரு Anti oxidant , உடலில் உள்ள நச்சுத் தன்மையை குறைக்க வல்லது
* இரத்தத்தில் கொலச்ட்ராலை குறைத்து இரத்த அழுத்தம் , இருதய நோய்கள் வராமல் தவிர்க்க வல்லது
* இரும்பு சத்து அதிகம் அதனால் "அனிமியா -குறைவான ரத்த சிவப்பு அணுக்கள் " நோய்க்கு நல்ல marunthu
* செரிமானத்தை சீர் செய்ய வல்லது
* தசைபிடிப்பு போன்ற பிடிப்புகளுக்கும் , சில தோல் வியாதிகளுக்கும் நல்லது

ஆதலால் நண்பர்களே மாம்பழ்தை போட்டு தாக்குவோம் .. நம்ம மக்கள் எத சாபிடாலும் சூடு ன்னு சொளுரான்களே !!

பலா பழம்!!

*'பலா'வில் பொட்ட்சிய சத்து அதிகம் உள்ளதால் இரத்த கொதிப்பை குறைக்கும்
* இது புற்று நோய் எதிர்ப்பு சக்தி மிகுந்ததாகவும் , அல்சர் குறைக்கவும் , மூப்பு
தோற்றத்தை குறைக்கவும் வல்லது
* தோல் நோய்களுக்கு , ஆஸ்துமாவுக்கும் நல்ல நிவாரணி .
* இதன் வேரிலிருந்த் எடுக்கபடும் மருந்து காய்ச்சலுக்கும், வயிற்று போக்குக்கும் மருந்தாக
பயன் படும்

நூறு கிராம் சுளையில் எவ்வளவு சத்து

Nutrition chart (Amount in 100 grams of edible portion)

ENERGY (kilocalories) 94
----------------------------
WATER (grams) 73.23
FAT (grams) 0.3
PROTEIN (grams) 1.47
CARBOHYDRATES (grams) 24.01
FIBER (grams) 1.6

VITAMINS : Fat Soluble
-----------------------------
Vitamin A (mcg-RAE) 15

Water Soluble
-------------------
Vitamin C (mg) 6.7
Riboflavin (mg) 0.11
Pyridoxine(B6) (mg) 0.108

MINERALS(mg)
-------------------
Calcium 34
Iron 0.6
Magnesium 37
Phosphorus 36
Potassium 303
Sodium 3
Zinc 0.42
Copper 0.187
Manganese 0.197

நண்பர்களை வெறுபெற்றுவது (கலாய்ப்பது) எப்படி?

முன்னணி தினசரியில் இது சம்பந்தமாக ஒரு கட்டுரை ரசிக்கத் தக்க வகையில் வந்தது .. உங்களுக்கு தெரிந்த சில வழிமுறைகளை சொல்லுங்கள்

நடுநிசி 2 மணிக்கு போன் செய்து "என்னடா அதுக்குள்ள தூங்கிட்ட? குருவி படம் பாத்தியா? okda குட் நைட் " என்று தொடர்ச்சியாக மூன்று நாட்கள் முயற்சி செய்யுங்கள்.. உங்கள் அழைப்பை அதன் பின் எப்போது கண்டதுமே நண்பர் ஒரு வித கலவரம் கலந்த 'திகில்' அடைவார் ..
**இது உயிர் தோழனிடம் சோதித்து வாங்கி கட்டிக் கொண்ட முயற்சி
* ஒரு கேள்வியை நண்பர் கேட்டால் அதற்கு ஒன்பது பதில்களை கொடுங்கள் இல்லையெனில் ஒரே பதிலை நீளளளளளளளளளமாக கொடுங்கள் கேட்ட கேள்வியை மறந்து நண்பர் முறைப்பது அலாதியாக இருக்கும்

* நண்பர் ஏதாவது சீரியஸாக சொல்லும் பொது முகத்தை கவனிப்பது போல் வைத்து கொண்டு வேறு எதையாவது நினைத்து கொண்டு பின் நண்பர் சொல்லி ஓய்ந்ததும் "எங்க திரும்ப சொல்லுன்னு" ஒரு குண்டை போடுங்கள். நண்பர் காலி

கேள்விகளால் 'துளைத்து' எடுங்கள். ஒரு மூன்று டஜன் கேள்வியை யோசித்து வைத்து கொள்ளுங்கள்.

எப்படி இருக்க ? வீட்ல எல்லாம் சவுக்கியமா ? வேலை எப்படி போகுது ? மூணு வேலையும் ஒழுங்கா சாபிடுரீய ? நு ஆரம்பிச்சு நண்பர் ரொம்ப பாசக்கார பயால இருக்கானே நினைச்சிகிட்டு இருக்கிறப்ப திடீர்னு "கிர்ச்சாப் law" நா என்னனு கேளுங்க அது தெரியாட்டி " moore's law " ந என்னனு கேளுங்க.இப்படியே 'கஜகிச்தானோட' பிரதமர் யாருன்னு கேளுங்கள்

நண்பர் முகம் வெளுரி ஓட்டுரனு தெரிஞ்சிகிட்டு அடிக்க வருவது அலப்பறையான விஷயம்

காலத்தால் அழியா திரைப்படங்கள்..

தெனாலி ராமன்

நகைசுவையும்,வரலாறும்,விகடமும், இனிய பாடல்களும், நிறைந்த நடிப்புத் திலகம் சிவாஜியின் நடிப்பில் வெளி வந்த "தெனாலி ராமன்"

குறிப்பு: விளம்பர பக்கத்தை புறக்கணிக்கவும்

நேரடி பார்வைக்கு
---------------------
http://www.megavideo.com/?v=0TO34A40
http://www.megavideo.com/?v=ZFEDV52U
http://www.megavideo.com/?v=1TA547C5
பதிவிறக்கம் செய்ய
----------------------
http://www.megaupload.com/?d=R7U8NFJX
http://www.megaupload.com/?d=APOXTVLP
http://www.megaupload.com/?d=774J273B

தசா அவதாரம் (புராணம் )

http://www.megavideo.com/?v=W34WCEZQ
http://www.megavideo.com/?v=MM4IDH8A

பதிவிறக்கம்
--------------
http://www.megaupload.com/?d=6GAE28NI
http://www.megaupload.com/?d=28O537L5
http://www.megaupload.com/?d=6OSTFJUQ

தெனாலி ராமனில்..

விஜய நகர பேரரசை ஆளும் ராயர் அரசவையில் தெனாலி அரசனின் அன்புக்கு பாத்திரம் ஆனதை பொறுக்காமல் இராஜ குரு நம்பியார் செய்யும் சூழ்ச்சிகளை , ராயர் அரசவைக்கும் வரும் பல தேசத்து ஆணவம் கொண்ட பண்டிதர்களை தெனாலி எப்படி விகடத்தால் சமாளிக்கிறான் என நகை சுவையாக , ராயரை வீழ்த்த நாவாப்புகள் செய்யும் சூழ்ச்சி என நகர்கிறது கதை .

குறிப்பாக
** யானைகளை சமமாக பங்கு பிரித்து கொடுக்கும் காட்சி
**எதையும் எழுதும் ஒரு பண்டிதரை "டூர்,டூர் என மாடுகள் ஒட்டி" என பாடி சிரமத்தில்
ஆழ்த்தி தோற்கடிப்பது
**பெரிய கவியை "தித்தித்ததோ திதி" என ஈற்ரடி சீர் கொடுத்து திணற செய்து வெல்வது
**காசி பண்டிதரை "திலகாஷ்ட மகிஷா பந்தனம் " காவியம் படிக்க சொல்லி அவர்
ஆவணத்தை அழிக்க செய்து விஜய நகார புகழை காப்பது
** யானையிடம் இருந்து சிர சேதம் ஆகாமல் தப்பாது

இப்படி நகை சுவையாக நேரம் செல்வதே தெரியாமல் செல்லும் அருமையான வரலாற்று படம்
தசா அவதாரம்
இறைவனின் பத்து அவதார வடிவின் புராண கதைகளின் திரை கதை வடிவம். புராணத்தின் மீது நாட்டம் இருப்பின் அதிக நேரம் செல்லும் கதையை ரசியுங்கள்

கத்து குட்டிகளிடம் சிக்க போகும் தங்கத்தின் விலை!

சில மாதங்களுக்கு முன்பு இந்திய பங்கு சந்தை பெருமளவில் சரிந்து பலரை நட்டத்தில் தள்ளியது . எல்லாம் அந்நிய முதலீட்டாளர்களின் கைவரிசை .. ஏகத்துக்கும் மும்பை பங்கு சந்தையில் முதலீடு செய்து பங்கு சந்தையில் காளை ஆதிக்கத்தில் (ஏறுமுகமாக ) இருப்பது போல் மாயையை ஏற்படுத்தி பல சிறு இந்திய முதலீட்டாளர்களை முதலீட்டு செய்ய வைத்து சந்தை உயர்ந்ததும் திடீரென் பணத்தை எடுத்து சென்று விடுவர் இந்திய பங்கு சந்தையும் நட்டத்தில் செல்லும் ..

இப்படி மேலும் கீழும் செல்லும் இந்திய பங்கு சந்தையில் சூடு பட்டு கற்று கொண்ட பல சிறு முதலீட்டார்கள் இப்பொது முதலீட்டு செய்ய துவங்கி இருப்பது தங்கத்தில் மீது .. தங்கம் பெருமளவில் நட்டத்தையும் , மிக பெரிய இலாபத்தையும் கொடுக்கா விட்டாலும் கூட பாதுகாப்பான முதலீடு ...

இன்று தங்கத்தில் பங்கு சந்தையில் முதலீடு செய்வது மிக எளிது . புற்றீசல் போல் வளர்ந்து இருக்கும் பல பங்கு சந்தை ஏஜெண்டுகள்
(iciici direct,sharekan,abn amro etc) ஆண்லைன் முதலீட்டு முறையை அறிமுக படுத்தியுள்ளனர் .. யார் வேண்டுமானாலும் எளிதாக ஆன்லைன் மூலம் முதலீடு செய்யலாம் ..

ஆக் இன்று பங்கு சந்தையில் புதிதாக் முதலீடு செய்ய வரும் கத்து குட்டிகள் பலர் தங்க பங்குகளை வாங்க ஆரம்பித்து விட்டனர் .. பொருலாஃதரதில் உள்ள முக்கிய கோட்பாடு தேவை அதிகரிக்கும் பொது விலை ஏற்ற துவங்கும் . இந்தியாவில் தங்கத்தின் விலை இன்று ஒரு கிராமுக்கு Rs 13,000 வரை(24 crt) உயர்ந்து நிற்கிறது ..

இதிலும் அரசாங்கம் அலட்சியம் காட்டுகிறது , உண்வு தானியங்கள் ஆன்லைன் வர்த்தகத்தால் விலை உயர்ந்து நிற்பது போல தங்கத்தின் விலையையும் உயர விட்டு பாமரர்கள் தங்கத்தை கனவில் மட்டும் காணும் நிலைக்கு இட்டு செல்ல போகிறது ..

தங்கம் விலை இந்தியாவில் உயர போகிறது உஷார் ..

'மா' மன்னா நீ ஒரு 'மாமா' மன்னா !!

மாமன்னா நீ ஒரு 'மாமா' மன்னா
பூமாரி தேன்மாரி நான் பொழியும் நீ ஒரு 'முல்லமாறி'
அரசியலில் நீ தெள்ளியதோர் 'முடிசெருக்கி'
எதிர்த்து நிற்கும் படைகளை நீ 'புண்ணாக்கு'
அகிலத்தை அடை காக்கும் 'அண்டங்காக்கையை'

இருபத்தி மூன்றாம் புலிகேசியில் படத்தில் இந்த பாடல் மிக பிரபலம். அதாவது ஒருவரை இகழ்வது போல் புகழ்வது. திரை படத்தில் நகை சுவைக்கு இந்த வஞ்ச புகழ்ச்சியை வைத்து போல் தமிழ் பாடல்களில் அக்கால புலவர்கள் செய்யும் வித்தைகள் பல.

பழிப்பது போல் புகழ்வது , இரு பொருள் பட சிலேடையாக கூறுவது ,பாடலின் முதலும் முடிவும் கேட்டு பாடுவது, அகர,தகர வரிசையில் பாடுவது , வல்லினம் ,மெல்லினம் ,இடையினம் அமைய பாடுவது என படிபதறகு ஆர்வம் அளிக்கும் வகையில் பாடுவர். இந்த வகையில் அக்காலத்தில் "பாலபத்திர ஓனான்டியாக" இந்த வித்தைகளை செய்தவர் "காளமேக புலவர்"
அவர் மற்றும் வேறு சில புலவர்கள் இருப்பின் "இகழ்வது போல் புகழ்ந்து" பாடிய பாடல்களை இங்கு பதிவோம்


அப்பன் இரந்துண்ணி ; ஆத்தாள் மலை நீலி
ஒப்பரிய மாமன் உறி திருடி ; சப்பைகால்
அண்ணன் பெரு வயிறன் ஆறுமுகத்தானுக்கு இங்கு
என்னும் பெருமை இவை

காளமேக புலவர் சிவனை இரந்து உண்ணுபவர் என்றும் பார்வதியை மலை நீலி எனவும் , உறி திருடி என பெருமாளை , பெரு வயிறன் என விநாயகரை சொல்லி இவர்கள் முருக பெருமானுக்கு உறவுகள் என்கிறார் . இந்த பாடலை பார்த்தல் இவர் முருகன் குடும்பத்தை இழிவு படுத்துவது போல் தோன்றும் அனால் இது பெருமைகளை பழிப்பது போல் சொல்வது

கண்டீரோ ? பெண்காள் கடம்பவனது ஈசனார்
பெண்டீர் தமைச்சுமந்து பித்தனார் எண்சிதைக்கும்
மிக்கான தங்கைக்கு மேலே நெருப்பை இட்டார்
அக்காளை எறினாராம்

சிவபெருமானை மிக அசிங்கமாக திட்டுவது போல் இருக்கும் அனால் இது மதுரையில் இருக்கும் மீனாட்சி மணவாளன் சொக்கநாதரை பற்றி பாடியது

வாதக்கால் ஆம்தமக்கு மைத்துனர்க்கு நீரழிவு ஆம்
பேதப் பெரு வயிறு ஆம் பிள்ளை தனக்கு!- ஓதக் கேள்
வந்த வினை தீர்க்க வகை அறிவர் வேறூரார்
எந்த வினை தீர்ப்பார் இவர்

சிவனின் ஒற்றைக் கால் நடனத்தையும் , பாற்கடல் பரந்தாமனையும் , விநாயகரையும் இகழ்ந்துரைப்பது போல் வைதீஸ்வரன் திருகோயில் வைதீசுவர் புகழ் பாடுவது

சுற்றித் திரியும் பேய்கள் !!

நகர்புரத்தில் வாழும் யாரிடமும் பேய்,பிசாசு இருக்கிறதா என்றால் உடனடி பதில் "இல்லை" என வரும்.

ஆனால் கிராம புறங்களுக்கு சென்றால் ஊர் ஊருக்கு கிராம பெரூசுகளில் இரூந்து ,சிறுவர் வரை பல பேய்களை (கதைகளை ) உலவவிட்டு கொண்டிருப்பர்.ஊர் ஊருக்கு ஒரு இடிந்த பேய் வீடு ,என்றோ எவனோ தூக்கு போட்டு மாண்ட புளியமரம் , முனி இருப்பதாக கூறும் "ஒத்த பனை மரம்" என பீதியை கிளப்புவார். சிலர் பேய்களை ,முனியை நேரில் கண்டு மீண்டதாக 'திகில்' அனுபவத்தை கூறுவார்.

எனக்கு பரிச்சயமான கிராமத்தில் ஒரு சாலையோர கிணறு உள்ளது.அதில் ஒரு பெண் குழந்தைகளுடன் குதித்து தற்கொலை செய்து கொண்ட நாள் முதல் இரவானால் அந்த கிணற்றை தனியாக கடக்காமல் பொறுத்து இருந்து அவ்வழியே செல்வோர் "குரூப்பாக" கடப்பார். ஏன் என்றால் அந்த கிணற்றில் இரவானால் அழுகை சத்தம் கேட்பதாக ஒரு புரளி ..

கிராமத்தில் அல்லது புற நகர் பகுதியில் உள்ள பெண்களுக்கு மட்டும் அநியாயத்துக்கு பேய்கள் பிடித்து கொண்டு ,தலை விரி கோலமாக பேயாட்டம் போட்டு கொண்டு இருப்பார்.இன்று தகவல் தொழில் நுடம் சார்ந்த இன்ன பிற துறைகளில் கற்று தேர்ந்த பெண்களுக்கு நான் கண்ட வரை பேய் பிடிதது இல்லை ,அது போல் நகர் புறங்களில் அடுக்கு மாடி குடியிருப்புகளில் வாழும் பெண்களுக்கோ,ஆண்களுக்கோ பேய் பிடிப்பதில்லை ..

உங்களுக்கு தெரிந்த உங்க ஊர் பேய்களை இங்கு உலவ விடுங்கள்,
பேய் இருக்கிறதா ,இல்லையா ?
குறிப்பாக கிராமத்து பெண்களை ஆண்களை பேய்பிடித்து ஆட்டுவது ஏன் ?

விவாதிப்போம் நண்பர்களே

பேய் உலவும் நேரம் இதை தொடர்கிறேன் !!

சில குடும்ப பெண்களுக்கு பேய் பிடித்து ஆடுவதை கண்டு இருக்கிறேன். அவர்கள் அமைதியானவர்களாக இருபினும் பேய் பிடித்து விட்டால் தலை விரி கோலமாக

உதாரணத்துக்கு ஒன்று

" டேய ! நான் தாண்ட புல் அடிச்சு மப்புல ஆடி குப்புற விழுந்து லாரில அடிபட்டு செத்த ராமசாமி" எனக்கு ஒரு குவார்ட்டர் ஊத்துடா என பேய் பிடித்து கூறுவதையும், சாராயம், சிகரட் என அந்த பெண்கள் கேட்டு வாங்கி குடிப்பதும் விசித்திரமான ஒன்று. இந்த செய்கையை பார்த்தும் பெரும்பாலானோர்

"ஆமாங்கானே! நம்ம ராமசாமி மாதிரி இந்த பொம்பளை ராவா அடிக்குது இது ராமசாமி பேய் தான் என உச்சு கொட்டுவதையும் காணலாம் "

இது நான் கண்ட நிஜம்!!

என் உறவினர் வீட்டருகே ஒரு புது மண பெண்ணுக்கு பேய் பிடித்து விட்டது. ஏன் என்று கேட்ட பொது அந்த பெண் அதற்கு முந்தய தினம் இரவில் வீட்டிற்கு சந்தையில் இருந்து குறுக்கு வழியில் வந்தாதாகவும் திடீரென்று திடுகிட்டதாகவும் கூறுவார்.

மேற்கொண்டு என்ன பேய் என்று விசாரிக்கையில் அது அவர்கள் வீட்டருகே ஒரு முரடன் புத்தி சுவாதினமில்லா தாயை அடித்து சாக்கில் இட்டு அந்த குறுக்கு பாதையில் பட்டாசு ஆளை கழிவுகளை எரிக்குக் போது கொழுந்து விட்து எரியும் தீயில் இட்டு கொன்றதாக சொல்லி அந்த பெண்ணுக்கு பிடித்து அந்த தாயின் பேய் என சொல்லினர்.

அந்த பேய் பிடித்த பெண்ணும் அந்த புத்தி சுவாதினமிள்ள பெண்ணை போல நடந்து ,ரிபன் அணியாத அந்த புது மண பெண் பேயை போல சிவப்பு கலர் ரிப்பன் தான் வேணும் என அடம் பிடித்து வாங்கியதாக கூறினர்.இதை கேட்ட போது எனக்கும பேயின் மீதான் பீதி தொற்றியது.

பேய் இருக்கிறதா ?
எதற்கு பேய் பிடித்தவர்கள் பேயாக உள்ளவர்களை போல் பாவனைகள் செய்ய வேண்டும் ? இல்லை இது "சந்திரமுகி" படத்தில் வருவதை போன்ற குறுகிய கால மன வியாதியா ?

அதாவது ஒரு நிகழ்வை செவி வழியாக கேட்டு அதற்கேற்றார் போல் பாவனை செய்யும் மண வியாதியா இந்த "பேய் ஆட்டம்".

நோஞ்சான ஆக இருக்கும் பெண்கள் கூட பேய் ஓட்டும் போது பெரும் கல்லை தூக்கி கொண்டு ஓடி அந்த பேய் பிடித்த இடத்தில போடுவது வியப்பானது. அவர்கள் உடலில் அந்த முரட்டு பேய் பலம் எவ்வாறு வருகிறது ?
ஜூவி யில் ஒரு கட்டுரை வந்தது சமீபத்தில் ஒரு கிராமமே "தண்ணீர் கேட்டு கதவை தட்டும் பேய்" பீதியால் உறைந்து போய் இருப்பதாக.

த்டீறேன்று வீடுகளின் கதவுகள் தண்ணீர்,தண்ணீர் என கேட்டு தட்டபடுவதாகவும்.கதவை திறந்து பார்தால் யாரும் இருப்பதில்லையாம். அதனால் ஒட்டு மொத்த ஊரும் இரவானால் கதவை தாளிட்டு யார் கதவை தட்டினாலும் திறபதில்லையம்.

இதில் கொடுமை என்ன வென்றால் இந்த பீதி பரவிய சமயம் பார்த்து அவூருக்கு ஊசி,மணி விக்க வந்த ஒரு முதிய பெண்மணி தண்ணீர் தாகத்துக்காக ஒரு சிலர் கதவை தட்ட அனைவரும் இது பேய் என கதவை நன்று தாளிட்டு கொண்டனாராம்..

ஆக்ஷனில் இறங்கும் ஜூவி உளவியல் நிபுணரை அழைத்துக் கொண்டு அந்த கிராமத்துக்கு சென்று விசாரித்து கதவை தட்டி தண்ணீர் கேட்டு ஒடி விடுவது எதோ ஒரு விஷமக் காரர்களின் குறும்பாக இருக்கலாம் இல்லை மன வளர்ச்சி குன்றிய ஒருவரது செயல் ஆக இருக்கலாம் என கூறி மக்களிடம் விliபுனர்வை ஏற்படுத்திய முயன்றுள்ளனர்

ஆக உளவியல்,அறிவியல் படி பேய்கள் இல்லவே இல்லை என ஓங்கி கூறுவார். அனால் இந்த பீதி கண்ட மக்கள் கூறும பேய் கதைகள் நமக்கு கிளியை ஏற்படுத்தும்.

அதை விட கொடுமை இந்த பேய் ஓட்டும் கோடாங்கிகள். பேய் பிடித்தவரை "அடி அடியேன் அடித்து உதைத்து" துன்புறுத்துவது. காலம் காலமாக் இந்த அதிரடி வைத்தியம் தான் பேய்கள் பலனவை விரட்டி உள்ளன இதற்கு மாற்றாக உளவியலில் துன்புறுத்தாமல் குறுகிய சித்த பிரம்மையை போக்க வழிமுறைகள் உள்ளனவா ?

**குறிப்பாக கிராமத்து பெண்களை ஆண்களை பேய்பிடித்து ஆட்டுவது ஏன் ?
**எதற்கு பேய் பிடித்தவர்கள் பேயாக உள்ளவர்களை போல் பாவனைகள் செய்ய வேண்டும் ?
**நோஞ்சான ஆக இருக்கும் பெண்கள் உடலில் அந்த முரட்டு பேய் பலம் எவ்வாறு
வருகிறது ?
**பேய் பிடித்தவரை "அடி அடியேன் அடித்து உதைத்து" துன்புறுத்தாமல் குறுகிய சித்த
பிரம்மையை போக்க உளவியலில் வழிமுறைகள் உள்ளனவா ?


இந்த பேய்களுக்கு அடுத்ததாகா கிராமத்து மக்களிடையே இருக்கும் ஒரு நம்பிக்கை

"சாம கோடாங்கி " வாக்கு
"காலகண்டன்" வாக்கு

கோடாங்கி அனைவருக்கும தெரிந்திருக்கும் "காலகண்டன்" கிராமங்களில் அறுவடை முடிந்த சமயம் இரவில் வரும் ஒரு உருவம். சுடுகாட்டு சாம்பலில் பிரண்டு எழுந்து வரும் இந்த கால்கண்டனை பற்றி பல கதைகள் உள்ளன கிராமங்களில். இந்த கால கண்டனும் நடு நிசியில் வீடுகளின் முன் சென்று குறி சொல்லுவான் .. அவன் சொல்லும் வாக்கு பலிப்பதாக ஒரு ஐதீகம்

இக் கட்டுரையின் நோக்கம் கிராமத்து மக்களிடையே ஊன்றி விட்ட சில அசட்டு நம்பிக்கைகளை ஆராய்ந்து , அவற்றிகாந தீர்வுகளை விவாதிக்க

சாமக் கோடாங்கி!

சாமத்துல "சக்கம்மா வாக்கு சொல்றா" "நல்ல காலம் கூடிவருமுனு கூவி சொல்றான்னு " நல்ல காலம் பொறக்குது அம்மா தாயேநு" ஒரு குருப் கையில குடு குடுபையா வைச்சிகிட்டு சுத்துவாங்க.

இந்த சாமக் கோடாங்கிகளுக்கு அது ஒரு பரமபரை தொழில் . நான் கேள்வி பட்டவரை அவங்க தேனீ,வடுகபட்டி பக்கம் உள்ள "கம்பலத்து நாயக்கர்" இன மக்களாக் இருபார். இவர்கள் பரம்பரை படி அவர்கள் குடும்பத்தில் ஒருவராவது குறி சொல்ல செல்லனும். அதனால் ஒரு சில கோடங்கிகள் வசதி இருப்பினும் பாரம்பிரிய முறைப்படி "சாமத்துல குறி சொல்ல கிளம்பிடுவாங்க " .இவர்கள் கெட்டப் வித்தியாசமாக் இருக்கும் , முறுக்கு மீசையுமாக, கையில் தடியுடன், பழைய துணி மூட்டையுடன் , நெற்றியில் பெரிய பொட்டுமாக மிரட்சி கொடுக்கு விதத்தில் இருப்பார்

தெருவுல பின்னிரவு ஒரு மணிக்கு சாமக் கோடாங்கி குடு குடுப்பை சத்தமும் , நாய்கள் குறைகிற சத்தமும் கேட்டா எல்லா கிராம மக்களும் தூக்கதுல எழுந்து வந்து கதவுக்கு பின்னாடி வந்து ஒட்டு கேட்பானுக. சாமக் கோடாங்கி சொல்ற வாக்கு பழிக்குமா.

இந்த குறி சொல்ற சாமக் கோடங்கி எதையும் குறிப்பிட்டு சொல்லாம ஒரு 'புதிர்' மாதிரி சொல்லிட்டு போவான். அந்த புதிருக்கு ஆளாளுக்கு வீட்ல ஒரு அர்த்தம் எடுத்துகிட்டு அன்னைக்கு இரவு முழுக்க தூங்க மாட்டாய்ங்க. பெரும்பாலும் நல்ல குறியை மட்டும் சொல்ற கோடாங்கி ஒரு சில வீட்டுக்கு மட்டும் சோகமாந குறியை சொல்லிட்டு போவான்.
அப்படி ஒரு துர் செய்தியை கோடாங்கி சொல்லிடான்ன போதும அந்த வீடே அழுது வடியும்.

இரவு முழுவது வீடு வீடாக குறி சொல்லி செல்லும் கோடாங்கி மறு நாள் காலை அதே வீடுகளுக்கு காணிக்கை வாங்க வருவான் . நல்ல செய்தி சொன்னா வீட்டுல எல்லாம் கோடாங்கிக்கு வெயிட்டான கலெக்ஷன் , துக்க செய்தி சொன்ன வீட்டுல எல்லாம்
பரிகாரம் பண்ண என்ன வழின்னு குடும்பமே சுத்தி உக்காந்துகிட்டு கேட்பாநுக..

ஆக கிராமத்து மக்கள் நம்பிக்கையின் பாத்திரமான இந்த "கோடாங்கி வாக்கு " எந்தளவு உண்மை ?

வசதி இருப்பினும் பிச்சைக்காக இல்லாமல் பாரம்பரிய முறைக்காக சாமத்தில் குறி சொல்ல செல்லும் ஒரு சில கோடாங்கிகளுக்கு உண்மையில் அருள்வாக்கு (predication capbility ) உண்டா ?

காலகண்டன்

தென் தமிழக கிராமங்களில் மக்களை மிரள வைக்கும் ஒரு மனித உருவம் தான் இந்த கால கண்டன் .. கால கண்டன் சாமக் கொடாங்கியை விட அதிக சக்தியை கொண்டவன் எனவும் ,அவன் வாக்கு கண்டிப்பாக பழிக்கும் எனவும் சொல்லுவர் .
இந்த காலகண்டன் சிவனின் அருள் பெற்றவனாக மயானச் சாம்பலில் உருண்டு எழுந்து குறி சொல்ல ஊருக்கு வருவதாக ஒரு நம்பிக்கை .

காலகண்டன் வந்தால் நாய்கள் குரைக்காது எனவும் அவனுக்கு விலங்குகளின் வாயை கட்டி போடும் சக்தி இருப்பதாக ஒரு புரளி .. அதே போல் கால கண்டன் வருகையில் தெருவில் யாரவது தூங்கினால் எழுந்து வீட்டுக்குள் சென்று கதவை பூட்டி கொள்வர் . அவன் பார்வை பட்டால் ஆபத்து என ஒரு வதந்தி உண்டு .

கால் கண்டன் வருவதை அவன் இடும் உரத்த ஓலத்தின் மூலம் தெரு மக்கள் அறிந்து கொள்வர். யாரும் கதவை , ஜன்னலை திறந்து பார்க்க மாட்டார்கள். அவன் மிக வேகமாக் தெருக்களுக்குள் ஓடுவான் .

மயானத்தில் அடிக்கும் மணியை அடித்து கொண்டு ஊளையிட்டு வருபவன் . குறிப்பாக நெல் விளைந்து அறுவடை ஆகும் சமயங்களில் தான் கால கண்டன் வருவான் . கால கண்டன் இரவில் குறி சொல்லி சென்ற பின் மறு தினம் அவன் உறவினர்கள் ஊருக்குள் அரிசி தானமாக வாங்க வருவர் .

என் பள்ளி பருவத்தில் புறநகர் சென்னை இன்னும் சில பகுதிகளில் பரவியதாக கேள்வி பட்ட மற்றொரு பெரிய வதந்தி "தலை இல்லா முண்டம்" .

நான் பத்தாம் வகுப்பு பயிலும் போது மதுரை அருகே திருமங்கலம் நகரில் உள்ள ஒரு கலை கல்லூரியில் தேசிய மாணவர் படை (N.C.C) சார்பாக பத்து தினங்கள் இராணுவ பயிற்சி பெற்ற சமயம் , அந்த கல்லூரி வளாகத்தின் ஒரு பகுதி மயானத்தை ஒட்டி இருந்ததால் பல திகிலான் அனுபவங்கல் ஏற்பட்டன் அதனை காலம் கிடைக்கும் போது பதிகிறேன் ..


N.C.C ராணுவ பயிற்ச்சியின் போது ஏற்பட்ட திகில் அனுபவங்கள்

தேசிய மாணவர் படையின் (N.C.C) ராணுவ பயிற்சி முகாம் மிக கடினமானது . ராணுவத்தின் உள்ள அதே கட்டு கோப்பு , தண்டனைகள் இந்த முகாமிலும் உண்டு. இரு முறை என் பள்ளி பருவத்தில் கலந்து கொண்டுள்ளேன்.

அதிகாலையில் ஐந்து கிலோ மீடர் ஓட்டம் , பின் நூறு மீட்டர் நண்பன் ஒருவனை தோளில் சுமந்து ஓட்டம் , உடற் பயிற்சி என்று ஆரம்பித்து உச்சி வெயிலில் பரேட் நடக்கும் . துல்லியமாக மார்ச் பண்ணும் வரை ராணுவத்தினர் வதக்கி எடுத்து விடுவர் . சிறிது கவன குறைவாக தப்பு பண்ணினாலும் கிரவுண்டை மணி கணக்கில் கையை மேலே தூக்கி சுத்த சொல்வர் .. துப்பாக்கி சுடுதல் , கயிறு ஏறுதல் ,என உடலை வருத்தும் அந்த பயிற்சியின் போது திருமங்கலம் கல்லூரியில் நடந்த அனுபவம் மறக்க இயலாதது

எங்கள் பள்ளி மாணவர்கள் குழு மற்றும் கோவில்பட்டி,விருதுநகர்,சாத்தூர் இன்ன பிற மதுரை வட்டார பள்ளி மாணவர்கள் குழு தங்கி இருந்த வளாகத்தின் ஒரு புறம் மயானம். ஜன்னலை திறந்தாள் மயான கூரையும் , சமாதிகளும் தெரியும் இரவானால் விசித்திரமான் ஆட்களின் நடமாட்டம் மயானத்தில் தெரியும் . பயிற்சியின் போது இரவு ஒவ்வொரு பள்ளியிலும் இருந்து ஒவ்வொரு நாள் பாதுகாப்புக்கு ரோந்து சுற்றி வர வேண்டும். இரவு இயற்கை உபாதைகளை கழிக்க மயானத்தின் குட்டை சுவற்றை ஓட்டினார் போல் நூறு மீட்டர் நடந்து சென்று கழிவறைக்கு செல்ல வேண்டும் ..

இரண்டாம் நாள் பயிற்சி நாளின் இரவில் இருந்து ஆரம்பித்தது பேயாட்டம்... நாங்கள் மூன்றாவது தளத்தில் தங்கியிருந்தோம். இடைப்பட்ட தளங்களில் வேதியியல் ,உயிரியல் ஆய்வகம் உண்டு. மாடியில் இறங்கி வரும் பாதை எதிரே மயானம் மறைப்பு ஏதும் இல்லாமல் தெளிவாக தெரியும் .. கோவில்பட்டி மாணவர்கள் இரவு ரோந்தில் இருந்த போது தான் நடந்தது அந்த சம்பவம் . அவர்கள் முதல் தளத்தில் நிற்கும் போது இரண்டாம் தளத்தில் யாரோ ஓடுவது போல் சத்தம் கேட்கும். இவர்கள் யார் எண்டு கேட்டல் சத்தம் நின்று விடும் .
பின் சிறிது நேரத்தில் மறுபடியும் ஓடும் சத்தம் தொடரும். இவர்கள் விரைந்து முதல் தளத்திற்கு விரைந்தாள் சத்தம் அடங்கி விடும் . அனால் தனியாக எந்த ஒரு மாணவன் முதல் தளத்திற்கு சென்றால் அதோ கதி .. அவர்கள் அலறி அடித்து கொண்டு வருவர் . பின்னர் மறுநாள் காய்ச்சல் வந்து படுத்து விடுவர் யாரிடம் பேச மாட்டார் . ராணுவத்தினர் அவர்கள் வீட்டுக்கு தகவல் தந்து வந்து அழைத்து செல்ல சொல்லுவர். இப்படியாக ஓவொரு நாளும் யாரவது ரோந்து செல்லும் அல்லது இரவு கழிப்பறை செல்லும் இருவர் பேயை பார்த்ததாக பயந்து வீட்டுக்கு செல்வது வழக்கம் ஆயிரு

பேய் பீதி எல்லா மாணவர்களுக்கும் பரவி மாணவர்கள் எல்லாரும் மயானத்தை பார்ப்பதை தவிர்த்தோம் . இரவானால் குழுவாக செல்வது தனியாக மாடிக்கு செல்ல மாட்டோம் . பயிற்சியின் ஏழாம் நாள் இரவு என் நெருங்கிய நண்பனுக்கு வயிறு சரியில்லை வயிற்று போக்கு காரணமாக எங்கள் குழுவில் உள்ள சிலரை இரவு துணைக்கு கழிப்பறை செல்ல அழைத்தான். பேய் நடமாட்டத்திற்கு பயந்து மயானத்தின் கட்டை சுவற்றை ஒட்டி செல்வதற்கு பயந்து யாரும் வரவில்லை .

பின் நான் அவன் துணைக்கு செல்ல முடிவெடுத்து விபூதியை பட்டை அடித்து கொண்டு மாடியில் இருந்து இறங்க ஆரம்பித்தோம் .. மெதுவாக இரண்டாம் தளத்திற்கு வந்த போது எதோ உருளுவது போல் சத்தம் . என் நண்பன் பீதியாகி மீண்டும் மூன்றாம் மாடிக்கு ஓடி விட்டான். நான் சற்று நேரம் அந்த தனிமையில் நின்று உற்று நோக்கினேன் , கை கால் எல்லாம் உதறியது , கழுத்தில் இருந்த டாலரை இறுக்க பிடித்து உரக்க கத்தினேன் யாரது என்று ? கீழே ரோந்து சென்ற உசிலம்பட்டி மாணவர்கள் சிலர் நிலைமை புரிந்து கொண்டு கும்பலாக மேலே வந்து விட்டனர் . அப்போது தான் நிம்மதியே வந்தது .. அவர்கள் என் நண்பனை அழைத்து வந்து கீழே விட்டனர் . பின் நானும் என் நண்பனும் மயான சுவரை ஒட்டி நடக்கா ஆரம்பித்தோம் . நான் பயத்தை போக்க உரக்க பேசி கொண்டு இருந்தேன் . மயானத்தை பார்க்காமல் விரைவாக கழிப்பறை வந்து சேர்ந்தோம். அங்கு மற்றோரூ எதிர்பாராத அதிர்ச்சி காத்து இருந்தது

நீயா.. நானா..

விஜய் தொலைக்காட்சியின் நீயா நானா டால்க் ஷோவை பற்றி சில வதந்திகள் கிளம்பிய போது அதனை பற்றி மேலும் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தின் காரணமாக சில நாட்கள் முன் அதன் அடுத்த கட்ட ஒளிபரபுகளுக்கான சூட்டிங் பிரசாத் ஸ்டுடியோவில் நடை பெற்ற போது அரை நாள் முழுவதும் இருந்து அதை பார்த்தேன்.

பட பிடிப்பு முடிந்த பின் கோபியை சந்தித்து ஒரு இருபது நிமிடம் நிகழ்ச்சியின் விவரம் ,அவர்கள் குழுவின் செயல்பாடுகள் ,எதிர்கால திட்டம் போன்றவற்றை பற்றி பேசிய போது சில தகவல்கள் கிடைத்தன

வதந்திகள் விவரம் :
---------------------------
நீயா நானா முன்னரே அமர்ந்து பேசி ஜோடிக்கப்பட்ட நிகழ்ச்சி --தவறு
கோபி ஒரு முன்கோபி ---தவறு
பேசுவது பெரும்பாலும் கட் செய்ய பட்டு விடும் ---தவறு
குறிப்பிட் சிலருக்கு மட்டும் பேச வாய்ப்பு கிடைக்கும் இன்ன பிற ---தவறு

இந்த வதந்திகள் ஒரு நபர் இணைய தளங்கள் , இமெயில் மூலம் கிளப்பி விட்டது ..

உண்மை நிலவரம் :
--------------------------

**நீயா நானா முற்றிலும் நேரடியான ஒரு டால்க் ஷோ
**கோபி எளிமையான நபர் .. எளிதில் பழகும் குணாதிசியம் கொண்டவர் ,நகைசுவை விரும்பி .
**அளவுக்கு மீறி பேசினால் , குறிப்பாக தனி மனித ,தனி பட்ட நிறுவன தாக்குதல் இருந்தால் மட்டும் எடிட்டிங்கில் கட் செய்கின்றனர்
**பேச வாய்ப்பு நீங்கள் எவ்வளவு ஆர்வமாக முயல்கிறீர்கள் என்பதை பொறுத்து மட்டும் கிடைக்கிறது

நீயா நானா குழுவின் அபார உழைப்பு பாராட்டத்தக்கது . ஒரு இயக்குனர் ,சில உதவி இயக்குனர்கள் , கோபி , கள பணியாளர்கள் என பம்பரமாக சுழன்று பட பிடிப்பில் பணி புரிகின்றனர்.

இன் நிகழ்ச்சியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம் திரைக்கு பின்னால் இருக்கும் இயக்குனர்,கோபியின் பேச்சு திறமை எனில் மிகையாகாது .

ஷோவுக்கு பேச்சு திறன் உள்ள ஆட்களை தேர்வு செய்ய தனி குழு .. தலைப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அந்த தலைப்புகளுக்கு சம்பந்தமாக நிறைய கற்று கொள்கிறார்கள் . சில சமயம் துறை சார்ந்த நிபுணர்களை அழைக்கிறார்கள் .

மாதத்தின் ஒரு குறிபிட்ட தினங்களில் மட்டும் அந்த ஒரு மாதத்துக்கான நிகழ்ச்சிகளை தொடர்ச்சியாக இரவு பகல் உழைத்து படம் பிடித்து வைத்து கொள்கின்றனர் .
பெரும்பாலான தலைப்புகள் சுருதி குறைந்து செல்லும் அப்போது பல வழிமுறைகளை கையாண்டு எப்பேர்பட்ட சப்பையான தலைப்பாக இருந்தாலும் சுவாரசியமாக கையாண்டு அதன் சுருதியை ஏற்றி விடுகின்றனர் .
ஆறு கேமராக்கள் பட பதிவிற்காக .. எந்த ஒரு தலைப்பும் பட பதிவின் பொது இப்படி தான் செல்லும் என்பதை நிர்மாணிக்க முடியாமல் அங்கும் இங்கும் அலை பாய்ந்து செல்கிறது .. ஒரு சிலர் பந்தா விடுவதும , வேறு சிலர் உணர்சிவசபடுவதும் ,கூச்சலிடுவதும் என நேரடி படபதிவில் இடையூறுகளை உருவாக்குகின்றனர் ..

கோபி நன்றாக சிண்டு முடியும் கலையில் தேர்ந்தவர்ராக் இருக்கிறார்l . இரு அணியையும் சீண்டி விட்டு மாறி மாறி சூடான விவாதங்களை கிளப்பி விடுகிர்றார் .. அதே சமயம் பட பிடிப்பு முழுவது கோபி தானாகவே கையாள்வதில்லை அவர் காதில் இருக்கும் சிறு மைக்ரோ ஸ்பீக்கர் வழியாக இயக்குனர்கள் குழு கேள்விகளை ,பாய்ண்டுகளை எடுத்து கொடுக்கின்றனர் . ஆக கோபி ஒரே சமயத்தில் அணியினர் பேசுவதையும் , இயக்குனர் இடம் இருந்து ஹெட் போனில் வரும் கருத்துகளையும் கேட்டு அதற்கேற்றார் போல நிகழ்ச்சியை நடத்தி செல்கிறார்
அவரிடம் பேசியதிலிருந்து சமுதாயத்தின் நிஜ பிரச்சனைகளை
வெளிச்துக்கு கொண்டு வருவது, அதனை முற்றிலும் ஒரு நேரடி டாக் ஷோவாக மட்டும் கொண்டு செல்வது , அவர்கள் குழுவின் மீது அவர் வைத்திருக்கும் நம்பிக்கை , இயக்குனர் ,தயாரிபளரிடம் வைத்திருக்கும் ஒரு நல்ல புரிதல் மூலம் குறுகிய காலத்தில் நல்ல பெயரை ,புகழை பெற்று இருக்கிறார் . தொடர் பட பிடிபானாலும் கடுமையாக உழைக்கிறார், பேசி கொண்டே இருக்கறார் ..

அவர் இதற்கு முன்பு ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பனி புரிந்துள்ளதாக் தெரிகிறது , தகவல் தொழில் நுட்பம் சார்பாக நிறைய தெரிந்து வைத்துள்ளார்
. ஆர்குட் ப்ரோபைல் வைத்துள்ளார் . ஆனால் சில சமயம் மட்டும் ஆர்குட் வந்த பார்ப்பதாகவும் , பெரும்பாலும் இமெயில் மட்டும் பர்ர்பதாகவும் , அவர் பெயரில் உள்ள ஆர்குட் கம்யூனிடிக்கு சில சமயம் வந்து பார்ப்பது போலவும் கூறினார் . அனால் அவர் குழு உறுப்பினர்கள் பலர் ஆர்குட்டை அதிகம் உபயோகபடுதுகின்ரானர் போல ... அவர் எதிர் கால திட்டமாக் ஒரு பயிற்சி நிறுவனம் அமைக்க உள்ளார்

மிக நல்ல நம்பகமான,சமுதாய பிரச்சனைகளை அலசும் நேரடியான ஒரு டாக் ஷோ .. விரும்பி பாருங்கள் .

இந்தியாவில் சமயங்கள் வளர்க்கப்பட்ட வரலாறு..

இந்தியா எம்மதமும் சம்மதம் என உலகின் அமைதிக்கு , பல மதத்தவர் ஒற்றுமையாக சகோதரத்துவமாக வாழும் நாட்டுக்கு ஒரு உதாரணம் .
இபேர்பட்ட பெருமை வாய்ந்த இந்தியாவில் இந்து,கிறிஸ்தவம்,இஸ்லாம், பவுத்தம்,ஜெயின் இன்ன பிற மதங்களும் அதனை தழுவிய மக்களும் உள்ளனர். உலகின் பல சமயங்களும் இந்தியாவில் இருந்து சென்ற நல ஒழுக்க கோட்பாடுகளின் சாராம்சம் என்ற ஒரு கருது பரவலாக உண்டு.

இந்தியாவில் மிக பழைமையான வரலாறு உண்டு , இயேசு ,நபிகள் என்ன பிற மதங்கள் தோன்றும் முன்னே மிக தொன்மையான கலாச்சாரங்களை ,நாகரீகங்களை, வாழ்வியல் நெறிகளை கொண்ட நாடு இந்த புண்ணிய நாடு . இபேற்பட்ட இந்தியாவில் இன்று மதத்தை வைத்து ஒட்டு வியாபாரமும் , தொன்மையான சமய மக்களை பிற மதங்களுக்கு மாறும் செயலும் சர்வ சாதாரணமாக உள்ளது . இங்கு யார் எந்த சமய கோட்பாடுகளை வேண்டுமானாலும் விரும்பி பின்பற்றலாம் அதற்கு சட்டங்கள் எந்த குறுக்கீடும் செயாது. இந்த சுதந்திரம் தவறாக உபயோகபடுதபடுவதாக சில கண்டனங்கள் எழுவது உண்டு

இந்தியா என்னும் பெயர் பெருவாரியாக இந்து சமய மக்கள் வாழ்ந்த மதத்தில் இருந்து தருவி இருக்கலாம் இல்லையேல் சிந்து சமவெளியை வைத்து வந்திருக்கலாம் எனவும் இந்துஸ்தான் என முன்னர் அறியப்பட்ட நாடாகவும் இருந்திருக்கலாம் என்பர்.
இந்த பெருமைகளை உடைய இந்தியாவில் பல்வேறு அந்நிய படை எடுப்புகளும், அயல் நாடுகளுடன் வியாபார பரிவர்த்தனைகள் ஏற்பட்டு அதன் விளைவாக நாடே அடிமைப்பட்ட வரலாறும் உண்டு. இந்தியாவில் தொன்மை காலம் தொட்டு வாழ்த்த மக்கள் வழிபாடு முறைகள் , வாழ்க்கை கோட்பாடுகள் என்ன ? அவை காலத்தின் கோலத்தால் எவ்வாறு மாறுதல் கண்டன ? மக்கள் மீது படையெடுப்பால் திணிக்கப்பட்ட மத கோட்பாடுகள் யாவை என்பன பற்றி இந்த இழையில் நமக்கு தெரிந்த , பார்த்த ,கேட்ட கருத்துகளை அனைவரும் பதிவோம்
இந்துமதமானது இந்தியாவில் மக்கள் கலாசாரங்களை ஒட்டி , இயற்கை வழிபாடு முறைகளை மூலமாக கொண்டு தோற்றுவிக்கப்பட்டு மக்கள் செம்மையாக வாழ வாழ்வியல் நெறிமுறைகளையும் ,அரிய பல கருத்துக்களையும் கொண்டு பல வேந்தர்களால் பேணப்பட்ட ஒரு மதம்.

தொன்மையான இந்தியாவும் இந்து சமயமும் இரண்டற கலந்தவைகள். இந்து சமய கோட்பாடுகளை கொண்டு வாழ்ந்த மக்கள் கால போக்கில் எவ்வாறு பிற சமய கோட்பாடுகளை ஏற்று அதனை தழுவினர். தானாக விரும்பி சென்றனரா ? இல்லை வன் திணிப்பாக பிற மத கோட்பாடுகளை இஸ்லாமிய மன்னர்கள் நாட்டை கைபற்றிய போது மாறினரா இன்ன பிற தகவல்களை பார்போம்

கிறிஸ்தவ மதம் இந்தியாவில் காலூன்றிய விதம்

இந்தியாவில் தற்போது உள்ள மூன்றாவது பெரிய சமயமான கிறிஸ்தவம் காலூன்றிய முறையை காண்போம்


இந்தியாவில் மேற்கு கடற்கரையில் வணிகத்திற்காக வந்து இறங்கியா அயல் நாட்டினர் படி படியாக தங்கள் சமய கோட்பாடுகளை இந்தியாவில் போதித்தனர் ..இப்படி வளர தொடங்கிய கிறிஸ்தவ மதமானது இன்று இந்தியாவில் கிட்டதட்ட மூன்று கோடிக்கும் மேற்பட்ட கிறிஸ்து அன்பர்களை கொண்டு உள்ளது ..

இந்தியாவில் கிறிஸ்தவம் மதம் பரவிய முறை , பரவ காரணமான பாதிரியார்கள், கிறிஸ்தவ கோட்பாடுகளை பரப்ப நிர்மாணிக்கப்பட்ட குழுக்கள் , அறக்கட்டளைகள் என சிலவற்றை காண்போம் . பின்னர் தானே பரவிய சமய கோட்பாடுகளுக்கும் பரப்பப்பட்ட சமய கோட்பாடுகளுக்கும் மக்களிடையே உள்ள தாக்கங்களை பார்போம்
இந்தியாவில் கிறிஸ்தவ் மதத்தை பல காலங்களில் பரப்பிய கிறிஸ்தவ மத குருமார்கள் முறையே

Judas Thomas (or ) Didymus
Saint Francis Xavier
Mother Teresa
Reginald Heber
Kuriakose Elias Chavara
Henry Martyn
George Edward Lynch Cotton
William Carey
Anthony Norris Groves
Hugh Findlay
Charles Freer Andrews
Alphonsa Muttathupandathu
St. Gheevarghese Mar Gregorios of Parumala
Judas Thomas (or ) டித்ய்முஸ்

இவரை செயின்ட் தாமஸ் என பரவலாக அழைப்பர் . இவர் மிக முக்கியமான கிறிஸ்தவ மத குரு. இவர் இயேசுவின் பன்னிரெண்டு சீடர்களில் ஒருவர் எனபடுபவர் . இவர் அக்காலத்தில் "மலபார்" எனும் கேரளா பகுதிக்கும் "கோரமண்டல்" என அழைக்க பட்ட சென்னை கடற்கரை பகுதிகும் வந்து உள்ளார். இவர் நினைவாக தான் பரங்கி மலை எனப்படும் செயின்ட் தாமஸ் மவுண்ட் ஆலயமும் , சாந்தோம் பீச்சில் ஆலயமும் நிறுவ பெற்றன

இவர் இந்தியாவுக்கு வரவே இல்லை என மற்றொரு ஆராய்ச்சி சொல்கிறது அனால் கிறிஸ்தவர்கள் இவர் சென்னையில் தான் மரித்தார் என்பர் ..வணிகம் செய்ய மட்டும் வந்த அயல்நாடினர் மத்தியில் இவர் மதத்தை பரப்பும் நோக்கோடு கேரளா கொடுங்கல்லூர் வந்து இறங்கினார் . அன்று இந்தியாவில் ஆரம்பித்த கிறிஸ்தவ மதம் படி படியாக கேரளா , தமிழ்நாடு கடற்கரை பிரதேசங்களில் , அருணாசல பிரதேசங்கிளில் விரைந்து பரப்ப பட்டது

செயின்ட் தாமஸ் அவர் சீடர்கள் பரப்பிய கிறிஸ்தவ கோட்பாடுகள் அதனை தழுவிய இந்திய மக்களை தாமஸ் கிறிஸ்துவர்கள் என்பர் . அக்காலத்தில் கிறிஸ்தவ சமயத்தில் பல பிரிவுகள் இருந்தான ..


பங்கு தந்தைகளும் , திருச்சபைகளும்
-------------------------------------------------
எனக்கு தெரிந்த வரை இந்தியாவில் கிறிஸ்தவ குடும்பங்கள் ஏதாவது ஒரு ஆலயத்தின் (church) உறுபினராக இருப்பார் . அந்த மாதிரி சிறு சிறு ஆலயங்களை ஒன்று இணைத்து ஒரு திரு சபை இருபதாகவும அதற்கு பேராயர் ஒருவர அல்லது தலைமை பங்கு தந்தை ஒருவருக் இருப்பார் . இந்த இந்தியாவில் உள்ள கிறிஸ்தவா ஆலயங்கள் எல்லாம் ஒன்றுடன் ஒன்று இணைக்க பட்டு மறைமுகமாக அயல் நாடில் உள்ள தலைமை கிறிஸ்தவ சபைகளுடன் செயல் ரீதியாக பிணைக்க பட்டிருக்கும் .

கிறிஸ்தவ ஆலயங்களில் பங்கு தந்தைகள் எனப்படும் பாதிரியார்கள் இயேசுவின் அருள் பெற்றவராக அந்த திரு சபை உடன் இணைக்க பட்டிருக்கும் குடும்பங்களால் நம்பபடுபவர். ஒவ்வொரு குடும்பத்தில் ந்டக்கும் நல்ல மற்றும் துக்க நிகழ்வுகளுக்கு அந்த திரு சபை ப்ங்கு தந்தைக்கு முதல் அழைப்பும் மரியாதையும் செய்யப்படும். அவரை கடவுள் உருவாக பார்த்து மிகுந்த மரியாதை கொண்டு இருப்பார்.

அயல் நாடுகளில் இருந்து மத பிராச்சாரம் , வளர்ச்சிக்காக தொகுதி வாரியாக வரும் பணம் இவர்கள் நிர்ணயிக்கும் திட்டப்படி அந்த திரு சபை வளர்ச்சிக்கு , சமய மாற்றத்துக்கு தேவையான வகையில் திட்டமிடப்படும் என நம்புகிறேன் .

இந்த church network பற்றி விபரம் தெரிந்தவர்கள் பதிக்கவும் அல்லது தவறு எனில் திருத்தவும்
இப்போது இவ்வாறு இணைக்கப்பட்ட அந்த சர்ச்சுகள் , மிசிநரி மூலம் இந்திய மக்களுக்கு இயேசு பற்றி போதனைகள் பரப்ப படுகின்றன என்பதை சற்று பார்போம் . குறிப்பாக உலகின் அணைத்து மூளை முடுக்குகளுக்கும் பரவயுள்ள இந்த கிறிஸ்தவ மத போதனைகள் பரப்பும் மிஷினரி அமெரிக்க உளவுத் துறைக்கு பல்வேறு புவியியல் , மக்கள் தொடர்பான இரகசிய தகவல்களை தருவதாக ஒரு கருத்து உண்டு .

அமெரிக்காவில் ஜார்ஜ் புஷ் பதவிக்கு வந்த பின் இந்த மிஷினரிகள் வளர்ச்சி அபிரிதமாக உள்ளதாகவும் இது மறைமுகமாக அமெரிக்க ஆதரவு மனப்பானமையை வளரும் நாட்டு மக்களிடையே பரப்ப முயல்வதாக ஒரு குற்ற சாட்டு உண்டு ..

இந்த அமெரிக்க கிறிஸ்தவ மிஷினரிகள் ஜோஷ்வா I , ஜோஷ்வா II எனும் செயல் திட்டத்தை தீட்டி மத பிரசாரங்களை பல நாடுகளில் மேற் கொண்டன
இந்தியாவில் கிறிஸ்தவ மதம் மிசினரிகளால் தற்போது வளர்க்கப்படும் விதம்

இந்த படத் தொகுப்பு இங்கு உள்ள அனைவரும் ஒரு நிமிடம் ஒதுக்கி பார்த்தல் நல்லது . மதமாற்றம், மத பிரச்சாரம் நடப்பதை துல்லியமாக படம் பிடித்து மிக அருமையான வர்ணனையோடு கொடுகபட்டது

வட இந்தியாவில் மிசோராம்,திரிபுரா,மணிபூர்,நாகலாந்து இன்ன பிற பழ்ங்குடி மக்கள் உள்ள கிராமங்களில் கிராமம் கிராமமாக இந்து மக்களை மதம் மாற்றுவது விவரிக்கப்பட்டுள்ளது

http://youtube.com/watch?v=NIPaN55hwac
http://youtube.com/watch?v=D0F22UhEsHk

புண்ணிய ஸ்தானம் எனும் கிறிஸ்தவர்களாக மதம் மாற்றும் முறை உத்திர
பிரதேசத்தில் படமாக்கப்பட்டது

http://youtube.com/watch?v=LuaiuTmUq8s

கிறிஸ்தவர்களாக வட மேற்கு மாநிலங்களில் மதமாற்றம் செய்யப்பட்ட மக்கள் சதவீதம்

மிசோராம் - 95 %
நாகலாந்த் 95 %
மேகாலாயா 75 %
திரிபுரா 80 %
மணிபூர் 70 %