Sunday, March 15, 2009

குண்டு காயத்துடன் கருவிலே சிதைவதும், பிறத்தலோ என் விதி , ஏனடி தாயே ?







குண்டு காயத்துடன் கருவிலே சிதைவதும், பிறத்தலோ என் விதி , ஏனடி தாயே ?

ஈழத்தில் இலங்கை இனவெறி படை பொது மக்கள் மீது வீசிய குண்டின் காரணத்தால் கருவில் இரு-ந்த குழ-ந்தை கால் சிதைக்கபட்டு தாயும் கொல்லபட்ட கொடுமை .. இன்னொரு குழ-ந்தை பிறக்கும் போதே கருவில் குண்டின் துகள் தாக்கப்பட்டு இருக்கும் கொடுமை .. இவர்களும் தீவிரவாதியா!! பயங்கரவாதிகளுக்கு எதிரான போர் என சொல்லி கொண்டு இனபடுகொலை பன்னுவதற்கு இதை விட பெரிய ஆதாரம் வேண்டுமா?




தமிழனாய் பிறந்ததற்கு இங்கு ஒவொருவரும் பாவப்பட்ட ஜென்மங்கள் .. தமிழின் குரல்வளை அருக்கபட்டுவிட்ட நிலையில் அதற்கு கத்தி தீட்டி கொடுத்த , இன்னும் கொடுக்கும் ஈன பெருமை இங்கு கழகங்களுக்கு , தமிழின துரோகிக்கும் உண்டு ..

ஈழ்த்தில் மடியும் தொப்புள் கொடி உறவுகளை பற்றி எந்த ஒரு கவலையும் இல்லாமல் தங்கள் சுய லாபங்களுக்கு மீண்டும் ஐந்து ஆண்டுகள் நாட்டை சுரண்ட கூட்டணி அமைக்க அழையும் சுயநலவாதிகளே இந்த பிறந்த குழந்தைக்கு உங்கள் பதில் என்ன ?

ஜனநாயகம் பேசி திரயும் போராளி எதிர்ப்பு மக்களே இந்த பிஞ்சு தீவிரவாதியா ?

உலகமே , ஐ.நாவே ராஜபக்சேவின் விருந்தை உண்டு மகிழுந்து இன படுகொலையை கண்டுகொள்ளாமல் முகத்தை திருப்பும் அதிகாரிகளே இந்த பிஞ்சுக்கு உங்கள் பதில் என்ன ?

போரில் இது சர்வசாதாரணம் என விருந்துண்ண செல்வீர்களா ?

இறைவன் என்பவரும் உலகில் இனம் புரியாத தெய்வீக சக்தி இன்னும் இருக்கிறதா ? இந்த பிஞ்சுகள் செய்த பாவமென்ன , கருவிலே குண்டடி பட்டு கால் சிதைந்து போக விட்ட நீயும் தெய்வமா ? பிறக்கும் பொது குண்டின் துகள் துளைத்து பிறத்தல் தான் விதியா ?

Sunday, March 8, 2009

இஸ்லாம் மாணவிகள் வீதியில் ஆடை மாற்றும் அவல காட்சிகள் - சிங்கள இனவெறி பள்ளியின் அட்டகாசம்..

இஸ்லாமிய மாணவியர்களை வீதியில் ஆடை மாற்ற செய்யும் சிங்கள பெவுத்த இனவெறி பள்ளிகள் .

இந்த காணொளி காட்சியை கண்ட போது கண்களில் சில துளி கண்ணீர் .. உலகின் அத்தனை இனவெறி கொடுமைகளும் இலங்கையில் பவுத்த சமயத்தை பின்பற்றும் இனவெறி இலங்கை அரசால தான் நடைபெற வேண்டுமா!!

குழந்தைகளயும் ஈவு இரக்கமின்றி கொன்ரு குவிக்கும் இலங்கை இனவெறி பவுத்த அரசு இப்பொது இஸ்லாமிய சகோதரிகளை வீதியில் தங்கள் ஆடைகளை சரி செய்ய விட்ட கொடுமை ..

இந்த சகோதரிகளுக்கு ஒரு மறைவிடம் தான் கட்டி கொடுக்க கூடாதா.. இல்லை அவர்கள் தங்கள் மத வழக்க படி உள்ள ஆடைகளில் பள்ளிகளுக்கு அனுமதிக்கலாம் அல்லவா . அமைதியை விரும்பிய புத்தர் இப்படி தமிழர் இரத்தங்களையும், இஸ்லாமிய மாணவிகளயும் வீதியில் ஆடைகளையாவா போதித்தார்.

தமிழர்களே சூழுரைப்போம் இந்த இன வெரி சிங்கள அரசின் இன படுகொலைகளை , இன வெறி செய்கைகளை பள்ளிகளில் திணிப்பதற்காக கண்டனமும், உலக நாடுகளின் கவனத்திர்கும் இட்டு செல்வோம்..




Racism at its worst.. Srilanka is filled with budhist racist doing mass massacres of tamils and also forced Islamic school going girls to correct their dresses in street before attending their schools..

வாரிசை களம் இறக்கும் பங்காரு அடிகளார்!!




பங்காரு அடிகளார் தற்பொது தமிழகத்தில் "அம்மா" என பரவலாக அழைக்கபடும் ஐந்து நாள் லேசான தாடியொடு இருப்பவர்.. மேல்மருவத்தூர் சென்றால் அந்த ஊரையே வளைத்து போட்டு ஆட்சி செய்பவர்.. ஒரு காலத்தில் அருள் வாக்கில் அரம்பித்து தற்போது ஆதிபராசக்தி ட்ரஷ்ட் என்று ஒன்றை நிறுவி கிட்டதட்ட பத்துக்கும் மேற்பட்ட கல்லூரிகளை நிர்வகித்து வருகிறது இவர் குடும்பம்.. ஆனால் நமக்கு இவர் நடத்தும் கல்லூரிகளில் எதாவது எழை மாணவர்கள் படிக்கிரார்களா என பார்தோமானால் அதனை பற்றிய செய்திகள் மிகக் குறைவு..
பல ஏக்கர் நிலங்களை வளைத்து போட்டு உள்ள அவருக்கு கண்டிப்பாக வந்த பணம் அம்மன் பெயரை சொல்லி வசூலித்த உண்டியல் காசு தான்.. இவர் நடத்தும் கல்லூரிகள்

Adhiparasakthi Polytechnic
Adhiparasakthi Matriculation Higher Secondary School
Adhiparasakthi Engineering College
Adhiparasakthi College of Physiotherapy
Adhiparasakthi College of Pharmacy
Adhiparasakthi College of Nursing
Adhiparasakthi College of Science
Adhiparasakthi Agriculture College

இப்படி பல கல்லூரிகளை நிர்வகித்து வரும் இவர் குடும்பத்தார் இன்று பற்பல கோடிகளுக்கு அதிபதிகள் என்றால் மிகையாகாது .. சரி விஷயத்துக்கு வருவோம்.

1966 அம்மன் அருள் வந்து சுயம்பாக இரு-ந்த வேப்பமரத்தின் இருந்து இவர் வரலாறு அரம்பிக்கிறது.. இந்த ஆதிபராசக்தி பீடத்திற்க்கு இன்ரு உலகெங்கும் பல கிளைகள் உள்ளன .. இப்பொது இவர்கள் முழுவதும் நல்லது செய்கிறார்களா அல்லது சொத்தை சேர்த்து வைத்து உள்ளனாரா என்பது பெரிய கேள்வி.. இன்று தமிழகம் முதல் ஈழம் வரை உலகின் பல நாடுகளிலும் கிளை பரப்பி உள்ள இந்த அம்மா பக்தர் சபை பக்தி மயக்கத்தில் இவருக்கு செய்யும் பணிவிடைகள் அதி தீவீரம்

அம்மா பங்காருவின் காலை கழுவ சுமார் ஐந்து முதல் பத்து ஆயிரம் வரை நன் கொடை அளிக்க வேண்டும்.. இவர் காலை கழுவ இந்த மனிதர் ஒவ்வொரு ஊரின் சக்தி பீடத்துக்கு விசிட் செய்யும் பொது அந்த ஊர்களின் பெரும் புள்ளிகள் முதல் பலரும் இவ்வாரு பணத்தை கட்டி பால் குடத்துடன் இவர் காலை கழுவ வரிசையில் நிர்கின்ரனர் .. இவர் ஒரு சமயம் எனது சொந்த ஊருக்கு வருகையில் எனது உறவினர் ஒருவர் இவ்வாரு காலை கழுவி தீர்த்தம் என குடித்தார்..
அதே போல் இன்று சபரி மலைக்கு மாலை அணிவதை போல் பெண்கல் பலர் மேல்மருவத்தூருக்கு மாலை அணிவிக்கின்றனர்.. இவர் ஒரு புரட்சி செய்துள்ளார் அதாவது கருவரையின் உள்ள சாமியை பென்களும் பூஜிக்கலாம் .. ஆனால் கோயில் பிர்காரத்தை சுற்றி இவர் அரசியல் தலைவர்கள் பலருடன் சேர்ந்து எடுத்த போட்டொக்கள் இருக்கும்.. இங்கு தான் சூட்சமம் இருக்கிரது .. கிராமங்கலில் இருந்து வரும் பெண்கள் இந்த போட்டொவை பார்த்து சாமி பெரிய சக்தி வாய்ந்தவர் பல தலைவர்களும் இவர் சீடர்கள் என வியந்து அதி தீவிர பக்தர்கள் ஆகி விடுகின்றனர் ..

எது எப்படியோ அடித்த வரை கொள்ளை என பல கோடிகளுக்கு அதிபதியான இவர் இப்பெரும் பணத்தை காக்க தற்பொது அவர் வாரிசான மகனை அம்மாவின் அருள் செம்மல் என முத்திரையொடு களம் இறக்கி உள்ளார்.. அரசியல்வாதிகள் தான் கலைஞ்சர் முதல் குடிதாங்கி வரை தங்கள் வாரிசை இறக்கி கட்சியையும், சொத்தையும் காக்கிறார்கல் என்றால் இன்று ஆன்மீக தொழிலும் தத்தம் வாரிசை களம் இறக்கி உலக பக்தர்களின் பக்தியை பதம் பார்க்க கிளம்பி விட்டார்கள்..
இந்த சின்ன 'அம்மாவின்' காலையும் கழுவி குடிக்க இனி தமிழக பக்தர்கள் மீண்டும் பணம் கட்டி வரிசையில் நிற்பர்.. மேல்மருவத்தூர் தாயே உன் கோயிலை அரசாங்கம் எடுத்து கொள்ள அருள் பாலிக்க கூடாதா!!

Saturday, March 7, 2009

அகோரி சாதுக்கள் பிணம் தின்னும் காட்சிகள்!



அகோரி சாதுக்கள் - சிவனின் மைந்தர்கள் என கூறி கொண்டு கங்கை நதியின் இடுகாடுகளில் வாழ்ந்து வருபவர்கள் .. இவர்களை பற்றி இவர்கள் தான்தோன்றி தனமாக சுற்றி கொண்டு இருப்பதாய் "நான் கடவுள் "படத்தை பார்த்தவர்கள் அறிந்து இருப்பார் . ஆனால் அந்த படத்தில் சொல்லாத சில விஷயமும் உண்டு அதனை தெரிந்து கொண்டால் தான் நீங்கள் அகொரியின் வாழ்கையை பற்றி முழுதும் அறிந்த நிறைவு உண்டு ..

இந்த அகோரிகள் இடுகாடுகளில் எரியும் பிணத்தை எடுத்து அதன் மாமிசத்தை உண்பவர்கள் .. காசியில் எரித்தால் நேரடி மோட்சம் என்பதும் அதுவும் அந்த சடலம் எரியும் பொது இது போன்ற அகோரி சாமியார் தேர்ந்தெடுத்து பிணத்தை உண்டல் அது மேலும் சிறப்பு எனவும் ஒரு மூட நம்பிக்கை மக்களிடையே உள்ளது ...

இந்த அகோரி சாமியார்கள் கஞ்சா அடிப்பது , சாராயம் குடிப்பது என்று எல்லா தீயபழக்க வழக்கங்களை சிவனின் பெயரை சொல்லி செய்கிறார்கள் .. அது சரி இவர்கள் இப்படி ஆடை களைந்து எதன் மீதும் பிடிப்பு அற்று திரிவதால் இவர்களை முற்றும் துறந்தவர்கள் என ஒரு சாரார் நம்பி வணகுவதை காண்கிறோம் .

அது சரி இந்த அகோரி சாதுகளுக்கு உணர்ச்சிகள் இருக்காதா ?

கஞ்சாவையும்,மதுவையும் சில சமயம் பிணத்தையும் உண்ணும் இவர்களுக்கு சராசரி மனிதனை போல காமத்தின் உணர்வகளும் கொப்பளிகாதா ?

அவர்கள் காம வேட்கையை தனிபதற்கும் படிபறிவில்லாத ஒரு சிலர் ஒரு வித படையலை செய்கின்றனர் ..

அதாவது இந்த அகோரிகள் சுத்தம் அசுத்தம் என எதனையும் பிரித்து பார்ப்பதில்லை நான் இந்த விஷயத்தை பற்றி துலாவிய பொது சில அடித்தட்டு மக்கள் குழந்தை பாக்கியம் வேண்டி பெண்கள் மாதவிடாய் காலங்களில் கழிவுகள் வெளியேறும் பொது இந்த அகோரி சாதுக்களிடம் உடல்உறவு கொள்கிறார்களாம் .. இப்படி உறவு கொள்வதனால் குழந்தை பாக்கியம் கிட்டுமாம் .. என்ன ஒரு மோசமான நம்பிக்கை !!

இந்த காணொளி காட்சியில் ஒரு அகோரி தன் வாழ்கையை பற்றி விளக்கி கடைசியில் பிணத்தின் மாமிசத்தை சுட சுட சிதையில் இருந்து எடுத்து சுவைக்கிறார்

http://www.youtube.com/watch?v=44r6McYybvI

இது மிக மோசமானது

http://www.hotklix.com/?ref=link/390418

கங்கை நதியில் மிதக்கும் பிணத்தை இழுத்து வந்து ஆசிரமத்தில் வைத்து பூஜித்து அதனை வெட்டி ஒரு சடங்காக உண்ணுகிறார்

இந்து மதம் பெரும் புதிரானது .. ஒரு புறம் இது போன்ற அகோரி சாதுக்கள் மறுபுறம் கார்பரேட் சாதுக்கள் ..

ஜக்கி வாசுதேவின் மர்மமான கடந்த காலம்



நண்பர் ஒருவர் ஜக்கி வாசுதேவை உண்மையான துறவி என்றும் .. "அத்தனைக்கும் ஆசைபடு" என்பது மிகவும் அறிவுபூர்வமான ஒரு கருது எனவும் கூறிய பொது சில நினைவுகள் வந்து சென்றது அது உங்கள் பார்வைக்கு இங்கே

சகல சவுகரியா இராஜ வாழ்க்கையை தூக்கி எரிந்து ஒரே ஆடையை மட்டும் கட்டி கொண்டு அரண்மனையை விட்டு வெளியேறி ஆசா பாசங்களை துறந்து வந்தார் புத்தர் அவர் போதித்து என்ன?

ஆனால் ரய்பொன் கூலிங் கிளாஸ் அணிந்து கில்லெர் ஜீன்ஸ் போட்டு கொண்டு அசத்தலாக ஆனந்த விகடன் கட்டுரைக்கு வார வாரம் வித விதமா போஸ் கொடுத்த ஜாக்கி வாசுதேவ் சொன்னதை வைத்து அவர் தான் "உண்மையான துறவி "என்பது சற்று நெருடலான ஒன்று ..

ஜாக்கி வாசுதேவ் கார்பரேட் சாமியார்களில் ஒரே நபர்.. நான் அவரை எதிர்த்து பதிவதாக கோபபட வேண்டாம் ..

அவர் சிவராத்திரியன்று நடத்து விசேஷ கூட்டங்களில் கலந்து கொண்டு உள்ளேன் அதே போல் அவர் கொயமுதூரிஇல் தியான லிங்கம் பிரதிஷ்டை செய்த அன்று நடந்த ஒரு நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு அங்கு நடபவற்றை நேரடியாக கண்ட அனுபவமும் உண்டு...

ஜாக்கி வாசுதேவ் என்பவர் பிறக்கும் பொது மகானாக பிறந்தவர் அல்லர். அவர் பழையா கால வாழ்கையை புரட்டி பார்த்தீர்கள் என்றால் சில மர்மங்கள் உண்டு .

ஜாக்கி வாசுதேவின் மனைவி பெயர் 'விஜி' எனப்படும் விஜயகுமாரி .. இவர் ஜாக்கி வாசுதேவுடன் இணைந்து ஆன்மிகம், இஷா ஆஸ்ரம பணிகளை கவனித்து வந்தார் .. திடிரென்று 1997 அம் ஆண்டு ஜனவரி மாதம் அவர் மர்மமான முறையில் இறந்தார் . அவர் பிரேதம் அவசர அவசரமாக விஜியின் தாய் தந்தையருக்கு கூட ஆசுவாசிக்க இடமிலாமல் இறுதி சடங்கு செய்யப்பட்டது .. அவர் தற்கொலை செய்து கொண்டார் என தகவல்கள் கசிந்தன ..

விஜியின் தந்தை, ஜக்கியின் மாமனாரும் ஆன தி.ஷ் . கங்கான தனது மகளின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் அவர் கொலை செய்யப்பட்டு அவசர் அவசரமாக இறுதி சடங்கு செய்யப்பட்டது என பெங்களூரில் உள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.. பெற்ற பிள்ளையை பறிகொடுத்த தகப்பன் தன் மகளின் மரணத்தில் மர்மம் இருப்பதையும் விஜி கொலை தான் செய்யபடுள்ளர் எனவும் அடித்து சொன்னார் .. இந்த புகாரின் அடிப்படையில் கோவை போலீசார் இஷா அஷ்ரமதுக்கு விசாரணைக்கு வந்த பொது ஜாக்கி வாசுதேவ் அவசரமாக அமெரிக்கா பறந்து விட்டார் ... ஜனவரி 23 அம் நாள் விஜி மரணமடைந்தார் .. அன்று விஜியின் பெற்றோருக்கு ஜாக்கி போன் செய்து விஜி இறந்து விட்டதாக சொல்லிவிட்டு அவர்கள் பெங்களூரில் இருந்து கோவை வரும் முன்னே சடலத்தை இறுதி சடங்கு செய்து விட்டார்.

என்ன கொடுமை இது ? பெற்ற தாய் தந்தையர் தன் மகளின் சடலத்தை பார்க்க விடாமல் இறுதி காரியம் செய்தது .. போலீசார் வழக்கு பதிவு விசாரணை செய்ய ஆரம்பித்த பொது ஜாக்கி வாசுதேவுக்கு அதே ஆச்ரமத்தை சேர்ந்த வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டு அதனை விஜி தட்டி கேட்ட பொது ஏற்பட்ட தகராறினால் அவர் கொலை செய்யப்பட்டு அது தற்கொலை என ஜோடிக்க பட்டது என செய்தி கசிந்ததாக நியாபகம் ..

இந்த வழக்கின் விசாரணையின் பொது வாசுதேவ் (அப்போதையா ஜெகதீஷ்) தன் மனைவி ஒரு விதமான பிராணாயமா பயிற்சி செய்த போது மூர்ச்சையாகி விட்டார் எனவும் அது தற்செயலாக நடந்த ஒரு சம்பவம் என கூறி அவர் பண பலம் மற்றும் மேலிடது செல்வாக்கால் அந்த புகார் கிடப்பில் போடப்பட்டது ..

ஆகவே நண்பர்களே இந்த ஜக்கி வாசுதேவின் மறுபக்கம், இளமை காலம் சற்று மர்மமானது .. உணர்ச்சி வசப்பட்டு அனைவரையும் உண்மையான துறவி என்று புகழாரம் சூடாதீர்கள் ..

என்னை பொறுத்த வரையில் வாழும் வரை மாசற்ற வைரமாக வைராக்கியமாக வாழ்ந்து மறைந்த விவேகானந்தரை துறவி என்றால் தகும் .. புத்தரை உண்மையான துறவி என்றால் தகும் .. மகாவீரரை சொன்னால் தகும் , வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடிய சன்மார்க்க நெறி வள்ளலாரை உண்மையான துறவி என்றால் தகும் ..

அதனி விட்டு விட்டு இந்த கில்லர் ஜீன்ஸ் ஜாக்கி வாசுதேவ் யோகா,தியானத்தை கற்று அதனை போதிக்கிறேன் என்று கூறி கொள்ளும் உலகம் சுற்றி வரும் ஒரு கார்பரேட் சாமியார் அவ்வளவு தான் .... ஜாக்கி வாசுதேவின் மாமனாருக்கு தன் மகளின் மரணத்தில் ஜாக்கி மீது உள்ள சந்தேகம் மூன்றாம் மனிதர்களான நமக்கும் இருக்குமல்லவா ? யார் அறிவார் அந்த ரகசியம் ....

இவரை போல தான் வாழும் கலை பண்டித ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரும் இவரது வாழும் கலை உறுப்பினர்கள் சமீபத்தில் நடந்த இலங்கை ina படுகொலைக்கு எதிராக போது மக்கள் நடத்திய ஒரு அமைதி பேரணிக்கு ரவி சங்கரின் பெரியா பெரியா புகைப்படங்கள் பதித்த விளம்பர பாதுகைகளை கொண்டு வந்து ஊர்வலத்தில் அவருக்கு விள்ளம்பரம் தேடி கொண்டு இருந்தனர் .. அந்த பேரணியோ அங்கு சாவும் தமிழ்ர்களை நினைத்து வருந்தி நடைபெறும் மவுன பேரணி .. எந்த ஒரு கட்சியை சேர்ந்தவர்களும் எந்த ஒரு கட்சி கோடி, தலைவர் படத்தை ஏந்தி வராத சூழ்நிலையில் இவர்கள் ரவிசங்கரின் விளம்பர படங்களை கொண்டு வந்து அதனை ஒரு விளம்பர யுக்தி ஆகி கொண்டனர் ...

ஆன்மிகத்தை நம்புவோம், உண்மையான ஆன்மீக ஆர்வலர்களை மதிப்போம் .. தனி மனித வழிபாட்டை தவிர்ப்போம் .. விவேகானந்தரை தவிர்த்து வேறு யாரையாவது கலிகால துறவி என்றால் அது ஏற்புடையது ஆகாது