Saturday, November 21, 2009

தமிழக தமிழன் எழவே மாட்டான்...




சாதி அரசியல் விவகாரங்களில் இருந்து விலகி ஒரு மூன்றாவது பார்வையில் எழுதுகிறேன்...

சீமான் பல சமயங்களில் ஆரம்பம் முதலே உணர்ச்சி மிகுதியில் வரம்பு மீறி பேசி இருக்கிறார். சில தடவை சிறைக்கும் சென்று இருக்கிறார்.. அவர் மீதான பல குற்றச்சாட்டுக்கள் சில காலமாக ஒரு சாராரால் வாசிக்கப்படுகின்றன.. அதுவும் குறிப்பாக தேவர் ஜெயந்தி விழாவில் கலந்து கொண்ட உடன் அவரை சாதிவெறியர் போல் சித்தரித்து வரும் கட்டுரைகள் எராளம்... சீமான் சாதி இயக்கத் தலைவர்களாக சித்தரிக்கப்படும் இமானுவெல் செகரன் மற்றும் தேவர் இருவர் சிலைக்கும் மாலை போட்டு தானும் அடுத்த சாதி அரசியலை நாடும் அரசியல்வாதி என்பது போல சித்தரித்து விட்டார்...

சரி விஷயத்திற்கு வருவோம்.... இது போன்ற் மலிவான அரசியலை நேற்று முளைத்த காளான் சீமான் மட்டும் தான் செய்தாரா என்ன ? தலித்களின் அவதார புதல்வன் என்பது போல் பிரகடனபடுத்தி பெரும்பாலான தலித் வாக்கு வங்கியை வைத்து இருக்கும் திருமா ஒரு சமயத்தில் தேவர் நூற்றாண்டு விழாவிற்க்கு அரசு மூன்று நாட்கள் விடுமுறை அளிக்க வேண்டும் என கூறியதாக ஒரு செய்தியை படித்தேன்... இது எந்த வகை அரசியல் ? மலிவான சாதி அரசியல் என அவர் தம் வாக்கு வங்கிக்கு தெரியவில்லையோ ? தேவர் ஜெயந்திக்கு வரிசையாக சென்று வணங்கி மாலை மரியாதை வாங்கி வரும் பிற அரசியல்வாதிகளை என்ன என்று சொல்வது...

திமுக சார்பில் அழகிரி சென்று வணங்கி வருகிறார்.. அடங்க மறு அத்து மீறு என மேடைக்கு மேடை முழங்கிய திருமா கருணாநிதியிடம் அடங்கி போய் கிடப்பது எதனாலோ ? தன்னை நையாண்டி செய்த இலங்கை அதிபருக்கு எதிர்த்து என் பேசவில்லை என்ற கேள்விக்கு "அவையடக்கம் கருதி செய்யவில்லை" பின்னர் முதல்வர் நல்ல பிள்ளையாக சென்று வர வேண்டும் என்றார் அதனால் அமைதியாக சென்ரு வந்தேன் என்று கசிய கசிய பத்திரிக்கை ஒன்றில் எழுதிகுறார்..... தலித் வாக்கு வங்கியை ஒட்டு மொத்தமாக வளைத்து காங்கிரசிடம் அடங்கி கிடக்கும் திருமா செய்வது என்ன அரசியல் ? அதனை விட தமிழகத்தில் உளள தலித்துக்களிடம் அவர்களுக்குள்ளாகவே உள்ள பிரிவுகளில் யார் ஆதிக்க பிரிவு என்னும் சண்டை பரவலாக உள்ளது..

பல தென்மாவட்ட கிராமங்களில் அவர்களின் இருபிரிவுக்கு உள்ளாகவே அடித்து கொன்று சாகிறார்கள்.. ஒவ்வொறு உட் பிரிவுக்கும் ஒரு தலைவர், கிருஷ்ன சாமி, ஜான்பாண்டியன், மற்றும் பலர் என அடுக்கி கொண்டே செல்லலாம்....

இறுதியாக சொன்னால் இந்திய அரசு துறைகளில் சமூகத்தில் பின் தங்கிய வகுப்பை சார்ந்த மக்களுக்கு இட ஒதுக்கீடுகள், சலுகைகள் கொடுத்து இன்று பல பெரிய பதவிகளில் முன்னெரி கொண்டு இருக்கின்ற வேளையில் இன்னும் சாதி ரீதியான அடிப்படை வாதங்களை வைத்துக் கொண்டு , தன் சாதியை ஒட்டுக்களால் வளர்ந்து அரசியல் செய்யும் தலைவர்கள் சுயலாப போக்கை கண்டிக்காமல் , தங்களுக்குள் ஒற்றுமையை வளர்காமல் .. காலம் காலமாக எதிரி சாதியாக கொண்ட ஒருவன் என்பதால் அவன் மீது மட்டும் சேற்றை வாரி இறைப்பது ஒரு நடு நிலை பார்வையில் பார்த்தால் நியாயம் இல்லை....


தமிழகத்தில் நடக்கும் மலிவான சாதி ரீதியான அரசியலையும், நன்றாக படித்து இணையம் வந்து இங்கு கட்டுரை என்ற பெயரில் மோசமாக சாதி அரசியல் சார்ந்து, விமர்சித்து எழுதும் ஒவ்வொரு கட்டுரையிலும் அதனை எழுதியவர் தன் சாதி ரீதியான ஆழமான பிடிப்புடன் இருப்பதை போல் பிம்பத்தை கொடுக்கிறது என்பது உண்மை.....

சாதிகள் என்றும் ஒழிய போவதில்லை இது போன்ற சிலரால்.. இந்த சாதி வேட்கையை , வெறியை திருமா, கிருஷ்னசாமி,A.C.சன்முகம்,ராமதாசு,சசிகலா குருப்,வாண்டையார் குருப், சரத்குமார் இந்த வரிசையில் சீமான் இன்னும் பல தேர்தலுக்கு தேர்தல் முளைக்கும் காளான் தலைவர்கள் இவர்கள் ஆதரவுடன் திமுக, அதிமுக இன்ன பிற கட்சிகள் உபயோக படுத்தி கொள்கிறார்கள் என்பதே நிதர்சனம் .

தமிழகம்,ஈழம் விவகாரங்களில் நல்லது செய்ய எத்தனித்தாலும் அவரவர் சாதிய அடையாளங்களால் மற்ரொரு சாரார் ஒதுக்குவது உண்மை...

தமிழ் ஈழ பிரச்சைனைகள் , ஈழ போர் நடந்த போது தமிழர்கள் சாதியை மறந்து ஒன்ராக இனைந்தார்கள் இப்போது அது சற்று சுணங்கி உள்ள நிலையைல் வேதாளம் முரு-ங்கை மரத்தில் ஏரியய்து போல் தமிழ் இளைஞ்சர்களுக்கு சாதி வெறி மீண்டும் தலை தூக்க தொடங்கி உள்ளது..

ஈழத் தமிழர்களுக்கு துரோகிகளால் மட்டும் இழிவு ஆனால் இந்திய தமிழர்களுக்கு துரோகிகளாலும்,சாதி வெறியர்களாலும் என்றுமே இழிவு

Sunday, November 1, 2009

சரத் பொன்சேகாவை காக்க எம்.கே.நாராயணன் பயணம்













அமெரிக்க குடியுரிமை அட்டை பெற்று உள்ள சரத் பொனசேகா தன் மனைவுயுடன் அமெரிக்கா சென்று உள்ளார்..அவருக்கு அங்கு அமெரிக்க அதிகாரிகளால் மனித உரிமை மீதான சட்ட சிக்கல்கள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.. மீண்டும் அமெரிக்க அதிகாரிகள் இலங்கை அமைச்சர் கோத்தபாய ராஜபக்ஷே மீது மனித உரிமை மீதான நடவடிக்கை எடுக்க சரத் பொன்செகாவை சாட்சியம் அளிக்குமாறு அனுகி உள்ளனர்.. இந்த நிலையில் இந்திய பாதுகாப்பு ஆலோசகரும் இலங்கை தமிழர் படுகொலை ஆலோசகரும் ஆன மலையாள மாநிலத்தவரான எம்.கே.நாராயணன் அவசர கதியாக அமெரிக்கா விரைந்து உள்ளார்.. மன்மோகன் சிங்கின் பயணத்துக்கான முன்னேற்பாடுகளை கவனிக்க செல்வதாக சொல்லிவிட்டு அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகத்தின் பலரையும் சந்தித்து பேசி வருவது தெரிகிறது.. இதன் ஒரு பகுதியாக பொன்செகாவிற்கு எந்த ஒரு சட்ட சிக்கலும் வராதவாறு அமெரிக்க அதிகாரிகளிடம் இந்திய அமெரிக்க நல்லுறவை பயன்படுத்தி அழுத்தம் குடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. எம்.கே.நாராயணன் ஈழத் தமிழர்கள் நலனுக்கு எதிராக ஆரம்பம் முதல் காய் நகர்த்தி இலங்கையை மேற்கு உலக நாடுகளின் அழுத்தங்களில் இருந்து காத்து வருவது குறிப்பிடத்தக்கது..

திடுக்கிடும் மந்திரி ராசாவின் பினாமிகள்,ஊழல்கள்-புலனாய்வு கட்டுரை

டெலிகாம் மந்திரி ராசாவின் பினாமிகள்,ஊழல்கள்-புலனாய்வு கட்டுரை

இந்த கட்டுரை டெல்லியில் இருந்து வெளிவரும் 'தி பயொனியர்' நாளிதழின் ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான புலனாய்வு கட்டுரையின் தமிழாக்கம்

தொலை தொடர்பு துறையில் இரண்டாம் தலைமுறை அலைவரிசை ஒதுக்கீடு தொடர்பான முறைகேடுகள் இந்திய நாட்டில் நடந்த முறைகேடுகளில் மிகப் பெரியதும் , மற்ற மோசடிகளை தூக்கி சாப்பிடும் அளவு சுமார் அறுபது ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் இழப்பு தந்ததும் ஆகும். ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு என்பது மின் காந்த அலைவரிசைகளை தொலை தொடர்பு தொழில் நுட்ப மற்றும் சேவை நிறுவனங்களுக்கு வரையரை செய்து ஒதுக்கீடு செய்யும் நடைமுறை..

இந்த முறைகேடு மத்திய தொலைதொடர்பு துறை தி.மு.க அமைச்சர் பதவிக்கு வந்ததும் அலைவரிசைகளை மிக மிக மலிவான விலையில் தொலை தொடர்பு துரையில் அனுபவம் இல்லாது புது நிறுவனங்களுக்கு குறிப்பாக ரியல் எஸ்டெட் துறையில் இருக்கும் சில நிறுவனங்களுக்கு மத்திய இராஜாங்க குழுவின்(cabinet committe) அனுமதி பெறாமல் வழங்கியதால் சர்ச்சைக்கு உள்ளானது. இந்த ஒதுக்கீடு சில ரியல் எஸ்டெட் நிறுவனங்களுக்கு 2008 ஆம் ஆண்டு மிக மலிவான (2001 ஆம் ஆண்டிற்கான) விலையில் வழங்கப்பட்டது. இந்த ஒதுக்கீடு பொதுவாக அரசு துறையில் இருப்பது போன்று ஏல முறையில் இல்லாது "முதலில் வருபவர்க்கு" என்று நடைமுறைக்கு ஒத்து வராத ஒரு ஓட்டை விதியை கையிலெடுத்து தொலைதொடர்பு ஆனையத்தின் தலைவர் நிபெந்திர மிஸ்ரா மற்றும் நிதி துறையின் எதிர்ப்பையும் சட்டை செய்யாமல் ஆ.ராசாவால் சில தரகு நிறுவனத்திற்க்கு அன்பளிப்பு போன்று கொடுக்கப்பட்டது.

மத்திய தொலைதொடர்பு மந்திரி பதவியை தயாநிதி மாறன் துறந்ததும் சுற்றுச்சூழல் வன இலாகாவில் இருந்த ஆ.ராசா பெற்றுக் கொண்டார். சுற்றுச்சூழல் இலாகாவில் இருந்த போது அவருக்கு நெருக்கமான சில ரியல் எஸ்டெட் நிறுவன குழுவுடன்,தரகர்களுடன் தொலைதொடர்பு துறைக்குள் புகுந்து தொலை தொடர்பு துறைக்கும் , தொலை தொடர்பு சேவை நிறுவனங்க்களுக்கும் இடையே அலைவரிசை ஒதுக்கீட்டை மலிவு விலைக்கு பெற்று அதிக விலைக்கு விற்க்கும் தரகு நிறுவனங்கள் நுழைய காரணமானார்.

தொலைதொடர்பு நிபுணர்கள் அதிர்ச்சி அடையும் விதம் மின் காந்த ஒதுக்கீட்டை "unitech" மற்றும் " swan " என்னும் ரியல் எஸ்டெட் பின்புலம் கொண்ட இரண்டு நிறுவனங்களுக்கு கொடுத்தார். மிக மலிவான விலைக்கு ஆ.ராசாவின் தயவால் ரூபாய் 1534 கோடிக்கு அதனை வாங்கிய சுவான் உடனடியாக அதன் 45 % பங்குகளை மட்டும் 4500 கோடி ரூபாய்க்கு துபாயை சேர்ந்த ஒரு நிறுவனத்திற்க்கு விற்றது.. இதே போல் யுனிடெக் என்னும் ரியல் எஸ்டெட் கம்பெனியும் ரூபாய் 1651 கோடியில் பெற்ற அலைவரிசையால் அதன் 60% பங்கை நார்வேயை சேர்ந்த ஒரு கம்பெனிக்கு 6120 கோடிக்கு விற்றது..

தி பயொனியர் நாளிதழ் இந்த முறைகேட்டை பற்றி புலனாய்வு செய்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வந்துள்ளன.. ரியல் எஸ்டெட் துறையில் பினாமிகள் பெயரில் சொத்துக்களை வாங்கி சேர்ப்பது போல அமைச்சருக்கு நம்பிக்கையான சில உப்புமா கம்பெனிகளுக்கு அலைவரிசைகளை மலிவான விலையில் ஒதுக்கீடு செய்து மோசடி பண்ணியது வெளி வந்துள்ளது..

ஆ.ராசா மத்திய அமைச்சராக சுற்றுச் சூழல் துறைக்கு பதவி ஏற்றதும் அவர் நெருங்கிய உறவினர்கள்,நண்பர்கள் ரியல் எஸ்டெட் துறையில் குதித்தனர்.. Green House Promoters, Equaas Estates, Kovai Shelters Promoters போன்ற ரியல் எஸ்டெட் நிறுவனங்களில் பெரும் பங்குதாரர்களாக ராஜாவின் உறவினர்கள்,நண்பர்கள், மனைவி ஆகியோர் இருக்கின்றனர்.. ராஜாவின் மனைவி பரமேஸ்வரி இரண்டு ரியல் எஸ்டெட் நிறுவனங்களின் நிர்வாக குழுவின் தலைமை உறுப்பினர்களில் ஒருவராக இருந்தார்... ராஜா மந்திரிகளுக்கு உரிய விதிமுறையான தத்தம் குடும்பத்தார் தம் துறை சார்ந்த தொழில்களில் ஈடுபடுதலை பிரதமருக்கு தெரிவிக்காமல் தம் ரியல் எஸ்டெட் தொழிலை மனைவியின் பெயரில் செம்மையாக செய்தார்..

ராஜா அலைவரிசையை வாரி வழங்கிய சுவான் நிறுவனம் ராஜா குடும்பத்தார் பங்குதாரர்களாக இருக்கும் Green House Promoters நிறுவனத்தில் சுமார் 49 % சதவீத பங்குகளில் முதலீட்டை செய்வது போன்று ஒரு மறைமுக ஒப்பந்தம் இருந்தது.. அதாவது குறைவான விலையில் அலைவரிசையை சுவானுக்கு கொடுத்தால் அது பதிலுக்கு பெரும் பணத்தை மந்திரி ராஜாவின் பினாமி நிறுவனத்தில் கைமாறாக முதலீடு செய்யும்.. இந்த ஒப்பந்த குட்டு முன் கூட்டியே உடைந்து விட்டதால் கைமாறாக கிடைக்கும் பெரும் கோடி பணத்தை பெற மாற்று வழி என்ன என்பதை ராஜா குழுவினர் ஆராய்ந்து அதனை வேறு வடிவில் செயல் படுத்தினர்... அந்த திட்டத்தின் படி புதிதாக ஒரு ரியல் எஸ்டெட் கம்பெனியை (Genex Exim Ventures) கீழக்கரையை சேர்ந்த நம்பகமானவர்களின் பெயரில் ஒரு இலட்சம் முதலீட்டில் தொடங்கி கைமாறு செய்யும் சுவான் நிறுவனத்தின் பெரும் கோடிகள் (380 கோடிகள்) மதிப்புள்ள பங்குகளை அந்த உப்புமா கம்பெனியின் பெயரில் கைமாறாக வாங்கியது...

ஆ.ராஜா 'சுவான்' என்னும் அந்த கம்பெனிக்கு அலைவரிசை ஒதுக்கீட்டிற்க்கு அடுத்ததாக வேறு சில சலுகைகளை அள்ளி வழங்கியுள்ளார்.. செப்டம்பர் 13,2008 ஆம் ஆண்டு சுவான் நிறுவனத்துடன் மேலும் ஒரு ஒப்பந்தம் ஒன்றை கையெழுத்திட்டார்.. அதன் படி சுவான் நிறுவனமானது பி.எஸ்.என்.எல். அரசு துறை தொலைதொடர்பு நிறுவனத்தின் அலைவரிசை, நெட்வொர்க் இன்ன பிற உபகரணங்களை இலவசமாக உபயோகபடுத்தி கொள்ள வகை செய்யும் ஒப்பந்தம்.. தொலைதொடர்பு துரையின் பல அதிகாரிகள் இந்த ஒப்பந்தத்தை எதிர்த்த போதும் தன் அதிகாரத்தை பயன்படுத்தி அவர்களை மிரட்டி சுவான் நிறுவனத்திற்க்கு அதனை வழங்கினார். இதனை பற்றி பிரதம மந்திரிக்கு அதிகாரிகள் சிலரால் புகார்கள் சென்றாலும் அதனை பற்றி பிரதமர் அப்பொதைய அரசியல் சூழலில் அக்கறை காட்டவில்லை.. இதில் அதிர்ச்சிகரமான தகவல் என்ன என்றால் தொலைதொடர்பு துறையில் இருக்கும் ஒரு ஒதுக்கீட்டிற்க்கு தொலைதொடர்பு துரயின் அனுபவம் சிறிதும் இல்லாத சுமார் 537 ரியல் எஸ்டெட் நிறுவனங்கள் ராஜாவை நம்பி விண்ணப்பித்து இருந்தது.. இதனை சுட்டிக்காட்டி தொலைதொடர்பு துறையில் நடக்கும் விசித்திர செயலை சீத்தாராக் யெச்சூரி கடிதமாக பிரதமருக்கு அனுப்பியும் பயன் இல்லை..

இவ்வளவு எதிர்ப்புகள் வந்த நிலையிலும் ராஜா அடங்குவதாக இல்லை , மீண்டும் பல ஆயிரம் கோடிகளை குவிக்க தொலைதொடர்பு துரயின் மூன்றாம் தலைமுறை அலைவரிசை ஒதுக்கீடு செய்ய ஆயத்த வேலைகளில் ஈடுபட்டு உள்ளார்.. தற்போது விழித்து கொண்ட காங்கிஸ் அரசு அந்த ஒதுக்கீட்டை முடிவு செய்யும் அதிகாரத்தை சில மந்திரிகள் அடங்கிய குழுவிடம் ஒப்படைத்து உள்ளது...

த பயொனியர் நாளிதழ் பத்திரிக்கையாளரின் ஆங்கில பதிப்பு

http://jgopikrishnan.blogspot.com/2009/03/spectrum-scam-indias-mother-of-all.html
http://jgopikrishnan.blogspot.com/2009/03/spectrum-scandal-and-telecom-ministers.html
http://www.dailypioneer.com/

தற்பொது சஞ்சார் பவனில் நடந்த சி.பி.ஐ சோதனையும், அதனை ஒட்டிய தி,மு,க மதுரை எதிர்ப்பு கூட்ட பின்வாங்களும் முன்னால் தமிழக முதல்வர் ஜெயலலிதா
குறிப்பிடுவது போல இந்த மோசடியின் பிண்ணனியில் தி.மு.கவின் தொடர்பு வெளிவருமா?

Wednesday, May 13, 2009

பணத்தால் விலை போன தமிழக வாக்குகள்

தி.மு.க தொகுதிக்கு முப்பது கோடி என்று அள்ளி தெளித்த ஆயிரது இருனூரு கோடி ரூபாய் இன்று தேர்தல் நாளில் வேளை செய்கிறது.. தமிழகத்தில் பதிவாகும் வாக்குகளில் சுமார் 20 முதல் 30 சதவீத வாக்குகள் தி.மு.க கூட்டணியால் விலைக்கு வாங்கப்பட்ட ஓட்டுகள்...

இப்போதைய கள நிலவரப்படி தி.மு.க கூட்டணி விலைக்கு வாங்கிய ஓட்டுகளால் அதன் எதிர்ப்பு ஒட்டுகளை முந்துகிறது... தமிழக பாமர மக்கள், பெண்கள் ஆட்டு மந்தைகளை போல் ஐனூருக்கும்,ஆயிரத்திற்க்கும், இருனூருக்கும் விலை போய் உள்ளது வருந்ததக்கது..


ஈழ உணர்வாளர்களை தி.மு.க ஆயிரம் கோடி வரை செலவழித்து விலைக்கு வாங்கிய ஒட்டுகளால் நம் அனைவராலும் ஆயுளுக்கும் செரிக்க இயலாத செய்திகள் 16 அம் தேதி காத்திருக்கிறது..

இன்று காலை வாக்களித்து விட்டு நாற்காலியில் வந்த துரோகியின் முகத்தில் ஒரு கபட புன்சிரிப்பும்,குதுகாலிப்பும் பொங்க மீடியாக்களுக்கு நாற்பதிலும் வெற்றி என கூற்யதன் பின்னனி விலைக்கு வாங்கக்ப்பட்ட ஒட்டுகளின் மீது உள்ள நம்பிக்கையும், உளவு துறை கொடுத்த ரிப்போர்ட்டும் தான்...

தி.மு,க , காங்கிரஸ் தனது எதிர்ப்பு ஒட்டுகளை விலைக்கு வாங்கிய ஓட்டுகளால் சரி கட்டிவிட்டது.. இனி தேர்தலின் முடிவுகள் முழுவதும் தொகுதி வாரியாக பிரியும் வாக்குகளை வைத்து தான் நிர்னயம் செய்யப்பட போகின்றன

தேர்தல் புறக்கணிப்பு- 49'0 =49 தமிழர்களை நீங்கள் கொன்றதற்க்கு சமம்

உங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் இறுதி ஆயுதம் வாக்குசீட்டு அதன் சரியான இலக்கு தமிழர்களை கழுத்தறுத்த துரோகிகளை அழித்து ஒழிக்க. இந்த அருமையான ஒரு ஆயுதத்தை குழி தோண்டி புதைப்பதற்க்கு சமம் நான் தேர்தலை புறக்கணிக்கின்றேன் / வாக்கு அளிக்க மாட்டேன் என்பது..

நீங்கள் நன்றாக் ஒன்றை உணருங்கள் நீங்கள் வாக்கு அளிக்காமல் 49'0 கொடுப்பது என்பது பத்து ஆயிரத்தில் ஒரு நபர் என்ற விகதத்தில் தான் இருக்கும்.. 49'0 வை பயிற்ச்சி செய்து பார்க்க இந்த தேர்தல் சரியான களம் அல்ல..தேர்தல் ஆனையம் 49'0 வை எந்த கணக்கிலும் கொண்டு வராது.. தமிழகத்தின் தேர்தல் முடிவை துரோகிகளுக்கு சாதகமாக கொண்டு செல்லும் நிலைபாடே அதிகம் இந்த 49'0 தேர்தல் புறக்கணிப்பால்..தன்னை எரித்து மாய்ந்த முத்துகுமரன் முதல் ஏனையோரும் இந்த 49'0 வையா இட சொன்னார்கள்.. துரோகிகளை சுட்டிக் காட்டினான் முத்துகுமரன்.. உங்கள் புறக்கணிப்பு துரோகிகளுக்கு மிகுந்த சந்தோசத்தை தரும் இந்த நேரம்...

ஈழத்தில் பத்து ஆயிரத்திற்க்கும் மேல் கொல்லப்பட்ட இந்த இக்கட்டான தருணத்தில் உங்கள் எதிர்ப்பை பதிவு செய்யாமல் புறக்கணிப்பது என்பது

49'0 தேர்தல் புறக்கணிப்பு என்பது ஈழத்தில் 49 தமிழர்களை நீங்கள் கொன்றதற்க்கு சமம்.......

49'0 புறக்கணிப்பு 49 தமிழர்களை நீங்கள் கொன்றதற்க்கு சமம்

உங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் இறுதி ஆயுதம் வாக்குசீட்டு அதன் சரியான இலக்கு தமிழர்களை கழுத்தறுத்த துரோகிகளை அழித்து ஒழிக்க. இந்த அருமையான ஒரு ஆயுதத்தை குழி தோண்டி புதைப்பதற்க்கு சமம் நான் தேர்தலை புறக்கணிக்கின்றேன் / வாக்கு அளிக்க மாட்டேன் என்பது..

நீங்கள் நன்றாக் ஒன்றை உணருங்கள் நீங்கள் வாக்கு அளிக்காமல் 49'0 கொடுப்பது என்பது பத்து ஆயிரத்தில் ஒரு நபர் என்ற விகதத்தில் தான் இருக்கும்.. 49'0 வை பயிற்ச்சி செய்து பார்க்க இந்த தேர்தல் சரியான களம் அல்ல..தேர்தல் ஆனையம் 49'0 வை எந்த கணக்கிலும் கொண்டு வராது.. தமிழகத்தின் தேர்தல் முடிவை துரோகிகளுக்கு சாதகமாக கொண்டு செல்லும் நிலைபாடே அதிகம் இந்த 49'0 தேர்தல் புறக்கணிப்பால்..தன்னை எரித்து மாய்ந்த முத்துகுமரன் முதல் ஏனையோரும் இந்த 49'0 வையா இட சொன்னார்கள்.. துரோகிகளை சுட்டிக் காட்டினான் முத்துகுமரன்.. உங்கள் புறக்கணிப்பு துரோகிகளுக்கு மிகுந்த சந்தோசத்தை தரும் இந்த நேரம்...

ஈழத்தில் பத்து ஆயிரத்திற்க்கும் மேல் கொல்லப்பட்ட இந்த இக்கட்டான தருணத்தில் உங்கள் எதிர்ப்பை பதிவு செய்யாமல் புறக்கணிப்பது என்பது

49'0 தேர்தல் புறக்கணிப்பு என்பது ஈழத்தில் 49 தமிழர்களை நீங்கள் கொன்றதற்க்கு சமம்.......

49'0 புறக்கணிப்பு 49 தமிழர்களை நீங்கள் கொன்றதற்க்கு சமம்

உங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் இறுதி ஆயுதம் வாக்குசீட்டு அதன் சரியான இலக்கு தமிழர்களை கழுத்தறுத்த துரோகிகளை அழித்து ஒழிக்க. இந்த அருமையான ஒரு ஆயுதத்தை குழி தோண்டி புதைப்பதற்க்கு சமம் நான் தேர்தலை புறக்கணிக்கின்றேன் / வாக்கு அளிக்க மாட்டேன் என்பது..

நீங்கள் நன்றாக் ஒன்றை உணருங்கள் நீங்கள் வாக்கு அளிக்காமல் 49'0 கொடுப்பது என்பது பத்து ஆயிரத்தில் ஒரு நபர் என்ற விகதத்தில் தான் இருக்கும்.. 49'0 வை பயிற்ச்சி செய்து பார்க்க இந்த தேர்தல் சரியான களம் அல்ல..தேர்தல் ஆனையம் 49'0 வை எந்த கணக்கிலும் கொண்டு வராது.. தமிழகத்தின் தேர்தல் முடிவை துரோகிகளுக்கு சாதகமாக கொண்டு செல்லும் நிலைபாடே அதிகம் இந்த 49'0 தேர்தல் புறக்கணிப்பால்..தன்னை எரித்து மாய்ந்த முத்துகுமரன் முதல் ஏனையோரும் இந்த 49'0 வையா இட சொன்னார்கள்.. துரோகிகளை சுட்டிக் காட்டினான் முத்துகுமரன்.. உங்கள் புறக்கணிப்பு துரோகிகளுக்கு மிகுந்த சந்தோசத்தை தரும் இந்த நேரம்...

ஈழத்தில் பத்து ஆயிரத்திற்க்கும் மேல் கொல்லப்பட்ட இந்த இக்கட்டான தருணத்தில் உங்கள் எதிர்ப்பை பதிவு செய்யாமல் புறக்கணிப்பது என்பது

49'0 தேர்தல் புறக்கணிப்பு என்பது ஈழத்தில் 49 தமிழர்களை நீங்கள் கொன்றதற்க்கு சமம்.......

தமிழகமே உறங்காதே விழித்து எழு ...

தமிழகமே உறங்காதே விழித்து எழு ...
தமிழ் என் மூச்சு,பேச்சு என நாடகமாடி
தமிழ்ர்கள் மூச்சை நிறுத்திய துரோகிகளின்
கொட்டமறுக்கும் நாளிது ..
களம் காண புறப்பட்டு ..
நீ கண நேரம் உறங்கினாலும்
ஈழ்த் தமிழ்ர்களுக்கு நிரந்தர உறக்கம்
உற்றார் உறவினர், சுற்றம், நட்பு என ஓயாது
பார்போர் யாவரிடம் பரப்புரை செய் ..

கட்டிலில் படுத்து கொண்டு வெற்றி வெற்றி என
பாடையில் போகும் வயதில் ஈன முழக்கமிடும்
ஈழத துரோகிகளை உன் வாக்குகளால்
வறுத்து,துவைத்து எடுக்கும் நாள் இது
ஓட்டிற்கு ஆயிரம் விலைபேசிய நயவஞ்சகர்களை
உன் களப் பணியால் புறமுதுகிட செய்யும் நாளிது

புறப்படு தமிழர்களை கொன்று குவித்த கையை
துரோக கணலால் சுட்டு எரிக்கும் சூரியனை !!
கள்ள உறவுடன் பிரிக்கும் முரசை நம்பாமல்!!
தமிழகத்திலிருந்து அகற்ற புறப்படு ...
கணலென களம் நம் முன்னே..
களைத்திடாமல் இன்று உழைத்திடு
நம் தீர்ப்பில் இன்று இலைகள் மலரட்டும் ...

தமிழர்களுக்கு துரோகம் இழைத்தோரும்,
இனி இழைக்க எத்தனிப்போரும்
அரசியலில் துடைத்து எரியப்படுவார்கள்
என உரைக்கும் நேரமிது
விழித்தெழு, தமிழா விழித்தெழு !!

Monday, May 11, 2009

விருதுநகரில் ஓட்டுக்கள் பிரிவதால் தோல்வியின் விளிம்பில் வைகோ ...

வைகோ விற்கு இது பொல்லாத காலம் போல.. தமிழகத்தில் இன்னும் ஒழியாத சாதீய நெருப்பின் அனலில் வைகோ பரிதாபமாக தோல்வியை தழுவும் நிலையில் உள்ளார் .. விருதுநகர் தொகுதியில் நாங்குமுனை போட்டி நடைபெறுகிறது .. நாடார் சமூகத்தை சேர்ந்த மா.பா. பாண்டியராஜன் , நாயுடு சமூகத்தை சேர்ந்த வைகோ , மானிக் தாகூர் என்னும் காங்கிரஸ் வேட்பாளர், நாடாளும் மக்கள் கட்சி வேட்பாளர் தேவர் சமூகத்தை சேர்ந்த நடிகர் கார்த்திக் என பல வாரியாக சாதிய ஓட்டை பிரித்து கொண்டு இருக்கிறார்கள்

விருதுனகர் தொகுதியில் குறிப்பிட்ட அளவு உள்ள நாடார் சமூகத்தினர் அனைவரும் முரசு சின்னத்திற்கு வாக்களிக்கும் வகையில் சாதீய ரீதியாக மூளை சலவை செய்யப்பட்டு உள்ளனர் , கார்த்திக் அதிமுக வாக்கு வங்கியான தேவர் ஒட்டுகளை பிரிக்கின்ர காரணத்தால் வைகோ தோல்வியின் விளிம்பிற்கு தள்ளப்பட்டுள்ளார்..

விருதுநகர் தொகுதியில் வைகோ வின் தோல்விக்கு அங்கு இலங்கை தமிழர் பிரச்சனையை சரிவர கொண்டு செல்லாததே காரணம் .. இது சம்ப்ந்தமாக அங்குள்ள இளைஞ்சர்களிடம் இலங்கை தமிழர் பிரச்சனையை எடுத்து கூறி வைகோவிர்கு ஆதர்வு திரட்ட முற்படுகையில் அவர்கள் பதில் மிரட்சி அடைய வைக்கிறது ... சாலையில் அடிபட்டு கிடப்பவர்களை கண்டு கொள்ளாதது போல் இலங்கை தமிழர்களை கண்டு கொள்ளக் கூடாது என வியாக்கியானம் பேசினர் முரசு சின்னத்திற்கு சாதீய ரீதியாக வாக்கு அளிக்க முற்படும் இளைஞ்சர்கள்..

மாபா . பாண்டியராஜன் பணத்தை தொகுதியில் இரைத்து உள்ளார்.. காங்கிரஸ் ஒட்ட்டிற்கு இருனூரு ரூபாயும், பாண்டியராஜனும் ஒட்டுக்கு இருனூரு ரூபார் , மற்றும் தேர்தல் பணி செய்பவர்களுக்கு பல வகையில் பணமும் இரைக்கப்பட்டுள்ளன.. வைகோ தொகுதியில் பணபட்டுவாட பண்னாததை குறையாக சொல்லும் சிலர் பணத்தால் விலை போன ஒட்டுக்கள் காங்கிரஸால் பிரிக்கப்பட்டும் உள்ளன

இப்போதைய சூல்னிலையில் வைகோவின் தோல்வி மயிரிழையில் உறுதி ஆகி உள்ளது..

ஈழ உணர்வாளர்களே, தமிழ் ஆர்வ இயக்கங்ககளே , திரை உலக் தமிழ் இன ஆர்வ பிரமுகர்களே வைகோ வெற்றி பெற விருதுனகர் தொகுதியில் ஈழ ஆதரவு பிரச்சாரங்கள் உறுதியாக தேவை.. இன்னும் ஒரு நாளே உள்ள நிலையில் இது நடக்குமா? ஜெயிபாரா வைகோ?

தி.மு.க,காங்கிரஸ் கூட்டணியின் ஊழல் ,வேதனைப் பட்டியல்

தி.மு.க,காங்கிரஸ்,விசி அங்கம் வகிக்கும் UPA கூட்டணியின் வேதனை பட்டியல்

நண்பர்களே தி.மு.க,காங்கிரஸ் தமிழர் துரோக,விரோத கொலைகார கூட்டணியின் வேதனைகளை இந்த பட்டியலில் தொடர்ந்து பின்னூட்டமாக சேருங்கள்

1) கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஈழா தமிழ்ர்களை கொன்று குவிக்க எட்டாயிரம் கோடி வரை நிதியளித்து, நவீன ஆயுதங்களை அளித்து அதனை இயக்க பயிற்சி அளித்து , நவீன ராடார் மற்றும் விமான எதிர்ப்பு பொறிகளை இலங்கையில் தமிழ்ர்களை கொல்ல நன்கொடையாக நிறுவியது

2) இலங்கை தமிழர் பிரச்சனை தாய் தமிழகத்தில் விசுவரூபம் எடுக்க விடாமல் பல நாடகமாடி,வசனம் பேசி மக்களை திசை திருப்பியது. ஜனநாயகத்தின் குரல் வளை நெரிக்கப்பட்டது, பேச்சுரிமை பறிக்கப்பட்டது

3)தமிழக மீனவர்கள் நூற்றுக்கணக்கானோர் இந்த ஆட்சி காலத்தில் இலங்கை கடற்படையால் சுடப்பட்டு இறந்தும் ,சிறை பிடிக்கப்பட்டும், படகுகள்,மீன்பிடி சாதனங்கள் சேதபடுத்தப்பட்டும் இரு-ந்ததை கண்டு கொள்ளாமால் மெத்தனமாக இருந்த்து.. இதற்கு மூல பிரச்சனையான கச்சத்தீவு பிரச்சனையை தீர்வு காணாமல் விட்டது

4)அத்தியாவசிய உணவு பொருட்களின் அநியாய விலையேற்றம்.. அரிசி,பருப்பு,போன்றவை வரலாறு காணாத அளவு விலை உயர்-ந்தது திமுக அங்கம் வகிக்கும் இந்த அரசாங்கத்தில் தான்

5)பண வீக்க விகிதம் வரலாறு காணாத அளவு அதிகரித்தது இந்த ஆட்சியில் தான்

6)விவசாயிகள் தற்கொலை அதிக அளவில் நடந்தது.. கடந்த ஒரு ஆண்டில் மட்டும் சுமார் அறுபது ஆயிரம் விவசாயிகள் இந்தியா முழுவதும் தற்கொலை செய்து உள்ளனர். UPA government ஆட்சியில் இதுவரை சுமார் இரண்டு இலட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து உள்ளனர்

7)அமெரிக்க சார்பு கொள்கை.. அமெரிக்க முதலீட்டை ஊக்குவித்து சுதேசி தொழில்களை சிதைத்தது.. இன்று நாம் அன்றாடம் உபயொகிக்கும் பல பொருட்கள் அமெரிக்க தாயரிப்பு அதற்கு வழிவகை செய்து இந்திய சிறுதொழில்களை சிதைத்தது இந்த அரசாங்கம்


8)தவறான அணுசக்தி கொள்கை.. அமெரிக்க வடிவமைத்து கொடுத்த இந்திய அனுசக்தி துறையையே எதிர்காலத்தை கேள்விகுறியாக்கும் வகையில் அமெரிக்க அடிமைதன அனுசக்தி ஒப்பந்த ஆதரவு

9)உலக பொருளாதார வீழ்ச்சியின் தாக்கம் இந்தியாவில் இன்று சுமார் இருபது இலட்சம் பட்டதாரிகலுக்கு வேலை இல்லாத ஒரு நிலை .. பல நிறுவனங்ககளில் ஆட்குறைப்பும், சம்பள குறைப்பும்..

10)நாட்டின் பாதுகாப்பில் குளறுபடி.. இந்தியா குடிமக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல்.. மும்பாய் தாக்குதல் .. முன் கூட்டையே தகவல் தெரிந்தும் கவனகுறைவு, நக்சல் தாக்குதல்கள், பெங்கலூரு,அஹமதாபாத்,சூரத் ஆகிய நகரங்களில் தொடர் குண்டுவெடிப்பு .. இன்று வரை தொடர் குண்டு வெடிப்பு உண்மை குற்றவாளிகளை கண்டரியாமல் புறக்கணித்தல்..

11)ஊழல், மிக பெரிய அளவில் மக்கள் பணம் சுரண்ட பட்டு சுவிஸ் வங்கி கணக்குகளில் இடப்பட்டது.. இந்தியாவில் மிக பெரிய ஊழலான சுமார் அறுபது ஆயிரம் கோடிகளுக்கும் மேல் ஸ்பெக்ட்ரம் ஊழல் செய்தது திமுக அரசு, மக்கள் பணத்தை சுரண்டி கடலுக்குள் போட்டது.. எந்த வகையிலும் உதவாத சேது சமுத்திர திட்டத்தை ஊழலுக்காக வலுக்கட்டாயமாக நடத்தி மக்கள் பணத்தை சுரண்டியது.. கடலில் தோண்டாத இடங்களை தோண்டியதாக பொய் கணக்கு காட்டியது..

12)மந்தமாகிய தேசிய நாற்கர சாலை திட்டம்.. மிக அத்தியாவசியம் ஆகிய நாற்கர சாலை திட்டத்தை பல இடங்களில் மந்தமாக்கி அதனை விரைந்து நிறைவேற்றாமல் இழுத்தடித்தது.

13)வரலாறு காணாத மின்வெட்டு! தமிழகத்தை இருட்டில் சிக்கவிட்டு மக்களை தவிக்க விட்டது.. சென்னையில் மட்டும் மின் வெட்டு நேரத்தை குறைத்து தென் தமிழக நகர் புறபகுதிகளில் ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் வரை மின் வெட்டு செய்தது..

14)எதிர்காலம் இல்லாத தகவல் தொழில்னுட்ப துறை.. எந்த ஒரு முன்னெற்பாடும் செய்யாமல் வேலை இல்லா திண்டாட்டத்தை அதிகரித்தது..

15)மத்திய அமைச்சர் பாலு தனக்கு சாதகமாக ஒரு நிறுவனத்துக்கு எரிவாய் சலுகை அளிக்க இந்தியா எரிவாயு துறை அமைச்சரை நிர்பந்தித்து அதனை பாரளுமன்றத்தில் பகிரங்க படுத்தி நாட்டை சுரண்டுவது தனது உரிமை போல் பேசியது..

16)மக்கள் பணத்தை சுரண்டி ஒரு தொலைகாட்சி ஆரம்பித்தது.. மாராட மயிராட நிகழ்ச்சிகளை காட்டி மக்கள் சிந்தனையை சிதற செய்தது..

17)குடும்ப அரசியல் தமிழகத்தை இரண்டாக கூறு போட்டு தனது இரண்டு மகன்களுக்கு சுய அதிகாரம் செய்ய வழிவகை செய்தது..

18)பெருகி வரும் கொலை , கொள்ளை , கட்ட பஞ்சாயத்து ஆபத்துகள், சட்டம் ஒழுங்கு சீர்குலைந்தது..

19)குடும்ப சண்டையால் மதுரையில் போலிஸ் ஆதரவுடன் தினகரன் அலுவலகம் தீ வைத்து கொளுத்தப்பட்டது.. இரண்டு பொறியாளர்கள் உயிருடன் எரித்து கொல்லப்பட்டனர்.. பின் குடும்பம் ஒன்று சேர்ந்தது ஆனால் எரித்து கொல்லபட்ட உயிர்கள் திரும்ப வருமா? தினகரன் அலுவலகத்தை தீ வைத்து கொழுத்திய அட்டாக் பாண்டி என்னும் ரவுடிக்கு அழகிரி தயவால் தி.மு.க அரசாங்கம் சார்பாக மதுரை வேளான் துரையில் கவுரவ பதவி கொடுக்கப்பட்டது.. என்ன கொடுமை ?

20)போலிசாரின் அட்ட்காசம் .. உயர் நீதிமன்றத்தில் புகுந்து நீதிபதிகள், வழக்கறிஞ்சர்கள் , வாகனங்ககளை அடித்து நொறுகியது.. சட்டக் கல்லூரி மாணவர்கள் தகராறை வேடிக்கை பார்த்து நின்றது ..
இன்று வரை வாகனங்ககளை அடித்து நொறுக்கிய போலிசார் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க வில்லை..

21)புரளியை, பொய் பிரச்சாரத்தை மத்திய உளவு துறை மூலம் தமிழக அரசும், காங்கிரசு அரசும் சேர்ந்து பரப்புவது..

22)ஒக்கேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை உடப்பில் போட்டது..

23)பாமரகளிடம் ஒட்டுக்கு பணம் கொடுக்கும் முறையை அறிமுகபடுத்தியது.. இலவசங்கள், போலி வாக்குறுதிகள் என ஓட்டை பணத்துக்கு இடும் முறையை வழக்கபடுத்தியது

ஈழ பிரச்சனைக்காக ஜெயாக்கு வாக்களிப்பது தான் தீர்வு- தி.மு.க அனுதாபியின் அலசல்

ஈழ பிரச்சனைக்காக ஜெயலலிதாக்கு வாக்களிப்பது தான் தீர்வு- தி.மு.க அனுதாபியின் அலசல்

ஜெயலலிதாவின் தனி தமிழ் ஈழ முழக்கத்தை நம்பி வாக்களிக்களாமா எனக் குழம்பும் அனைவருக்கும் இந்த கட்டுரை சமர்ப்பணம்.

தமிழக அரசியலின் திராவிட கட்சிகளின் ஆரம்பம் தொட்டு அண்ணா காலம் முதல் தி.மு.க அனுதாபியாக இருந்த எங்கள் குடும்ப வாக்குகள் முதல் முறையாக இந்த முறை ஜெயலலிதாவிற்கு ஆதரவாக விழ போகின்றன. இதில் முழு சந்தோசம் இல்லை என்றாலும் இன்றைய இக்கட்டான சூழ்நிலை கருதி அங்கு நாளாந்திரம் செத்து மடியும் ஈழ தமிழர்களின் நலனுக்காக எங்கள் பாரம்பரிய வாக்க்குகளை , தயக்கங்களை உடைத்து எறிந்து இன்று ஜெயலலிதாவிற்கு தனி தமிழ் ஈழம் தான் தீர்வு என முழங்கும் அந்த உறுதிபாட்டிற்கு ஆதரவாக வாக்களிக்க முடிவு செய்து உள்ளோம்..

முதலில் தி.மு.க அரசு தமிழக அரசிய்லில் அதற்க்கு பாதகமான களத்தை பல காலம் முன்பே ஆய்வு செய்து அது இந்த தேர்தலில் குறிப்பிட்ட அளவு வெற்றி பெற பின்னிய சதி வலைகளை ஆராயலாம்

1. தி.மு.க விஜயகாந்துடன் கள்ள உறவு , சன் டிவியில் முரசு சின்னத்திற்க்கு தொடர் விளம்ப்ரங்கள்

காங்கிரசுடன் விஜயகாந்த் கைகொர்த்து தி.மு.க கூட்டணியில் இடம் பெறுவார் என்ற சூழ்னிலையில் திடீரென்று தி.மு.க விஜயகாந்தை தனித்து நிற்க அசைன்மெண்ட் கொடுத்தது. கூடவே ரொக்கமும் கொடுத்தது.. விஜயகாந்த் தி.மு.க வை எந்த அளவு தாக்கி பெசினாலும் அதற்க்கு எதிர்ப்பு தெரிவிக்காதவாறு கழக கண்மனிகளுக்கு இரகசிய செய்திகள் சென்றன. தி.மு.க வின் எதிர்பார்ப்பு விஜய காந்த் தி.மு.கவை தாக்கி பெசி தி.மு.க எத்ர்ப்பு ஒட்டுகளை பிரிக்க வேண்டும் அவ்வளவே.. தான் தனித்து நின்றால் ஒரு தொகுதியில் கூட ஜெயிக்க மாட்டோம் என நன்கு தெரிந்தும் விஜயகாந்து தனி ஆளாக சிலம்பம் சுற்ற சென்றது இந்த பின்னனி தான்.. ஆதலாம் அவர் ஒட்டை பிரிக்க ரொக்கமாக பெற்ற பனம் சுட சுட அவர் வீட்டு நல நிதிக்கும், கடனை அடைக்கவும் சென்றது... ஆதலால் தான் தனது கட்சிய்ன் சார்பாக நிற்க்கும் வேட்பாளர்களை கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்ற எத்தனிக்கும் பெரும் புள்ளிகளை மட்டும் களத்தில் இறக்கினார்..
தி.மு.கவின் ஒரே நம்ப்பிக்கை விஜயகாந்த பிர்க்கும் ஒட்டு.

இப்பொது ஜெயலலிதாவிற்க்கு ஈழ ஆதரவு அலை வீசுவதால் சன் டீவி ஒரு படி மேலே சென்று முரசு சின்னத்திற்க்கு, சூரியன் சின்னத்திற்க்கும் வாக்கு அளிக்க சொல்லி தி.மு.க , கருனாநிதி கள்ள உறவை வெளிச்சம் போட்டு காட்டி விட்டது

2. வாக்களிக்கும் தேதி , எதிர்ப்பு ஒட்டை தடுத்தல்

மத்தியில் ஆளும் காங்கிரஸ் , பல மாதங்களுக்கு முன்பே உளவு துறை மூலம் இரகசிய விசாரனை மேற்கொண்டு தனக்கு சாதகமாக இருக்கும் வகையில் வாக்கு தேதிகளை தனது அதிகாரத்தை பயன்படுத்தி தேர்தல் ஆணையத்தை இரகசியமாக நிர்பந்தம் செய்து நிர்ணயம் செய்தது..
குறிப்பாக தனக்கு எத்ரிப்பு நிலவும் மா-நிலங்களில் வாக்கு தேதியை வார இறுதி விடுமுறை நாளை தவிர்த்து ஒரு வேளை நாளில் வைத்தது.. தமிழகத்தில் கூட இலங்கை பிரச்சனையை கருத்தில் கொண்டு வாக்கு தேதியை இறுதி கட்ட நாளில் வியாழக்கிழமை வைத்தது.. இப்படி செய்வதன் மூலம் படித்து பணியில் வெளியூரிய்ல் இருக்கும் வாக்காளர்களை வாக்களிக்க செய்ய முடியாமல் தடுத்து விடுவதன் மூலம் தனக்கு எதிர்ப்பு ஒட்டுகளை வெகு வாரியாக குறைத்து விடலாம் என நினைத்து பின்னிய சதி வலை இது.. வாக்கு அளிக்க விடுமுறை என்றாலும் மக்கள் பயனிக்க தேவையான அளவு சிறப்பு இரயில்களை தேர்தல் வாரத்தில் இயக்க வில்லை .. தமிழக அரசும் சிறப்பு பஸ்களை இயக்கவில்லை.. இதன் பின்னனி படித்த வாக்களர்கள் ஒட்டை தடுப்பது ..

இந்த இரண்டு சதி வலையையும்,மீடியாவையும்,
பல கோடி பணத்தையும் மட்டும் நம்பி கருணாநிதி களத்தில் உள்ளார்



தி.மு.க கூட்டணிக்கு எதற்கு நடுனிலை தி.மு.க அனுதாபிகள் வாக்கு அளிக்க கூடாது ?

1. தமிழகத்தில் ஒட்டு போட பணம் கொடுத்தல் என்ற வக்கிர நடைமுறையை கொண்டு வந்து அதனை தொடர்ந்து செயல்படுத்தி பாமரர் ஓட்டை விலைக்கு வாங்குதல்

2. எந்த ஒரு நிலைபாட்டிலும் உறுதியாக இல்லாது இருத்தல்.

3. குடும்ப அரசியல்
தி.மு.க மேலிடத்தின் தற்பொதைய நிலைப்பாடு . கட்சியின் அதிகார, கவுரவ . தலைமை பொறுப்பில் குடும்ப உறுப்பினர்கள் தான் இருக்க வேண்டும். இரண்டாம் நிலை தலைவர்களாக யார் வேண்டுமானாலும் பதிவி வகித்து எவ்வளவு கொள்ளை அடித்து சம்பாதித்து , பதிவு சுகம் அனுபவத்துக் கொள்ளலாம் ஆனால் கட்சி தலைமை பொறுப்பு என்பது குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டுமே . இன்று அடுத்த தலைமுறை தலைவர்காளாக அழகிரி மகள்,மகன் என விரிவாக்கம் நடைபெர்று கொண்டே செல்கிறது..

4.மக்களை தொடர்ந்து மீடியாவை வைத்து முட்டாளாக்குவது

தமிழக மக்கள் இன்று பெரிய அளவில் வாழ்வியல் ரீதியாக மாறிவிட்ட சூழ்னிலையில் இன்னமும் மக்களை பழைய காலத்து அரசியல் ஸ்டண்டுகளை நடத்தி நம்பி விடுவார்கள் என முட்டாள் தனம் செய்வது.. பிரதிபா பாட்டிலை குடியரசு தலைவராக்க டெல்லி சென்று தங்கி பல தலைவர்களை சந்தித்து ஆதரவு கேட்ட கருணாநிதி இன்று பத்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் ஈழத்தில் செத்து மடியும் போது கடிதம் எழுதி உள்ளேன், தந்தி அனுப்பி உள்ளேன் என மக்களை தொடர்ந்து முட்டாளாக்கி வருவது.

5. ஈழ பிரச்சனையை புறக்கணித்து கவனக்குறைவாக கையாண்டு வருவது

ஈழ பிரச்சனையில் தி.மு.க காங்கிரஸ் தொடர்ந்து நடத்தி வரும் மகா மட்டமான நாடகம் அனைவரும் அறிந்ததே..

5. பெரிய அளவில் ஊழல்

மிக பெரிய அளவில் ஊழல் செய்து சிறப்பாக செயல்பட வேண்டி பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை முடக்கி போட்டது .. அரசு தபால் துறையை முடக்கி தனியார் கொரியர் தொழில் கொடி கட்டி பறக்க அனுமதித்தது.. சேது சமுத்திர திட்டதில் பல கோடி ரூபாய் வீனாய் கடலில் கரைக்கப்பட்டது. அவர்கள் தோண்டிய தூரத்தில் வெள்ளொட்டம் கூட விட முடியாத அளவு மீண்டும் கடல் மண் குவிந்து பணம் வீனானது..

6. பல நல்ல திட்டங்களை அரசியல் லாபத்திற்காக கிடப்பில் பொட்டது

தமிழகம் முழுவதும் நாற்கர சாலை பணிகளை மந்தமாக்கி விட்டு மக்களை சிரமப்படுத்தியது. துறை அமைச்சர் தமிழகத்தை சார்ந்த பாலு தான் என்றாலும் ஒரு மயிரையும் பிடுங்கவில்லை அந்த அமைச்சர்..
ஒக்கெனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் இன்ன பிற நல்ல திட்டங்கள் அரசியல் லாபத்திற்காக கிடப்பில் போடபட்டது

ஈழத்திற்க்கு ஜெயலலிதாவை எதற்க்கு ஆதரிக்க வேண்டும்.. ?

இன்றைய சூழலில் ஈழத்தில் இப்படி ஒரு இக்கட்டான நிலைக்கு கொண்டு செல்ல காங்கிரசு அரசும் அதன் தவறான வெளியுறவுக் கொள்கை தான் காரணம் என்பதை அனைவரும் அறிவர்.. சுமார் இரண்டு இலட்சத்திற்க்கும் மேலான மக்கள் இடம் பெயர்ந்து சொந்த நாட்டிலேயே அகதிகள் போல் வாழ்ந்து வருவது மிக பெரிய அவலம் .. இந்த மக்களை புலிகள் இயக்கம் மீண்டும் வலு பெறாமல் இருக்க அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு திறந்த வெளி முகாம்களில் அடைத்து வைப்பது தான இலங்கை அரசின் திட்டம். இந்தியா காங்கிரஸ் அரசு இலங்கை அரசுக்கு கொடுத்து இருக்கும் அசைன்மண்ட் என்ன விலை கொடுத்தாவது, எத்தனை மக்கள் செத்தாலும் கண்டு கொள்ளாமல் புலிகளை முற்றிலுமாக அழித்து விடுவது . அதற்க்கு பிறகு இலங்கையின் போர் கால இழப்பை சரி செய்யும் வகையில் அனைத்து செலவுகளையும் இந்திய அரசு பார்த்து கொள்ளும்.. இந்த ஒரு தவறான வெளியுறவுக் கொள்கையானது இந்திய அரசியலமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழ் இன மக்களின் உனர்வுகளை புறக்கனித்து புண்படும் படியாக எடுக்கப்பட்ட முடிவானது..

நீங்கள் மீண்டும் காங்கிரஸ், கருணாநிதி கூட்டணிக்கு வாக்கு அளிப்பது என்பது இன்று வரை கொன்று குவிக்கப்பட்ட ஈழ தமிழ்ர்களின் பிணவாடைகளுக்கு நடுவே இந்த தமிழர் எதிர்ப்பு, பதிவு சுக , தன்னலம் மிக்க ஒரு கொடூர கூட்டணிக்கு வாழ்த்து தெரிவிப்பது போல் ஆகும்.. மன்மோகன் சிங்க் தெளிவாக தனி தமிழ் ஈழம் என்பது காங்கிரஸக்கு உடன்பாடில்லை என்றும் இலங்கையை இரண்டாக்க விரும்பாமல் தமிழர்கள் அங்கு தொடர்ந்து அடிமைகளாக, பிச்சை காரர்களாக இருப்பதே நலம் என்பது போல் கூறி உள்ளார்.. இப்படி ஒரு மட்டமான தமிழர் காழ்ப்பு நிலை கொண்டு உள்ள இவரா அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கும் பிரதமர் ? நினைத்து பார்க்கவே பதறுகிறது நெஞ்சம்...

ஜெயலிலிதா ஒரு சத்திய பிரமானத்திற்கு இனையான உறுதி பிரகடனத்தை எடுத்து விட்டார்.. தனி தமிழ் ஈழம் தான் தீர்வு என்று .. இனி அவர் அதனை மறைத்து தேர்தலுக்கு பின் மீண்டும் காங்கிரசுடன் உறவு கொள்வார் எனும் சந்தெகத்தை நீங்கள் தவிர்ப்பது நலம்.. ஜெயலலிதா காங்கிரசுடம் தேர்தலுக்கு பிந்தைய கூட்டனி வைக்காமலே தி.மு.க ஆட்சி தமிழ்கத்தில் கவிழும்.. காங்கிரசுக்கு தமிழகத்தில் உள்ள கோஷ்டிகள் தி.மு.கவிடம் ஆட்சிய்ல் பங்கு கேட்டு தானாகவே கருணானிதி ஆட்சி தமிழகத்தில் கவிழும் என்பது தான் உண்மை.. ஜெயலலிதாவை பொறுத்த வரை மூன்றாம் அனி ஆட்சிக்கு வந்தால் அதன் பிரதமர்களை நிர்பந்த படுத்தி இலங்கை விவகாரத்தில் அசுர பாய்ச்சலை காட்டி இரானுவரீதியாக இலங்கையை பிரித்து தமிழர்களுக்கு விடிவை பெற்று தரவும் தான் இந்திரா காந்தியை போல் இரும்ப்பு கரமான் ஒரு பெண் என்பதை உணர்த்தும் ஆர்வத்தில் உள்ளார்.. அவர் துளியும் துரோகம் செய்ய நினைத்தால் அடுத்து வரும் சட்ட மன்ற தேர்தல் முடிவுகள் எப்படி அமையும் என்பதை நன்றாக உணர்ந்தவர் ஜெயலலிதா... சொன்னதை மிக ஆனித்தரமாக செய்வதில் ஜெயலலிதாவிற்க்கு நிகர் அவரே.. அதற்க்கு அவரது பழைய வரலாறுகளே சாட்சி..

ஆக எந்த கட்சி அனுதாபிகளாக இருந்தாலும் சரி .. ஈழ விவகாரத்தில் தமிழக்கத்தில் மக்களை முட்டாளாக்கி கொண்டு இருக்கும் தி.மு.க கூட்டணிக்கு சம்மட்டி அடி கொடுத்து தமிழன் விழித்து வெகு நாளாகி விட்டது , ஈழ விவகாரத்தில் துரோகம் செய்ய நினைப்ப்வர்களுக்கு இது தான் பாடம் என்பதை ஆணிதரமாக தமிழர்களாகிய நாம் நிருபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிரொம்..


இந்த தேர்தல் தமிழ் மக்களை மீடியாவையும். பணத்தையும் வைத்து முட்டாளாக்கி கொண்டு இருக்கும் தி.மு.க கூட்டணிக்கும் எதிரான பாடம் புகட்டும் வாய்ப்பாகவும் , எதிர் காலத்தில் தமிழகத்தில் வரும் அரசியல் கட்சிகள் அனைத்திற்க்கும் இது ஒரு பாடமாகவும் இருக்கும் வகையில் தயக்கங்களை விட்டு ஒழித்து, தேர்தலை புறக்கணிக்காமல் ஜெயலலிதாவிற்க்கு அந்த தனி தமிழ் ஈழ ஆதரவு முழக்கதிற்க்கு ஆதரவாக தமிழர்கள் வாக்களித்து வெற்றி பெற செய்து தனி தமிழ் ஈழம் காண்போம்

Sunday, April 26, 2009

தமிழகத்தில் வட நாட்டு ஆங்கில சேனல்கள் ஒளிபரப்பை நிறுத்தும் அடையாள போராட்டம்

தமிழகத்தில் ஈழ விவகாரத்துக்கான போராட்டங்களில் இப்போது அவசர தேவை ஒன்று உள்ளது. கடந்த சில நாட்களாக மிக அதிக அளவில் வட நாட்டு ஆங்கில சேனல்களான் என்.டி.டி.வி(இடது சாரிகள் சார்பு), டைம்ஸ் நவ், சி.என்.என். ஆகியன இலங்கை அரசின் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிடும் செய்திகளை,காட்சிகளை கிளி பிள்ளை சொல்வதை போல் மீண்டும் மீண்டும் திரித்து வெளியிட்டு இந்திய மக்களை குழப்புகின்றனர். இலங்கை அரசு அங்கு தமிழர்கள் நலமாக இருக்க அரும்பாடு படுவதை போலவும் போராளிகள் தான் தமிழர்களை கொன்று குவிப்பதை போலவும் பொய் செய்தி வெளியிட்டு வருகின்றனர்.
இந்த வட நாட்டு மீடியாக்கள் தமிழக பிரச்சனைகளை பொதுவாக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. தமிழகத்தில் தன்னை எரியூட்டை மாண்ட பதினாறு பேர் செய்திகளை அவ்வளவாக ஒளிபரப்பவில்லை.. வட இந்தியர்கள், வடக்கு பகுதியின் சிறு சிறு பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இவர்கள் இலங்கை பிரச்சனையின் வரலாறு தெரியாமல் அப்பட்டமாக இலங்கை அரசின் இந்திய பிரதி-நிதிகள் போல் செயல்பட்டு பொய்களை பரப்புவதை கண்டிக்கத்தக்கது.

இது வரை பல வகையில் ஈழ விவகாரத்துக்காக் போராடும் பல இயக்கம்,கட்சி சார்ந்த நன்பர்களே.. தமிழர்களை இரண்டாம் பட்சமாக பார்க்கும் இந்த வட நாட்டு மீடியாக்களுக்கு நம் கண்டங்களை பதிய செய்ய வேண்டிய தருணம் இது.. தமிழகத்தில் உள்ள பகுதி வாரியாக உள்ள அல்லது கேபிள் டிவி தலைமை அலுவலக்ங்களை தொடர்பு கொண்டு இலங்கை அரசின் பொய் செய்திகளை வெளியிடும் இந்த வட நாட்டு சேனல்களின் ஒளிபரப்பை மூன்று தினங்கள் வரை ஒட்டு மொத்தமாக தமிழகத்தில் நிறுத்தி தமிழர்கள் எதிர்ப்பை அந்த சேனல்களின் இலங்கை ஆதரவு கொள்கைக்கு எதிராக பதிவு செய்ய வேண்டியது அவசியம் ஆகிறது..

குறிப்பு: இலங்கை அரசின் இரானுவ அமைச்சகம் இந்த வட நாட்டு சேனல்களை சார்ந்த சில நிருபர்களை போர் நடைபெறும் பகுதிக்கு அழைத்து சென்று சுற்றி காட்டி தாங்கள் சாதித்ததாக கதைத்து அங்கு சில தமிழர்களை மிரட்டி இலங்கை அரசு தமிழர்களுக்கு நல்லதையே செய்வது போல் பேட்டி கொடுக்க வைத்து உலக தொலைகாட்சிகளையும், வட நாட்டு தொலைகாட்சியையும் எமாற்றி உள்ளது.. வெகு விரைவில் இந்த பொய் ஒளிபரப்பு செய்யபட போகின்றன

Thursday, April 23, 2009

தமிழர்கள் கழுத்தை அறுத்த மலையாளிகள் கூட்டணி!












தமிழர்கள் கழுத்தை அறுத்த மலையாளிகள் கூட்டணி!

ஈழத் தமிழர்கள் விவகாரத்தில் இங்கு உள்ள துரோகிகளை விட மிக முக்கியமான மூன்று மலையாளிகள் கூட்டணி கவனிக்கப் பட வேண்டியது அவசியம்..

ஈழத் தமிழர் படுகொலைகளை இந்திய அரசு பாராமுகமாக இருந்து கொலைகளுக்கு உறுதுணையாக இருக்க காரண கர்த்தாக்கல் மூன்று மலையாளிகள் எனில் மிகையாகாது.. கடந்த ஒரு ஆண்டில் மட்டும் பத்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஈழத்தமிழர்கள் படுகொலைகளுக்கு இந்த மூன்று மலையாளிகளின் நரித்தனம் வன்மமானது

எம்.கே.நாராயணன்
பிறப்பு/வளர்ப்பு - பாலக்காடு அருகே ஒட்டப்பள்ளம், கேரளா
பதவி - தேசிய பாதுகாப்பு ஆலோசகர்


தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எனும் பதவியில் இருக்கும் இந்த வெறியன் ஒரு நிழல் மனிதன்.. இந்திய புலனாய்வு துறைகளை அடக்கி ஆளும் வல்லமை கொண்ட இந்த மனிதன் ஈழ படுகொலைகளை இந்தியா சார்பாக நேரடியாக நடத்துபவன்.. சர்வதேச அளவில் இந்த தமிழ் இன படுகொலைகளை மறைக்க செய்ய அரும்பாடுபடுபவன்.. இந்த வெறியன் நார்வே அமைச்சர் போராளிகளுக்கும், இலங்கை அரசுக்கும் சமாதான பேச்சுவார்த்தைகள் நடத்திய போது நார்வே அமைச்சரை இலங்கை விவகாரத்தில் இருந்து விலகி செல்லுமாறு நேரடியாக மிரட்டியதாக செய்திகள் உண்டு.. இவன் இடும் ஆணையின் பெயரில் தான் இலங்கை அரசுக்கு இந்திய இரானுவம் முதல் இன்ன பிற உளவு பிரிவுகள் இனபடுகொலைகளை மறைக்க ராஜ தந்திர ரீதியாக பல உதவிகள் செய்யப்படுகின்றன.. இந்த வெறியனுக்கு இந்தியாவின் பாதுகாப்புக்கு மிக பெரிய அச்சுறுத்தலாக் இருக்கும் பாகிஸ்தான் தீவிரவாதிகள், அஸ்ஸாம் நக்சல்கள் இவர்களை கண்டு கொள்ளாமல் முழு வேளையாக தமிழர்களை கொன்று ஒழிப்பதற்காக கடந்த ஒரு ஆண்டுகளாக மறைமுக போரை தமிழர்கள் மீது இலங்கை இரானுவத்தை வைத்து நடத்தி வருகிறான். ராஜீவ் காலத்தில் எப்படி தீக்சித் தவறாக தமிழர் பிரச்சனையை அனுகினாறோ அதனை விட படு கேவலமாக அனுகுகின்றான் இந்த குள்ள நரி நாராயணன்..

தமிழர்களை கொன்று குவிக்கும் இராணுவ நடவடிக்கைக்கு ஒரு மாதிரி திட்டத்தை இவன் மேற்பார்வையில் உருவாக்கப்பட்டு இந்திய உயர் இரானுவ அதிகாரிகளின் ஆலோசனையில் பெயரில் அந்த திட்டங்கள் பல கட்டங்களாக நெர்த்தி செய்ய்ப்பட்டு அதற்கு இலங்கை அரசுக்கு தேவைப்படும் பண உதவியை வட்டி இல்லா கடன் என்ற பெயரில் அன்பளிபாக கொடுத்து இந்திய பாராளுமன்ற தேர்தல் வரும் முன்னர் பல்லாயிரக்கணக்கான தமிழ்ர்களை கொன்று குவிக்கவும், போராளிகளை கொன்று குவிக்கவும் இந்திய அரசின் திரைமறைவு அசைன்மண்டுக்கு இவன் தான் தலைவர். இலங்கை அரசின் அனைத்து உயர் இராணுவ அதிகாரிகளுக்கும் இந்திய இராணுவ அகடமியில் பயிற்ச்சி வகுப்புகள் கொடுக்கப்பட்டது, சரத் பொன்செகா இந்த மாதிரி பயிற்சி வகுப்பை இந்தியா இரானுவத்தில் எடுத்தவர் தான். இன்றும் இலங்கை இராணுவத்திற்கு அதி நவீன விமானங்கள், ரேடார் , போர் கருவிகள் இயக்கும் பயிற்ச்சி இந்திய அரசால் கொடுக்கப்பட்டு வருகின்றன.

சிவசங்கர மேனன்

பிறப்பு/வளர்ப்பு - பாலக்காடு அருகே ஒட்டப்பள்ளம், கேரளா
பதவி - இந்திய வெளியுறவு செயலர்

இந்திய வெளியுறவு செயலர் எனும் பதவியில் இருக்கும் இந்த குள்ள நரியும் , நாரயணனும் ஒரே ஊரில் கேரளாவில் பிறந்தவர்கள். இவர்கள் இருவருமே தமிழ்ர்களை கொன்று குவிக்க திரை மறைவு வேளைகளில் ஈடுபடுத்தவே இது போன்ற மிக வலிமையான பதவிகளில் அமர்த்தப்பட்டுள்ளனர் போல.. இவனது தலையாய பணி உலக வல்லரசுகளின் கவனம் இலங்கை பிரச்சனையில் எக்காரணம் கொண்டும் வந்து விட கூடாது என பணி செய்வது தான். ஐ.நா சபையின் பல செயலர்களை தொடர்பு கொண்டு இலங்கையில் நடப்பது தீவிரவாதிகளுக்கு எதிரான போர் தான் என பொய் பிரச்சாரம் செய்து அந்நாட்டு தலைவர்களை திசை திருப்புவது. இந்த வெறியன் சமீபத்தில் அமெரிக்கா இலங்கை பிரச்சனையில் -நேரடியாக தலையிடும் சூழல் வந்த போது உடனே அமெரிக்காவிற்கு விஜயம் செய்து அங்கு பொய் விளக்கங்களை கொடுத்து அமெரிக்காவை திசை திருப்பியவன். ராஜபக்செவுடன் தொடர்பில் இருந்து அங்கு போர் நிலவரங்களை தொடர்ந்து கேட்டு அறிந்து கொள்பவன்..

ஏ.கே. அந்தோனி
பிறப்பு/வளர்ப்பு - ஆழப்புலா, கேரளா
பதவி - இந்திய இராணுவ அமைச்சர்

இந்திய இராணுவ அமைச்சர் என்ற பதவியை வைத்து கொண்டு இந்திய அரசின் தமிழர் படுகொலை நடவடிக்கைக்கு வேண்டிய அனைத்து இராணுவ உதவிகளையும் வாரி வழங்கியவர். முன்னுக்கு பின் முரனாக இந்திய இரானுவ உதவிகளை கூறுபவர். இவர் இன்று வரை இலங்கைக்கு இந்தியா அளித்து வரும் இராணுவ உதவிகளை மறுத்து கூறவில்லை.

விஜய் நம்பியார்

பிறப்பு/வளர்ப்பு - கேரளா நம்பியார் கூட்டம்
பதவி - ஐ.நா. சபையின் நாயகரின் செயலர்

ஐ.நா சபையின் நாயகரான பாங்கீன்மூன் ஆலோசகரான இருக்கும் மலையாள வம்சா வழி குள்ள நரி இது. உலகின் மிக பெரிய தமிழ் இன படுகொலை மனித அவலத்தை உலகின் வல்லரசுகள் பலவும் கண்டு கொள்ளாமல் விலகி இருக்க செய்ததில் மேலே சுட்டி காட்டி உள்ள மலையாளிகள் உடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர். குறிப்பாக எம்.கே.நாரயணனும் இவனும் நெருங்கிய தொடர்பில் இருப்பவர்கள். உலகின் மிக பெரிய கவுரவ அமைப்பான ஐ.நா. சபையையே தங்கள் மலையாள இன பாசத்தால் தமிழர் இனப்படுகொலைகளை சாதுரியமாக உலகின் பார்வையில் இருந்து மறைத்து அதனை தீவிரவாதிகளுக்கு எதிரான போர் என கூறுபவர்கள். சமீபத்தில் மிக ஒரு முக்கியமான சூழ்னிலையில் இலங்கைக்கு விஜயம் செய்த இந்த விஜய் நம்பியார் ராஜபக்ஷெவை மட்டும் சந்தித்து இந்தியா வந்து கூட்டாளி நாரயணன்,மேனன் இவர்களை சந்தித்து ஐ,நா பாதுகாப்பு சபையில் இலங்கை நிலவரம் குறித்து பேச மாட்டேன் அது இரகசியம் என விசித்திரமாக கூறிய மானம் கெட்ட மலையாளி. உலக நாடுகளின் நிர்பந்ததால் மறு தினம் தமிழர் இன படுகொலைகளை மறைத்து தமிழர்கள் சாவுக்கு போராளிகள் தான் காரணம் எனும் வகையில் நாரயணன் எழுதி கொடுத்ததை வாசித்த குள்ள நரி..


தமிழர்களே , இங்குள்ள துரோகிகளை எதிர்து போர் கொடி தூக்கும் இதே நேரம் இந்த அதிகார வர்க்கத்தில் இருந்து தமிழர்கள் கொன்று குவிக்கப் படுவதற்கு -நேரடியாக துணை போகும் இந்த மலையாள் கூட்டணியை தெரிந்து கொள்ளுங்கள்.

குறிப்பு: விரைவில் சிவசங்கர மேனனும், நாரயணனும் இலங்கை சென்று அங்கு நடக்கும் போரின் இறுதி நடவடிக்கைகளின் விவரங்களை விவாதிக்க போகிறார்கள். குறிப்பாக பிரபாகரன் சுற்றி வளைக்கபட்டுள்ள சூழ்னிலையில் மேற்கொண்டு எப்படி ஒரு சூழ்ச்சியை செய்து பிரபாகரனை கொல்வதனால் ஏற்படும் கொந்தளிப்பை இலங்கையிலும்,தமிழ்கத்திலும் சமாளிக்கலாம் எனும் தொரனையில் இவர்கள் விவாதிப்பார்கள். ஆனால் இந்த ஒரு மட்டமான சந்திப்பை போர் நிறுத்ததிற்கான தூது , அழுத்தம் என்று இங்கு உள்ள துரோகிகள் துதி பாடுவார்கள்..

எப்படியோ தமிழர்கள் கழுத்தை சிங்களவர்களுக்கு அடுத்து அறுத்தது மலையாளிகள் மற்றும் இங்கு உள்ள தமிழ் இன துரோகிகள் எனில் மிகையாகாது

கொசுறு: தமிழர்களை கொன்று குவிக்க குருவாயூரப்பனும் ராஜபக்ஷெவுக்கு அருள் பாலிக்கின்றாரா ? இராஜ பக்ஷே குருவாயூரில் துலாபாரம் கொடுத்த புகைப்படம் மேலே..



இந்த கட்டுரையின் நோக்கம் இலங்கை பிரச்சனையை தமிழ் மக்களின் உணர்வுகளை புறம் தள்ளி இந்திய அரசு கவனக்குறைவாக கையாண்டு வருவதற்கு காரணம் இது போன்ற தமிழர் உணர்வுகளை,உறவுகளை
புரிந்து கொள்ளாமல் தமிழர்களை இரண்டாம் பட்சமாக பார்க்கும் மனிதர்களால் தான். இவர்களுக்கு மிக பெரிய அதிகாரத்தை கொடுத்து இலங்கை தமிழர் பிர்ச்சனையை கையாள செய்தது மாபெரும் பாதகம்...
ஒரு தமிழராக உள்துறை அமைச்சர் சிதம்பரம் காங்கிரஸ் மேலிட விருப்பங்களுக்கு அப்பாற்பட்டு தமிழர்கள் உணர்வை புரிந்து எதாவது செய்ய விரும்பினால் இது தான் நல்ல தருணம். தமிழர் உணர்வுகளை புரிந்து கொண்டு செயல்படும் அதிகாரிகளை ஈழ விவகாரத்தை கையாளும் குழுவில் அமர்த்துவது மிகவும் அவசரமும் இன்றியமையாததும் ஆகும்

இனப்படுகொலை குட்டை தானே அம்பலமாக்கியுள்ள இலங்கை அரசு

தமிழர் இனப்படுகொலை திட்டத்தை தானே அம்பலமாக்கியுள்ள இலங்கை அரசு

இலங்கையில் உள்ள செஞ்சிலுவை சங்கம் இன்ன பிற தன்னார்வ அமைப்புகள் மற்றும் பலர் பாதுகாப்பு வலைய பகுதியில் இரண்டு இலட்சத்திறகும் அதிக மக்கள் உள்ளனர் என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்திய போது அதனை இலங்கை அரசும், இரானுவமும் தொடர்ந்து மறுத்து மக்கள் எண்ணிக்கையை மிக குறைவாக காட்டியுள்ளது. சுமார் நாற்பதாயிரம் மக்கள் தான் பாதுகாப்பு வலய பகுதியில் இருக்கின்றனர் என்று தமிழ் மக்கள் எண்ணிக்கையை குறைத்து காட்டுவதன் மூலம் தான் மேற்கொண்டு வரும் பாரிய இனப்படுகொலை முயற்சியை எளிதில் மறைத்து விடலாம் என திட்டம் இட்டு இப்படி ஒரு பொய் பரப்புரையை மேற்கொண்டு வந்தது..

இலங்கை அரசு திட்டம் இட்ட தமிழ் இனப்படுகொலையின் உச்ச கட்டமான கொடூர ஐம்பதாயிரம் தமிழர்கள் படுகொலையை அது தமிழ் புத்தாண்டிற்கு அடுத்த அடுத்த தினங்களில் ஆரம்பித்து ஒரே நாளில் ஆயிரத்து ஐனூரு தமிழர்களை உலகில் தடை செய்யப்பட்ட குண்டுகளை வீசி கொன்று குவித்து மேற்கொன்டு தாக்குதலை தொடர்ந்தது .. இந்த கொடூர தாக்குதலில் இருந்து காத்து கொள்ள தத்தளித்த மக்கள் செய்வதறியாது திகைத்து மாற்று இடம் செல்கையில் நயவஞ்சகமாக இலங்கை இரானுவம் அவர்களை மனித கேடயமாக்கி தொடர்ந்து தாக்குதல் நடத்தியுள்ளது.. இன்று உலகிற்கு தான் உலகின் மிக பெரிய மீட்டெடுத்தல் சாதனையை செய்து வருவதாக பொய் பிரச்சாராம் செய்து வருகிறது... இதனை விட ஆர்வமாக இலங்கை இனபடுகொலை பாதுகாப்பு அமைச்சகத்தின் இணையதளத்தில் கடந்த மூன்று நாட்களில் மட்டும் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை மீட்டுள்ளதாக ஒரு கணக்கை வெளியிட்டு உள்ளது. வழக்கம் போல் இதுவும் ஒரு பொய் கணக்காக இருக்க கூடும்..

நான் கு நாட்கள் முன் வரை நாற்பதாயிரம் மக்கள் தான் பாதுகாப்பு வலயத்தில் இருக்கிறார்கள் என உலகின் அனைத்து நாடுகளின் தலைவர்களுக்கும், மீடியாக்களுக்கும், ஐ.நா கூட்டமைப்புக்கும் தொடர்ந்து வலியுறுத்திய இலங்கை இன்று கடந்த மூண்று நாட்களில் மட்டும் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை மீட்டதாக வெளியிடும் கணக்கு இலங்கை இன படுகொலை அரசு மேற்கொள்ள இருந்து ஐம்பதாயிரத்திறிகும் மேற்பட்ட தமிழ் மக்கள் படுகொலை திட்டத்தை தானே இன்று உலகிற்க்கு அம்பலபடுத்தி உள்ளது..

உலக தலைவர்கள், ஐ.நா போன்ற அமைப்பின் அதிகாரிகள் அனைவருக்கும் இது போன்று முன்னுக்கு பின்னாக பொய் தகவல்களை அளித்து பாரிய இன படுகொலை செய்து வரும் இலங்கை அரசின் சுய ரூபத்தை உணர்ந்து சர்வதேச போர் குற்றங்களின் அடிப்படையில் இலங்கை அரசின் படை அதிகாரிகள் , அரசாங்க தலைவர்களை சுமார் பத்து ஆயிரத்திற்கும் அதிகாமான அப்பாவி தமிழர்களை குறிப்பாக பல்லாயிரக்கணக்கான குழந்தைகளை கொன்ற பாவத்துக்காக தூக்கில் இட வேண்டும் என சூளுரைப்போம்

இலங்கை அரசின் பாதுகாப்பு அமைச்சகம் ஏப்ரல் 16, மார்ச் 11 தேதிகளில் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பு அதில் நாற்பதாயிரம் மக்கள் தான் பாதுகாப்பு வலய பகுதியில் இருப்பதாக திரித்து கூறப்பட்டுள்ளது
http://www.defence.lk/PrintPage.asp?fname=20090416_08
////An estimated number of 40,000 odd people are believed kept forcibly by LTTE terrorists through sheer intimidation and torture inside the LTTE's 'open-human' prisons

http://www.defence.lk/new.asp?fname=20090311_02

/////////////Only a few sacks of grains, flour and a little clean water is left for over 40,000 people who have to struggle with each other for what is left.
///////////////"These people are denied of their freedom of choice and taken to the edge of suffering any human can undergo", an aid worker at Vavuniya revealed, commenting on the ground realities in the non-liberated land territory with over 40,000 people hostage


ஆனால் பழைய செய்திகளுக்கு எதிர்மறையாக இன்று சுமார் ஒரு இலட்சம் தமிழர்களை மூன்று நாட்களில் மட்டும் மீட்டதாக ஒரு கணக்கை வெளியிட்டு உள்ளது இலங்கை அரசு

http://defence.lk/new.asp?fname=20090422_RESCUE


இப்படி மீண்டும் மீண்டும் பொய்யை கூறி, பிரசாரம் மேற்கொண்டு உலகை முட்டாளாக்க பார்கிறது இலங்கை அரசு .. இதனை ஆமோதிக்கிறது இந்திய அரசு..

இதன் மூலம் அம்பலமாகியுள்ளது இலங்கை அரசின் இனப்படுகொலையின் உச்சகட்ட ஐம்பதாயிரம் தமிழர்கள் கொலைத் திட்டம்.. உலகெங்கும் போராடி வரும் புலம் பெயர் தமிழர்களின் தொடர் போராட்டத்தினால் இந்த பாரிய படுகொலை திட்டம் முன்னதாக எடுத்து உரைக்கப்பட்டு இலங்கை அரசு ஒரே இரவில் உச்ச கட்ட கொடூர தாக்குதலால் தமிழ் இனத்தை கொன்று குவிக்க முடியாமல் சிறிது சிறிதாக கொன்று குவித்து வருகிறது..

Wednesday, April 22, 2009

படுகொலை ,படுகாயம் செய்யப்பட்ட தமிழ் குழந்தைகள் புகைப்பட தொகுப்பு

படுகொலை ,படுகாயம் செய்யப்பட்ட தமிழ் குழந்தைகள் புகைப்பட தொகுப்பு

இந்த புகைப்பட தொகுப்பை பார்பதற்கு மனது வலிக்கும்.. இருந்தும் இறுதி வரை பாருங்கள் .. இந்த புகைப்பட தொகுப்பு இலங்கை இன வெறி படை மேற்கொண்ட தமிழ் இன அழிப்பு தாக்குதலில் கொன்று குவிக்கபட்ட தமிழ் குழந்தைகளில் ஒரே ஒரு சதவீதம் மட்டுமே.. இது வரை இந்த ஒரு ஆண்டில் மட்டும் கொன்று குவிக்கப்பட்ட குழந்தைகள் எண்ணிக்கை ஐந்து ஆயிரத்துக்கும் மேல்.. படு கொலைசெய்யப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை கடந்த ஒரு ஆண்டில் மட்டும் பன்னிரெண்டாயிரத்துக்கும் மேல்..

இந்த ஐந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளை கொன்ற குற்றத்துக்காக கீழ்கண்ட நபர்களை போர் குற்றவாளிகளாக பிரகடனபடுத்தி அவர்கள் தூக்கில் இட வேண்டும் என சூளுரைப்போம்.

1. இராஜ பக்ஷெ
2. கோத்த பாய ராஜபக்செ
3 . ஸ்ரத் பொன் செகா
4. சாவெந்திர டி செல்வா
4. எம்.கே.நாராயனன்
5. சிவசங்கர மேனன்

brutally killed tamil kids by srilankan army
------------------------------------- ------
http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=5434
http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=5422
http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=2413
http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=5461
http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=5385
http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=5404
http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=5115
http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=5325
http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=5160
http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=6446
http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=6265
http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=5532
http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=5497
http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=5510
http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=5522
http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=5207 (fetus)
http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=4966
http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=4971
http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=4973
http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=5002
http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=4998
http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=3711
http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=3708
http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=2749
http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=2422
http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=2434
http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=1740
http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=609
http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=952
http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=958
http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=950
http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=938
http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=27
http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=31
http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=49
http://tamilnet.com/art.html?catid=13&artid=29105
http://puthinam.com/full.php?2b1VoUe0dAcYK0ecKA4U3b466DN4d3f1e2cc2AmS2d424OO2a030Mt3e
http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=47

brutally wounded tamil kids by srilankan army
---------------------------------------------

http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=5473
http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=5446
http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=5449
http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=5452
http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=5455
http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=5458
http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=5464
http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=5467
http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=5470
http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=5428
http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=5431
http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=5443
http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=5400
http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=5330
http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=5346
http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=5361
http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=5369
http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=5365
http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=5153
http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=5212
http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=5217
http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=6404
http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=6413
http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=6415
http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=6276
http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=5530
http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=4977
http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=5536
http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=3705
http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=4994
http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=4992
http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=4996
http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=5190
http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=5198
http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=3871
http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=3899
http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=3911
http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=2448
http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=2147
http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=2150
http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=2156
http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=2154
http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=2160
http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=1479
http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=1497
http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=1224
http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=1242
http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=1060
http://tamilnet.com/art.html?catid=13&artid=29051

Monday, April 20, 2009

முப்பதாயிரம் மக்களை மீட்டதாக எடிட் செய்த வீடியோ - இலங்கை அரசின் பொய் பிரச்சாரம்

முப்பதாயிரம் மக்களை மீட்டதாக எடிட் செய்த வீடியோ - இலங்கை அரசின் பொய் பிரச்சாரம்

இலங்கை அரசு இன்று அதி தீவிர பொய் பரப்புரை, பிரச்சாரம் மேற்கொண்டுள்ளது. இலங்கை அரசு முப்பதாயிரம் மக்களை போராளிகளின் பிடியில் இருந்து மீட்டதாக பொய் தகவலை உலக நாடுகளுக்கு அளித்து விட்டு எடிட் செய்த வீடியொவை வெளியிட்டு மக்களை திசை திருப்புகிறது..

இன்று அதிகாலை தொடக்கம் கொத்து கொத்தாக தடை செய்யப்பட்ட குண்டுகளை பொது மக்கள் மீது வீசி சுமார் ஆயிரத்து அய்னூற்றுக்கும் மேற்பட்ட அப்பாவி மக்களை கொன்று விட்டு.. குண்டு வெடிப்பின் தகிப்பில் இடம் மாறும் மக்களை தொடர் குண்டு வெடிப்பின் மூலம் பாதுகாப்பு வலயத்துக்குள் இருந்து உயிர் பிழைக்க ஓட செய்து சுமார் அய்னூறு மக்கள் இடம் பெயர்வதை ஒளிபதிவு செய்து அதனை எடிட் செய்து திரும்ப திரும்ப வந்தவர்களே மீண்டும் வீடியோவில் வருகின்றனர். இப்படீ எடிட் செய்த வீடியோவை காட்டியவர்களை மீண்டும் மீண்டும் காட்டுவதன் மூலமாக கும்பல் கும்பலாக மக்கள் போராளிகளின் இடத்தை விட்டு வெளியெறுவது போல் பொய் பிரசாரம் செய்கிறது...

இதனை விட கொடுமையாக இலங்கை இனவெறி இரானுவம் இன்று கொன்று குவித்த ஆயிரது அய்னூரு மக்கள் படுகொலையை மறைக்க போராளிகள் மனித வெடிகுண்டை வெடிக்க செய்தனர் என ஒரு புரளியை பரப்பி உள்ளது... தமிழர்களே , தமிழ் உணர்வாளர்களே இலங்கை அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் இனைய தள செய்தியையோ, வீடியொவையோ நம்பி எமாந்து விடாதீர்கள்..

இது போன்ற புரளிகளை இத்தாலிய தூமையை நக்குபவர்களும், இரத்த காட்டெறி பக்செவின் மலத்தை நக்குபவர்களும் தான் நம்பி எமாறுவார்கள்..

Friday, April 17, 2009

தி.மு.க,காங்கிரஸ் கூட்டணியின் வேதனைப் பட்டியல்

தி.மு.க,காங்கிரஸ்,விசி அங்கம் வகிக்கும் UPA கூட்டணியின் வேதனை பட்டியல்

நண்பர்களே தி.மு.க,காங்கிரஸ் தமிழர் துரோக,விரோத கொலைகார கூட்டணியின் வேதனைகளை இந்த பட்டியலில் தொடர்ந்து பின்னூட்டமாக சேருங்கள்

1) கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஈழா தமிழ்ர்களை கொன்று குவிக்க எட்டாயிரம் கோடி வரை நிதியளித்து, நவீன ஆயுதங்களை அளித்து அதனை இயக்க பயிற்சி அளித்து , நவீன ராடார் மற்றும் விமான எதிர்ப்பு பொறிகளை இலங்கையில் தமிழ்ர்களை கொல்ல நன்கொடையாக நிறுவியது

2) இலங்கை தமிழர் பிரச்சனை தாய் தமிழகத்தில் விசுவரூபம் எடுக்க விடாமல் பல நாடகமாடி,வசனம் பேசி மக்களை திசை திருப்பியது. ஜனநாயகத்தின் குரல் வளை நெரிக்கப்பட்டது, பேச்சுரிமை பறிக்கப்பட்டது

3)தமிழக மீனவர்கள் நூற்றுக்கணக்கானோர் இந்த ஆட்சி காலத்தில் இலங்கை கடற்படையால் சுடப்பட்டு இறந்தும் ,சிறை பிடிக்கப்பட்டும், படகுகள்,மீன்பிடி சாதனங்கள் சேதபடுத்தப்பட்டும் இரு-ந்ததை கண்டு கொள்ளாமால் மெத்தனமாக இருந்த்து.. இதற்கு மூல பிரச்சனையான கச்சத்தீவு பிரச்சனையை தீர்வு காணாமல் விட்டது

4)அத்தியாவசிய உணவு பொருட்களின் அநியாய விலையேற்றம்.. அரிசி,பருப்பு,போன்றவை வரலாறு காணாத அளவு விலை உயர்-ந்தது திமுக அங்கம் வகிக்கும் இந்த அரசாங்கத்தில் தான்

5)பண வீக்க விகிதம் வரலாறு காணாத அளவு அதிகரித்தது இந்த ஆட்சியில் தான்

6)விவசாயிகள் தற்கொலை அதிக அளவில் நடந்தது.. கடந்த ஒரு ஆண்டில் மட்டும் சுமார் அறுபது ஆயிரம் விவசாயிகள் இந்தியா முழுவதும் தற்கொலை செய்து உள்ளனர். UPA government ஆட்சியில் இதுவரை சுமார் இரண்டு இலட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து உள்ளனர்

7)அமெரிக்க சார்பு கொள்கை.. அமெரிக்க முதலீட்டை ஊக்குவித்து சுதேசி தொழில்களை சிதைத்தது.. இன்று நாம் அன்றாடம் உபயொகிக்கும் பல பொருட்கள் அமெரிக்க தாயரிப்பு அதற்கு வழிவகை செய்து இந்திய சிறுதொழில்களை சிதைத்தது இந்த அரசாங்கம்


8)தவறான அணுசக்தி கொள்கை.. அமெரிக்க வடிவமைத்து கொடுத்த இந்திய அனுசக்தி துறையையே எதிர்காலத்தை கேள்விகுறியாக்கும் வகையில் அமெரிக்க அடிமைதன அனுசக்தி ஒப்பந்த ஆதரவு

9)உலக பொருளாதார வீழ்ச்சியின் தாக்கம் இந்தியாவில் இன்று சுமார் இருபது இலட்சம் பட்டதாரிகலுக்கு வேலை இல்லாத ஒரு நிலை .. பல நிறுவனங்ககளில் ஆட்குறைப்பும், சம்பள குறைப்பும்..

10)நாட்டின் பாதுகாப்பில் குளறுபடி.. இந்தியா குடிமக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல்.. மும்பாய் தாக்குதல் .. முன் கூட்டையே தகவல் தெரிந்தும் கவனகுறைவு, நக்சல் தாக்குதல்கள், பெங்கலூரு,அஹமதாபாத்,சூரத் ஆகிய நகரங்களில் தொடர் குண்டுவெடிப்பு .. இன்று வரை தொடர் குண்டு வெடிப்பு உண்மை குற்றவாளிகளை கண்டரியாமல் புறக்கணித்தல்..

11)ஊழல், மிக பெரிய அளவில் மக்கள் பணம் சுரண்ட பட்டு சுவிஸ் வங்கி கணக்குகளில் இடப்பட்டது.. இந்தியாவில் மிக பெரிய ஊழலான சுமார் அறுபது ஆயிரம் கோடிகளுக்கும் மேல் ஸ்பெக்ட்ரம் ஊழல் செய்தது திமுக அரசு, மக்கள் பணத்தை சுரண்டி கடலுக்குள் போட்டது.. எந்த வகையிலும் உதவாத சேது சமுத்திர திட்டத்தை ஊழலுக்காக வலுக்கட்டாயமாக நடத்தி மக்கள் பணத்தை சுரண்டியது.. கடலில் தோண்டாத இடங்களை தோண்டியதாக பொய் கணக்கு காட்டியது..

12)மந்தமாகிய தேசிய நாற்கர சாலை திட்டம்.. மிக அத்தியாவசியம் ஆகிய நாற்கர சாலை திட்டத்தை பல இடங்களில் மந்தமாக்கி அதனை விரைந்து நிறைவேற்றாமல் இழுத்தடித்தது.

13)வரலாறு காணாத மின்வெட்டு! தமிழகத்தை இருட்டில் சிக்கவிட்டு மக்களை தவிக்க விட்டது.. சென்னையில் மட்டும் மின் வெட்டு நேரத்தை குறைத்து தென் தமிழக நகர் புறபகுதிகளில் ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் வரை மின் வெட்டு செய்தது..

14)எதிர்காலம் இல்லாத தகவல் தொழில்னுட்ப துறை.. எந்த ஒரு முன்னெற்பாடும் செய்யாமல் வேலை இல்லா திண்டாட்டத்தை அதிகரித்தது..

15)மத்திய அமைச்சர் பாலு தனக்கு சாதகமாக ஒரு நிறுவனத்துக்கு எரிவாய் சலுகை அளிக்க இந்தியா எரிவாயு துறை அமைச்சரை நிர்பந்தித்து அதனை பாரளுமன்றத்தில் பகிரங்க படுத்தி நாட்டை சுரண்டுவது தனது உரிமை போல் பேசியது..

16)மக்கள் பணத்தை சுரண்டி ஒரு தொலைகாட்சி ஆரம்பித்தது.. மாராட மயிராட நிகழ்ச்சிகளை காட்டி மக்கள் சிந்தனையை சிதற செய்தது..

17)குடும்ப அரசியல் தமிழகத்தை இரண்டாக கூறு போட்டு தனது இரண்டு மகன்களுக்கு சுய அதிகாரம் செய்ய வழிவகை செய்தது..

18)பெருகி வரும் கொலை , கொள்ளை , கட்ட பஞ்சாயத்து ஆபத்துகள், சட்டம் ஒழுங்கு சீர்குலைந்தது..

19)குடும்ப சண்டையால் மதுரையில் போலிஸ் ஆதரவுடன் தினகரன் அலுவலகம் தீ வைத்து கொளுத்தப்பட்டது.. இரண்டு பொறியாளர்கள் உயிருடன் எரித்து கொல்லப்பட்டனர்.. பின் குடும்பம் ஒன்று சேர்ந்தது ஆனால் எரித்து கொல்லபட்ட உயிர்கள் திரும்ப வருமா? தினகரன் அலுவலகத்தை தீ வைத்து கொழுத்திய அட்டாக் பாண்டி என்னும் ரவுடிக்கு அழகிரி தயவால் தி.மு.க அரசாங்கம் சார்பாக மதுரை வேளான் துரையில் கவுரவ பதவி கொடுக்கப்பட்டது.. என்ன கொடுமை ?

20)போலிசாரின் அட்ட்காசம் .. உயர் நீதிமன்றத்தில் புகுந்து நீதிபதிகள், வழக்கறிஞ்சர்கள் , வாகனங்ககளை அடித்து நொறுகியது.. சட்டக் கல்லூரி மாணவர்கள் தகராறை வேடிக்கை பார்த்து நின்றது ..
இன்று வரை வாகனங்ககளை அடித்து நொறுக்கிய போலிசார் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க வில்லை..

21)புரளியை, பொய் பிரச்சாரத்தை மத்திய உளவு துறை மூலம் தமிழக அரசும், காங்கிரசு அரசும் சேர்ந்து பரப்புவது..

22)ஒக்கேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை உடப்பில் போட்டது..

23)பாமரகளிடம் ஒட்டுக்கு பணம் கொடுக்கும் முறையை அறிமுகபடுத்தியது.. இலவசங்கள், போலி வாக்குறுதிகள் என ஓட்டை பணத்துக்கு இடும் முறையை வழக்கபடுத்தியது

Tuesday, April 14, 2009

ஈழத்திற்காக களம் இறங்கி போராடும் தமிழக பெண்கள்

ஈழத்திற்காக களம் இறங்கி போராடும் தமிழக பெண்கள் - ஆதரவு தேவை

உலகில் உள்ள தமிழர்கள் எல்லாம் ஈழத்திற்காக போராடுகையில் தமிழகத்தில் இடையே தேர்தல் பரபரப்பால் பின்னுக்கு தள்ளபட்ட ஈழ போராட்டங்களை இன்று வெகுண்டு எழுந்துள்ள ஒரு பேராசியையின் தலைமையில் பல பெண்கள் உண்ணா நிலை போராட்டமாக சென்னை குளத்தூரில் மறைந்த தியாகி முத்துகுமரனின் வீட்டின் முன் அரம்பித்து வைத்து உள்ளனர்.. இவர்களுக்கு போலிசார் பெரிய அளவில் தொல்லைகள் கொடுப்பது போல் தெரிகிறது..

தமிழ்கமே!! தமிழ் இயக்கங்களே அனைவரது ஆதரவும் இவர்களுக்கு தேவை படுகிறது...

http://puthinam.com/full.php?2b2UrTe0d5k5J0ecCE6M3b4d4Bm4d3g4k3cc2HmZ2d43cSX2b033Lp3e

Saturday, April 11, 2009

தமிழின துரோகிக்கு பஜனை பாடும் சு.ப.வீ

நண்பர்களே இன்றைய கலைஞ்சர் தொலைகாட்சி செய்தியை பாருங்கள் பலராலும் திராவிட செம்மல் என தூக்கி வைத்து கொண்டாடப்படும் "சு.ப.வீ " என்னும் சுனா பானா பாடும் "தமிழின துரோகி" பஜனையை பாருங்கள் .. நாக்கில் சிறிது கூட நரம்பில்லாமல் முதல்வருக்கு புகழாரம் சூடுகிறார்கள்... பெரியாரியத்தை பிழைப்புவாததிற்காக பயன்படுத்தும் வீரமணி இன்ன பிற துரோகிகளின் வரிசையில் தனக்கும் ஒரு துண்டை போட்டு இடம் பிடித்து உள்ள இவரை என்ன என்று சொல்ல .. காலையில் துரோகி தொலைகாட்சியில் பேசுவதற்காக இப்படியா ஏற்கனவே முக்கால்வாசி செத்து விட்ட புலம் வாழ மற்றும் ஈல தமிழ்ர்களின் நெஞ்சில் துரோக முல்லை குத்தாதீர்கள் ...

உலக தமிழ்ர்களை ஒருங்கிணைத்து ஈழ விவகாரத்தை எழுச்சியுற செய்த ஒரே தலைவர் முதல்வராம் !!

பிரபாகரன் தோல்வியுற்று அவரை போரஸ் மன்னனை போல் நடத்த வேண்டும் என ஒரு வன்மமான என்னத்தை வெளியிட்ட இவர் பிரபாகரனை போரசுடன் ஒப்பிட்டு பேசியதற்கு பெருமை கொள்ள வேண்டுமாம் தமிழ் இனம் ..

எதிரி கையில் சிக்கிய போரஸ் கூட கோழை ஆனால் இறுதி நிமிடம் வரை போர் களத்தில் தானும் தன் மகனையும் இறங்கி சமர் கொள்கிறானே அவன் அல்லவா வீரன் .. நன்றாக ஒன்றை உணர வேண்டும் பிராபாகரன் என்றா ஒரு தமிழ் இன வீரனின் உடல் வீழும் முன் சிங்கள இனவெறியர்களின் வரலாற்றில் அந்த மக்களே கண்ணீர் சிந்தும் அளவு ஒரு பிரளயம் வந்து வீழும் .. ஒரு பிரபாகரனை அழித்து ஒர்ராயிரம் பிரபாகரங்களை உருவாக்க போகிறது சிங்கள படை ..

அய்யா சுனா பனா . சு.ப.வீ , முதல்வர் விட்ட வார்த்தைகளிழ் தமிழினம் பாதி செத்து விட்டது , மீதி உள்ள தன்மானத்தை "தாயே,அம்மா,சொக்க தங்கமே" என உருகி கெடுத்து விட்டாயிற்று .. இந்த நிலையில் அவர் பேச்சுக்கு விளக்கம் கூறுகிறேன் என்று உங்கள் பிழைப்புவாதத்தை ஈழா விவகாரத்தில் காட்டாதீர்கள் ..

உன்மையில் உனர்ச்சி பொங்க தமிழ் இனம், பெரியாரிசம் பேசும் இழைய தலைமுறைகள் இன்று சிறை கம்பிகளுக்கு உள்ளே. இந்த பிழைப்புவாத பெரியார்வாதிகள் இன்னும் போரஸ் ,தமிழ்ன தலைவர் என்ரு பஜனை பாடி மக்களை எமாற்றி கொண்டு இருக்கின்றனர் ..இப்பொவாவது விழித்து கொள்வோம்

சரியான தலைமையை தேர்ந்து எடுங்கள் அல்லது உங்களில் ஒரு தலைவனை உருவாக்குங்கள் சுனா, பான , வீரமணி இன்ன பிற பிழைப்புவாதிகளை ஓரம் கட்டுங்கள் தானாகவே ஒழிந்து விடுவார்கள் தமிழ் இன வரலாற்றில் துரோகம் இழைத்த குற்றத்திற்கு

ஈழ தமிழர்களுக்காக தமிழ் கடவுளிடமும் & சர்வ மத கூட்டு பிராத்தனையும்

தமிழ் கடவுளிடம் முறையிடல்!!

நம்பியோர்க்கு கடவுள் , பகுதறிவோருக்கு அது கல்..

அரசினிடம் வேண்டினோம், மந்திரியிடம் வேண்டினோம் , உலக மக்களிடம் வேண்டினோம் , தலைவர்களிடம் வேண்டினோம், உலகமே செவிடான நிலையில் தமிழின துரோகிகள் கோலோச்சும் இந்த கொடூர உலகத்தில் இன்று இனம் அழிக்கும் செவிட்டு ஈன அரசனிடம் புலம்புவதை விட கல்லே சிறந்தது என ..

அணைத்து திசைகளில் ஆயுதங்கள் கொண்டு சுமார் இலட்சத்திற்கும் மேலான தமிழ் மக்களை கொல்ல சூல்நிதிருக்கும் ஆபத்தை களைய , துர் கணங்களை ஒழிக்க ஒரு முயற்சியாக தமிழ் கடவுள் முருகனிடம் வேண்டுதல் பிராத்தனை ..

கல்லோ, கடவுளோ அது தமிழ்ரின் பெரும்பாலான கலாச்சாரத்தில் , நம்பிக்கைகளில் ஒன்றாகியது தான் முருகன் எனும் தமிழ் கடவுள் ..

தமிழினத்தின் நாயகன் என காவியங்கள் படித்த அந்த உணர இயலா சக்தியிடம் வேண்டுதலை வைப்போம் ..

பகுத்தறிவு பேசி இன்று சுய லாபத்தால் சிறுமதி என குறுகி போன துரோகிகளும் ஒரு கருங்கல்லும் ஒன்று தான்.. இன்றைய தேதியில் தமிழ் ஈழத்தை பற்றி பேசினால் குற்றம், விவாதித்தால் குற்றம் என ஆகி இன்று தமிழ் மக்கள் பேச்சுரிமை குரல்வளைகள் நெரிக்கப்பட்டு உள்ள சூழ்நிலையில் இது வரை நாம் தமிழ் ஈழ மக்கள் அவதிகளை பற்றி மேற்கொண்டு பரப்புரைகளை விட இன்னும் வீரியமாக உணர்வு பூர்வமாக மக்களிடையே கொண்டு செல்ல வேண்டியுள்ளது ..

அதற்காக எந்த ஒரு தேர்தல் கமிஷனும், ஏவல் துறையும் குறுக்கீடு செய்ய இயலாத ஒரு உணர்ச்சி பிரவாக பரப்புரையாக இந்த பிராத்தனைகள் அமையும் வகையிலும் பலதரப்பு மக்களை குறிப்பாக பெண்களை இந்த ஈழ மனித அவலம் சென்று சேரும் வகையில் வழிபாட்டு தளங்களில் சிறப்பு பிராத்தனைகளை அடுத்த கட்ட போராட்டமாக , பிரச்சாரமாக ஆரம்பித்து வைப்போம் ..

தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் தமிழ் இன துரோகிகளின் அழிவை வேண்டி தமிழ் மக்களை இன்னலில் இருந்து மீட்டு எடுக்க ஒரு சிறப்பு வேண்டுதல் நடத்தினால் என்ன ?

பகுத்தறிவு பாசறையில் இப்படி ஒரு கேள்வி விழுவது தவறு தான் .. ஆனால் இன்று உள்ள சூழ்நிலையில் எந்த ஒரு கெடுபிடியும் இல்லாமல்,ஏவல் துறை அனுமதி வாங்க அவசியம் இல்லாமல் மக்களிடையே ஈழ விவாகரத்தை எடுத்து செல்ல இது போன்ற உத்திகள் அவசியம் ஆகின்றன ? என்ன நினைக்கிறீர்கள் ?

கல்லாய் போன தமிழ் இன துரோகிகளை நம்புவதை விட கல் சிலையே ஆயினும் அதனையும் நம்பி முறையிடுவதன் மூலம் தற்போதைய பகுத்தறிவு அரசனின் கல் மனதை சுட்டி காட்டி இரட்டை வேடத்தை கிழிப்போம்

இதே போல் சர்ச்சுகளில் , மசூதிகளில் தமிழார் நலன் வேண்டி சிறப்பு கூட்டு பிராத்தனைகளை தொடர்ச்சியாக வைத்தால் என்ன ?

தமிழ் புத்தாண்டில் ஆலயங்களில் கூட்டம் நிரம்பி வழியும் சமயம் இது போன்ற தமிழார் நலம் வேண்டி சிறப்பு பிராத்தனைகள் மக்களிடையே இப்பொது மழுங்க செய்யப்படும் இலங்கை மனித அவலத்தை இன்னும் வீரியமாக எடுத்து செல்லும் .. குறிப்பாக இலங்கை விவகாரத்தில் அவ்வளவாக தெரியாத குடும்ப பெண்களை ஈழ விவகாரம் சென்று அடைய ஒரு வாய்ப்பாக அமையும் .

மக்கள் குறிப்பாக பெண்கள் செண்டிமென்டலான விஷயத்துக்கு மிக அதிக முக்கியத்துவம் கொடுப்பார்..

** சர்வதாரி வருடம் பிறந்ததால் ஆண்களுக்கு ஆபத்து என்று வீடு தோறும் விளக்கு வைத்தது
** நல்லதாங்கால் விவகாரத்துக்காக அண்ணன்மார்கள் தங்கைக்கு பச்சை சீலை எடுத்து கொடுத்தால் .. { இந்த விவகாரத்தில் பிரிந்து இருந்த அண்ணன் தங்கை கூட சேலை எடுத்து பகிர்ந்து கொண்டதை கண்டுள்ளேன் ) வீட்டை ஒதுக்கிய அண்ணன்கள் தேடி சென்று தங்கைகளுக்கு சேலை எடுத்து கொடுத்தனர்

இதே போன்று ஏப்ரல் பதினான்கு (தமிழ் புத்தாண்டு ) கூட்டு வழிபாடுகளுடன் வீடு தோறும் விளக்கு ஏற்றி ஈழ விவகாரத்தை தமிழகமெங்கும் சுடர் விட செய்யவோம். ஈழ விடுதலைக்காக இன்னுயிர் நீதவர்களுக்கும் அஞ்சலியாகவும் மனவலிமை பெறவும் ஒற்றுமை சிறக்கவும் வீடு தோறும் அன்று விளக்கு ஏற்றுவோம்


இலங்கை தமிழர்களுக்காக கூட்டு பிராத்தனை-விசயகாந்த்

இந்திய அரசும் தமிழக அரசும் செயல்படாத நிலையில் தமிழினத்திற்கு மிக பெரிய வரலாற்று துரோகத்தை இழைத்து வருகின்றன. காப்பாற்றும் நிலையில் உள்ளவர்கள் கைவிட்டு விட்டனர். வாடும் இலங்கை தமிழர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் தே.மு.தி.க. தலைவர் விசயகாந்த் எப்ரல் 14 தேதி காலை 10 மணி முதல் 11 மணிக்குள் சாவின் விளிம்பில் இருக்கும் இலட்சக்கணக்கான தமிழர்களுக்காக கூட்டு பிராத்தனை செய்ய கேட்டு கொண்டுள்ளார்

அனைத்து ஆலயங்களிலும், மசூதிகளிலும்,மாதா கோவில்களிலுக் இதர வழிபாட்டுதலங்களிலும் சிறப்பு பிராத்தனைகளில் கலந்து கொண்டு மனரீதியாக வலுபடுத்த கேட்டு கொண்டு உள்ளார்

Friday, April 10, 2009

சிவகங்கை செட்டியாரின் புலி வருது புரளியால் கேவலப்படும் காங்கிரஸ்

சீக்கியர்களின் விவகாரத்தில் காங்கிரஸ் ஒரு ஆட்டம் ஆடி விட்டது.. பஞ்சாப்பில் இன்ன பிற மா-நிலங்களில் சீக்கியர்களின் வாக்குகள் சிதறுவதை கண்ட காங்கிரஸ் தமிழகத்தில் இருந்தும் தொடர்ந்து கண்டனம் வருவதால் திக்கு முக்கு ஆடி போய் மக்களை எப்படி திசை திருப்புவது என யோசித்த வேளையில் ஒரே கல்லில் இரண்டு
மாங்காய் என்று சிவகங்கை செட்டியார் போட்ட தப்பு கணக்கால் --நேற்று சோனியா குடும்பத்தார்க்கு புலிகளால் ஆபத்து என்று ஒரு புரளியை கிளப்பி விட்டு மக்களை சீக்கியர் பிரச்சனையில் இருந்து திசை திருப்ப முயன்று இன்று இந்தியர்களிடையே கேவலப்பட்டு உள்ளது..

காங்கிரஸின் இந்த சீப்பான அரசியல் பொய் பிரசாரத்தின் பிண்ணனியை அறிந்த வட இந்தியர்கள் இதனை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை.. தமிழக மக்கள் இதனை பொருட்படுத்தவே இல்லை ... இப்படி புஷ்ஷ்ஷ்ஷ் ஆகி போன புரளியால் காங்கிரஸ் பீதியாகி உள்ளது.. இன்ரு புலிகளின் தொடர்பாளர் நடேசன் சிஎன் என் தொலைகாட்சிக்கு தங்கள் இயக்கம் அப்படி எந்த ஒரு அச்சருத்தலை இந்திய தலைவர்களுக்கு கொடுப்பதில்லை என்ரு விளக்கிய பின் வால் அகப்பட்ட குரங்கை போல் சிவகஙகை செட்டியார் சிதம்பரம் மாட்டி கொண்டு முழிக்கிறார்.. அவர் இன்னும் பத்து தினங்களுக்கு தமிழகம் வர பொவதில்லையாம்.. தமிழர்கள் குறி தவறாமல் செருப்பை வீசி விடுவர் என ஒரு பயமாம்

சில குசும்பு வட இந்தியர்கள் இந்த புரளியை கேட்டு இந்தியாவை சோனியாவிடம் இருந்து காப்பாற்ற புலிகள் தான் இறுதி வழி என நையாண்டி செய்யும் அளவு கேவலப்பட்டு உள்ளார் செருப்படி சிதம்பரம்

Wednesday, April 8, 2009

சீக்கியர்களும்,தமிழ்ர்களும் ஒன்று கூடி போராடுவோம்

நண்பர்களே !

இனப் படுகொலை என்ற தளத்தில் அன்று அவதிபட்டதும் இன்று அவதியுருவதும் இரு இனங்கள் சீக்கியமும் , தமிழும் இந்த காங்கிரஸ் இனபடுகொலை செய்வதில் என்றும் முன்னோடியாக இருந்து வருகிறது .

. சீக்கிய இனபடுகொலைதாரிகளை விடுவித்ததில் இருந்து இன்று இலங்கையில் தமிழ்ர்களை கொன்று குவிப்பது வரை காங்கிரஸின் கைவண்ணம் ஒரே மாதிரி இருந்து வருகிறது .. இப்படி இனபடுகொலைக்கு துணை போகும் காங்கிரசை அடையாளம் தெரியாமல் ஒழிப்பதில் அடுத்த கட்டமாக தமிழ்ர்கள் சீக்கியர்களுடன் கை கோர்ப்பது இன்றைய தேர்தல் காலத்தில் அவசியமாகிறது ..

தமிழான் தனியாக கத்தி பார்த்து ஓய்ந்து வருகின்ற சூழ்நிலையில் காங்கிரஸின் இனபடுக்கொலைகளுக்கு ஆதரவு கொள்கைக்கு எதிராக ஒரு பொதுவான போராட்டமாக தமிழ்கத்தில் இருக்கும் சீக்கிய குருத்துவாரா அமைப்பை சார்ந்த சிலரையும் ஒருங்கிணைத்து ஒரு போராட்டத்தை நடத்தினால் என்ன ?

இந்தியாவில் உள்ள உணர்விலும்,வீரத்திலும் சிறந்த இரு இனங்கள் ஒருங்கிணைந்து காங்கிரசுக்கு எதிராக கோஷமிடுகையில் ஒட்டு மொத அரசும் சற்று ஆடி தான் போகும் ... அணைத்து மாநில மக்களும் சற்று திரும்பி பார்பனர் அல்லது இந்த இன படுகொலைகளை பற்றி சிந்திக்க செய்வர்

போராளிகளுக்கு எதிராக புரளியை கிளப்பும் சிதம்பரம்

திடீரென உலகெங்கும் பெருகி வரும் புலிகளுக்கு ஆதரவான சூழ்நிலையை பார்த்து தமிழகத்தில் இருந்து வரும் கண்டனங்களை பார்த்து தற்போது புலிகளை மீண்டும் தீவிரவாதிகளாக சித்தரிக்க .. புலிகளால் சோனியாவுக்கு ஆபத்து என்று புது புரளியை கருணாநிதி எழுதி கொடுக்க சிதம்பரம் இந்திய உளவு பிரிவின் மூலம் கிளப்பி உள்ளான் ..

Sunday, March 15, 2009

குண்டு காயத்துடன் கருவிலே சிதைவதும், பிறத்தலோ என் விதி , ஏனடி தாயே ?







குண்டு காயத்துடன் கருவிலே சிதைவதும், பிறத்தலோ என் விதி , ஏனடி தாயே ?

ஈழத்தில் இலங்கை இனவெறி படை பொது மக்கள் மீது வீசிய குண்டின் காரணத்தால் கருவில் இரு-ந்த குழ-ந்தை கால் சிதைக்கபட்டு தாயும் கொல்லபட்ட கொடுமை .. இன்னொரு குழ-ந்தை பிறக்கும் போதே கருவில் குண்டின் துகள் தாக்கப்பட்டு இருக்கும் கொடுமை .. இவர்களும் தீவிரவாதியா!! பயங்கரவாதிகளுக்கு எதிரான போர் என சொல்லி கொண்டு இனபடுகொலை பன்னுவதற்கு இதை விட பெரிய ஆதாரம் வேண்டுமா?




தமிழனாய் பிறந்ததற்கு இங்கு ஒவொருவரும் பாவப்பட்ட ஜென்மங்கள் .. தமிழின் குரல்வளை அருக்கபட்டுவிட்ட நிலையில் அதற்கு கத்தி தீட்டி கொடுத்த , இன்னும் கொடுக்கும் ஈன பெருமை இங்கு கழகங்களுக்கு , தமிழின துரோகிக்கும் உண்டு ..

ஈழ்த்தில் மடியும் தொப்புள் கொடி உறவுகளை பற்றி எந்த ஒரு கவலையும் இல்லாமல் தங்கள் சுய லாபங்களுக்கு மீண்டும் ஐந்து ஆண்டுகள் நாட்டை சுரண்ட கூட்டணி அமைக்க அழையும் சுயநலவாதிகளே இந்த பிறந்த குழந்தைக்கு உங்கள் பதில் என்ன ?

ஜனநாயகம் பேசி திரயும் போராளி எதிர்ப்பு மக்களே இந்த பிஞ்சு தீவிரவாதியா ?

உலகமே , ஐ.நாவே ராஜபக்சேவின் விருந்தை உண்டு மகிழுந்து இன படுகொலையை கண்டுகொள்ளாமல் முகத்தை திருப்பும் அதிகாரிகளே இந்த பிஞ்சுக்கு உங்கள் பதில் என்ன ?

போரில் இது சர்வசாதாரணம் என விருந்துண்ண செல்வீர்களா ?

இறைவன் என்பவரும் உலகில் இனம் புரியாத தெய்வீக சக்தி இன்னும் இருக்கிறதா ? இந்த பிஞ்சுகள் செய்த பாவமென்ன , கருவிலே குண்டடி பட்டு கால் சிதைந்து போக விட்ட நீயும் தெய்வமா ? பிறக்கும் பொது குண்டின் துகள் துளைத்து பிறத்தல் தான் விதியா ?

Sunday, March 8, 2009

இஸ்லாம் மாணவிகள் வீதியில் ஆடை மாற்றும் அவல காட்சிகள் - சிங்கள இனவெறி பள்ளியின் அட்டகாசம்..

இஸ்லாமிய மாணவியர்களை வீதியில் ஆடை மாற்ற செய்யும் சிங்கள பெவுத்த இனவெறி பள்ளிகள் .

இந்த காணொளி காட்சியை கண்ட போது கண்களில் சில துளி கண்ணீர் .. உலகின் அத்தனை இனவெறி கொடுமைகளும் இலங்கையில் பவுத்த சமயத்தை பின்பற்றும் இனவெறி இலங்கை அரசால தான் நடைபெற வேண்டுமா!!

குழந்தைகளயும் ஈவு இரக்கமின்றி கொன்ரு குவிக்கும் இலங்கை இனவெறி பவுத்த அரசு இப்பொது இஸ்லாமிய சகோதரிகளை வீதியில் தங்கள் ஆடைகளை சரி செய்ய விட்ட கொடுமை ..

இந்த சகோதரிகளுக்கு ஒரு மறைவிடம் தான் கட்டி கொடுக்க கூடாதா.. இல்லை அவர்கள் தங்கள் மத வழக்க படி உள்ள ஆடைகளில் பள்ளிகளுக்கு அனுமதிக்கலாம் அல்லவா . அமைதியை விரும்பிய புத்தர் இப்படி தமிழர் இரத்தங்களையும், இஸ்லாமிய மாணவிகளயும் வீதியில் ஆடைகளையாவா போதித்தார்.

தமிழர்களே சூழுரைப்போம் இந்த இன வெரி சிங்கள அரசின் இன படுகொலைகளை , இன வெறி செய்கைகளை பள்ளிகளில் திணிப்பதற்காக கண்டனமும், உலக நாடுகளின் கவனத்திர்கும் இட்டு செல்வோம்..




Racism at its worst.. Srilanka is filled with budhist racist doing mass massacres of tamils and also forced Islamic school going girls to correct their dresses in street before attending their schools..

வாரிசை களம் இறக்கும் பங்காரு அடிகளார்!!




பங்காரு அடிகளார் தற்பொது தமிழகத்தில் "அம்மா" என பரவலாக அழைக்கபடும் ஐந்து நாள் லேசான தாடியொடு இருப்பவர்.. மேல்மருவத்தூர் சென்றால் அந்த ஊரையே வளைத்து போட்டு ஆட்சி செய்பவர்.. ஒரு காலத்தில் அருள் வாக்கில் அரம்பித்து தற்போது ஆதிபராசக்தி ட்ரஷ்ட் என்று ஒன்றை நிறுவி கிட்டதட்ட பத்துக்கும் மேற்பட்ட கல்லூரிகளை நிர்வகித்து வருகிறது இவர் குடும்பம்.. ஆனால் நமக்கு இவர் நடத்தும் கல்லூரிகளில் எதாவது எழை மாணவர்கள் படிக்கிரார்களா என பார்தோமானால் அதனை பற்றிய செய்திகள் மிகக் குறைவு..
பல ஏக்கர் நிலங்களை வளைத்து போட்டு உள்ள அவருக்கு கண்டிப்பாக வந்த பணம் அம்மன் பெயரை சொல்லி வசூலித்த உண்டியல் காசு தான்.. இவர் நடத்தும் கல்லூரிகள்

Adhiparasakthi Polytechnic
Adhiparasakthi Matriculation Higher Secondary School
Adhiparasakthi Engineering College
Adhiparasakthi College of Physiotherapy
Adhiparasakthi College of Pharmacy
Adhiparasakthi College of Nursing
Adhiparasakthi College of Science
Adhiparasakthi Agriculture College

இப்படி பல கல்லூரிகளை நிர்வகித்து வரும் இவர் குடும்பத்தார் இன்று பற்பல கோடிகளுக்கு அதிபதிகள் என்றால் மிகையாகாது .. சரி விஷயத்துக்கு வருவோம்.

1966 அம்மன் அருள் வந்து சுயம்பாக இரு-ந்த வேப்பமரத்தின் இருந்து இவர் வரலாறு அரம்பிக்கிறது.. இந்த ஆதிபராசக்தி பீடத்திற்க்கு இன்ரு உலகெங்கும் பல கிளைகள் உள்ளன .. இப்பொது இவர்கள் முழுவதும் நல்லது செய்கிறார்களா அல்லது சொத்தை சேர்த்து வைத்து உள்ளனாரா என்பது பெரிய கேள்வி.. இன்று தமிழகம் முதல் ஈழம் வரை உலகின் பல நாடுகளிலும் கிளை பரப்பி உள்ள இந்த அம்மா பக்தர் சபை பக்தி மயக்கத்தில் இவருக்கு செய்யும் பணிவிடைகள் அதி தீவீரம்

அம்மா பங்காருவின் காலை கழுவ சுமார் ஐந்து முதல் பத்து ஆயிரம் வரை நன் கொடை அளிக்க வேண்டும்.. இவர் காலை கழுவ இந்த மனிதர் ஒவ்வொரு ஊரின் சக்தி பீடத்துக்கு விசிட் செய்யும் பொது அந்த ஊர்களின் பெரும் புள்ளிகள் முதல் பலரும் இவ்வாரு பணத்தை கட்டி பால் குடத்துடன் இவர் காலை கழுவ வரிசையில் நிர்கின்ரனர் .. இவர் ஒரு சமயம் எனது சொந்த ஊருக்கு வருகையில் எனது உறவினர் ஒருவர் இவ்வாரு காலை கழுவி தீர்த்தம் என குடித்தார்..
அதே போல் இன்று சபரி மலைக்கு மாலை அணிவதை போல் பெண்கல் பலர் மேல்மருவத்தூருக்கு மாலை அணிவிக்கின்றனர்.. இவர் ஒரு புரட்சி செய்துள்ளார் அதாவது கருவரையின் உள்ள சாமியை பென்களும் பூஜிக்கலாம் .. ஆனால் கோயில் பிர்காரத்தை சுற்றி இவர் அரசியல் தலைவர்கள் பலருடன் சேர்ந்து எடுத்த போட்டொக்கள் இருக்கும்.. இங்கு தான் சூட்சமம் இருக்கிரது .. கிராமங்கலில் இருந்து வரும் பெண்கள் இந்த போட்டொவை பார்த்து சாமி பெரிய சக்தி வாய்ந்தவர் பல தலைவர்களும் இவர் சீடர்கள் என வியந்து அதி தீவிர பக்தர்கள் ஆகி விடுகின்றனர் ..

எது எப்படியோ அடித்த வரை கொள்ளை என பல கோடிகளுக்கு அதிபதியான இவர் இப்பெரும் பணத்தை காக்க தற்பொது அவர் வாரிசான மகனை அம்மாவின் அருள் செம்மல் என முத்திரையொடு களம் இறக்கி உள்ளார்.. அரசியல்வாதிகள் தான் கலைஞ்சர் முதல் குடிதாங்கி வரை தங்கள் வாரிசை இறக்கி கட்சியையும், சொத்தையும் காக்கிறார்கல் என்றால் இன்று ஆன்மீக தொழிலும் தத்தம் வாரிசை களம் இறக்கி உலக பக்தர்களின் பக்தியை பதம் பார்க்க கிளம்பி விட்டார்கள்..
இந்த சின்ன 'அம்மாவின்' காலையும் கழுவி குடிக்க இனி தமிழக பக்தர்கள் மீண்டும் பணம் கட்டி வரிசையில் நிற்பர்.. மேல்மருவத்தூர் தாயே உன் கோயிலை அரசாங்கம் எடுத்து கொள்ள அருள் பாலிக்க கூடாதா!!

Saturday, March 7, 2009

அகோரி சாதுக்கள் பிணம் தின்னும் காட்சிகள்!



அகோரி சாதுக்கள் - சிவனின் மைந்தர்கள் என கூறி கொண்டு கங்கை நதியின் இடுகாடுகளில் வாழ்ந்து வருபவர்கள் .. இவர்களை பற்றி இவர்கள் தான்தோன்றி தனமாக சுற்றி கொண்டு இருப்பதாய் "நான் கடவுள் "படத்தை பார்த்தவர்கள் அறிந்து இருப்பார் . ஆனால் அந்த படத்தில் சொல்லாத சில விஷயமும் உண்டு அதனை தெரிந்து கொண்டால் தான் நீங்கள் அகொரியின் வாழ்கையை பற்றி முழுதும் அறிந்த நிறைவு உண்டு ..

இந்த அகோரிகள் இடுகாடுகளில் எரியும் பிணத்தை எடுத்து அதன் மாமிசத்தை உண்பவர்கள் .. காசியில் எரித்தால் நேரடி மோட்சம் என்பதும் அதுவும் அந்த சடலம் எரியும் பொது இது போன்ற அகோரி சாமியார் தேர்ந்தெடுத்து பிணத்தை உண்டல் அது மேலும் சிறப்பு எனவும் ஒரு மூட நம்பிக்கை மக்களிடையே உள்ளது ...

இந்த அகோரி சாமியார்கள் கஞ்சா அடிப்பது , சாராயம் குடிப்பது என்று எல்லா தீயபழக்க வழக்கங்களை சிவனின் பெயரை சொல்லி செய்கிறார்கள் .. அது சரி இவர்கள் இப்படி ஆடை களைந்து எதன் மீதும் பிடிப்பு அற்று திரிவதால் இவர்களை முற்றும் துறந்தவர்கள் என ஒரு சாரார் நம்பி வணகுவதை காண்கிறோம் .

அது சரி இந்த அகோரி சாதுகளுக்கு உணர்ச்சிகள் இருக்காதா ?

கஞ்சாவையும்,மதுவையும் சில சமயம் பிணத்தையும் உண்ணும் இவர்களுக்கு சராசரி மனிதனை போல காமத்தின் உணர்வகளும் கொப்பளிகாதா ?

அவர்கள் காம வேட்கையை தனிபதற்கும் படிபறிவில்லாத ஒரு சிலர் ஒரு வித படையலை செய்கின்றனர் ..

அதாவது இந்த அகோரிகள் சுத்தம் அசுத்தம் என எதனையும் பிரித்து பார்ப்பதில்லை நான் இந்த விஷயத்தை பற்றி துலாவிய பொது சில அடித்தட்டு மக்கள் குழந்தை பாக்கியம் வேண்டி பெண்கள் மாதவிடாய் காலங்களில் கழிவுகள் வெளியேறும் பொது இந்த அகோரி சாதுக்களிடம் உடல்உறவு கொள்கிறார்களாம் .. இப்படி உறவு கொள்வதனால் குழந்தை பாக்கியம் கிட்டுமாம் .. என்ன ஒரு மோசமான நம்பிக்கை !!

இந்த காணொளி காட்சியில் ஒரு அகோரி தன் வாழ்கையை பற்றி விளக்கி கடைசியில் பிணத்தின் மாமிசத்தை சுட சுட சிதையில் இருந்து எடுத்து சுவைக்கிறார்

http://www.youtube.com/watch?v=44r6McYybvI

இது மிக மோசமானது

http://www.hotklix.com/?ref=link/390418

கங்கை நதியில் மிதக்கும் பிணத்தை இழுத்து வந்து ஆசிரமத்தில் வைத்து பூஜித்து அதனை வெட்டி ஒரு சடங்காக உண்ணுகிறார்

இந்து மதம் பெரும் புதிரானது .. ஒரு புறம் இது போன்ற அகோரி சாதுக்கள் மறுபுறம் கார்பரேட் சாதுக்கள் ..

ஜக்கி வாசுதேவின் மர்மமான கடந்த காலம்



நண்பர் ஒருவர் ஜக்கி வாசுதேவை உண்மையான துறவி என்றும் .. "அத்தனைக்கும் ஆசைபடு" என்பது மிகவும் அறிவுபூர்வமான ஒரு கருது எனவும் கூறிய பொது சில நினைவுகள் வந்து சென்றது அது உங்கள் பார்வைக்கு இங்கே

சகல சவுகரியா இராஜ வாழ்க்கையை தூக்கி எரிந்து ஒரே ஆடையை மட்டும் கட்டி கொண்டு அரண்மனையை விட்டு வெளியேறி ஆசா பாசங்களை துறந்து வந்தார் புத்தர் அவர் போதித்து என்ன?

ஆனால் ரய்பொன் கூலிங் கிளாஸ் அணிந்து கில்லெர் ஜீன்ஸ் போட்டு கொண்டு அசத்தலாக ஆனந்த விகடன் கட்டுரைக்கு வார வாரம் வித விதமா போஸ் கொடுத்த ஜாக்கி வாசுதேவ் சொன்னதை வைத்து அவர் தான் "உண்மையான துறவி "என்பது சற்று நெருடலான ஒன்று ..

ஜாக்கி வாசுதேவ் கார்பரேட் சாமியார்களில் ஒரே நபர்.. நான் அவரை எதிர்த்து பதிவதாக கோபபட வேண்டாம் ..

அவர் சிவராத்திரியன்று நடத்து விசேஷ கூட்டங்களில் கலந்து கொண்டு உள்ளேன் அதே போல் அவர் கொயமுதூரிஇல் தியான லிங்கம் பிரதிஷ்டை செய்த அன்று நடந்த ஒரு நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு அங்கு நடபவற்றை நேரடியாக கண்ட அனுபவமும் உண்டு...

ஜாக்கி வாசுதேவ் என்பவர் பிறக்கும் பொது மகானாக பிறந்தவர் அல்லர். அவர் பழையா கால வாழ்கையை புரட்டி பார்த்தீர்கள் என்றால் சில மர்மங்கள் உண்டு .

ஜாக்கி வாசுதேவின் மனைவி பெயர் 'விஜி' எனப்படும் விஜயகுமாரி .. இவர் ஜாக்கி வாசுதேவுடன் இணைந்து ஆன்மிகம், இஷா ஆஸ்ரம பணிகளை கவனித்து வந்தார் .. திடிரென்று 1997 அம் ஆண்டு ஜனவரி மாதம் அவர் மர்மமான முறையில் இறந்தார் . அவர் பிரேதம் அவசர அவசரமாக விஜியின் தாய் தந்தையருக்கு கூட ஆசுவாசிக்க இடமிலாமல் இறுதி சடங்கு செய்யப்பட்டது .. அவர் தற்கொலை செய்து கொண்டார் என தகவல்கள் கசிந்தன ..

விஜியின் தந்தை, ஜக்கியின் மாமனாரும் ஆன தி.ஷ் . கங்கான தனது மகளின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் அவர் கொலை செய்யப்பட்டு அவசர் அவசரமாக இறுதி சடங்கு செய்யப்பட்டது என பெங்களூரில் உள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.. பெற்ற பிள்ளையை பறிகொடுத்த தகப்பன் தன் மகளின் மரணத்தில் மர்மம் இருப்பதையும் விஜி கொலை தான் செய்யபடுள்ளர் எனவும் அடித்து சொன்னார் .. இந்த புகாரின் அடிப்படையில் கோவை போலீசார் இஷா அஷ்ரமதுக்கு விசாரணைக்கு வந்த பொது ஜாக்கி வாசுதேவ் அவசரமாக அமெரிக்கா பறந்து விட்டார் ... ஜனவரி 23 அம் நாள் விஜி மரணமடைந்தார் .. அன்று விஜியின் பெற்றோருக்கு ஜாக்கி போன் செய்து விஜி இறந்து விட்டதாக சொல்லிவிட்டு அவர்கள் பெங்களூரில் இருந்து கோவை வரும் முன்னே சடலத்தை இறுதி சடங்கு செய்து விட்டார்.

என்ன கொடுமை இது ? பெற்ற தாய் தந்தையர் தன் மகளின் சடலத்தை பார்க்க விடாமல் இறுதி காரியம் செய்தது .. போலீசார் வழக்கு பதிவு விசாரணை செய்ய ஆரம்பித்த பொது ஜாக்கி வாசுதேவுக்கு அதே ஆச்ரமத்தை சேர்ந்த வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டு அதனை விஜி தட்டி கேட்ட பொது ஏற்பட்ட தகராறினால் அவர் கொலை செய்யப்பட்டு அது தற்கொலை என ஜோடிக்க பட்டது என செய்தி கசிந்ததாக நியாபகம் ..

இந்த வழக்கின் விசாரணையின் பொது வாசுதேவ் (அப்போதையா ஜெகதீஷ்) தன் மனைவி ஒரு விதமான பிராணாயமா பயிற்சி செய்த போது மூர்ச்சையாகி விட்டார் எனவும் அது தற்செயலாக நடந்த ஒரு சம்பவம் என கூறி அவர் பண பலம் மற்றும் மேலிடது செல்வாக்கால் அந்த புகார் கிடப்பில் போடப்பட்டது ..

ஆகவே நண்பர்களே இந்த ஜக்கி வாசுதேவின் மறுபக்கம், இளமை காலம் சற்று மர்மமானது .. உணர்ச்சி வசப்பட்டு அனைவரையும் உண்மையான துறவி என்று புகழாரம் சூடாதீர்கள் ..

என்னை பொறுத்த வரையில் வாழும் வரை மாசற்ற வைரமாக வைராக்கியமாக வாழ்ந்து மறைந்த விவேகானந்தரை துறவி என்றால் தகும் .. புத்தரை உண்மையான துறவி என்றால் தகும் .. மகாவீரரை சொன்னால் தகும் , வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடிய சன்மார்க்க நெறி வள்ளலாரை உண்மையான துறவி என்றால் தகும் ..

அதனி விட்டு விட்டு இந்த கில்லர் ஜீன்ஸ் ஜாக்கி வாசுதேவ் யோகா,தியானத்தை கற்று அதனை போதிக்கிறேன் என்று கூறி கொள்ளும் உலகம் சுற்றி வரும் ஒரு கார்பரேட் சாமியார் அவ்வளவு தான் .... ஜாக்கி வாசுதேவின் மாமனாருக்கு தன் மகளின் மரணத்தில் ஜாக்கி மீது உள்ள சந்தேகம் மூன்றாம் மனிதர்களான நமக்கும் இருக்குமல்லவா ? யார் அறிவார் அந்த ரகசியம் ....

இவரை போல தான் வாழும் கலை பண்டித ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரும் இவரது வாழும் கலை உறுப்பினர்கள் சமீபத்தில் நடந்த இலங்கை ina படுகொலைக்கு எதிராக போது மக்கள் நடத்திய ஒரு அமைதி பேரணிக்கு ரவி சங்கரின் பெரியா பெரியா புகைப்படங்கள் பதித்த விளம்பர பாதுகைகளை கொண்டு வந்து ஊர்வலத்தில் அவருக்கு விள்ளம்பரம் தேடி கொண்டு இருந்தனர் .. அந்த பேரணியோ அங்கு சாவும் தமிழ்ர்களை நினைத்து வருந்தி நடைபெறும் மவுன பேரணி .. எந்த ஒரு கட்சியை சேர்ந்தவர்களும் எந்த ஒரு கட்சி கோடி, தலைவர் படத்தை ஏந்தி வராத சூழ்நிலையில் இவர்கள் ரவிசங்கரின் விளம்பர படங்களை கொண்டு வந்து அதனை ஒரு விளம்பர யுக்தி ஆகி கொண்டனர் ...

ஆன்மிகத்தை நம்புவோம், உண்மையான ஆன்மீக ஆர்வலர்களை மதிப்போம் .. தனி மனித வழிபாட்டை தவிர்ப்போம் .. விவேகானந்தரை தவிர்த்து வேறு யாரையாவது கலிகால துறவி என்றால் அது ஏற்புடையது ஆகாது

Tuesday, February 24, 2009

தமிழ் சகோதரியின் நெஞ்சை ஆழ உருக்கும் கண்ணீர் மடல்!

தமிழ் சகோதரியின் நெஞ்சை ஆழ உருக்கும் கண்ணீர் மடல்
ஈழ தமிழ்ர்கள் ஒவ்வொருவரும் இலங்கை இனபடுகொலை இராணுவத்தால் படும் கொடிய கஷ்டங்களை சுமந்து வரும் மடல்


தகவல்: http://www.nerudal.com/

அன்புள்ள அப்பாவுக்கு!

தேசம் காக்கப் புறப்பட்டு விட்ட சேயிடமிருந்து..

இலக்கம் 109,
இடதுகரை வாய்க்கால்,
இரணைப்பாலை,
வன்னிப் பெருநிலப்பரப்பு,
தமிழீழம்.
மாசி 21, 2008.

அன்புள்ள அப்பாவுக்கு!


வழமை போல நலம்; நலமறிய ஆவல் என்று எழுத எனக்கு இன்று மனம் வரவில்லை; காரணம், நீங்கள் அறிந்ததே.

பூமிப் பந்து சுற்றுகையையோ அல்லது சூழற்சியையோ நிறுத்தினாலும் என் மனப்பந்து எம் மண்ணை விட்டு அகலாது என்பதை உளமார உணர்ந்து, பனி விழும் தேசத்தில் எம்மை(யும்) நினைத்து ஏங்கிக் கொண்டிருக்கும் உங்களுக்காகவும் அண்ணா மற்றும் அண்ணிக்காகவும் இம்மடலைச் சற்று விரிவாக எழுதுகிறேன்.

கடந்த வருடம் நீங்கள் எழுதி அனுப்பிய கடிதம் சில வாரங்கள் முன்னர் பல தடைகள் தாண்டி உடைத்து ஒட்டப்பட்டு இடம்பெயர்ந்து இயங்கிய எமதூர்த் தபாலகத்தில் இருந்து எமக்குக் கிடைத்தது.
அதில் நீங்கள் எதிர்வு கூறி எழுதியிருந்தவாறு, இங்கு நாளாந்த நிலவரம் வரவர மோசமாகிக் கொண்டே போகிறது. கடந்த வருடம், ஐந்தாம் மாதம் 23ம் திகதி எங்களுடைய வீட்டுக்கும் முறிகண்டிச் சந்திக்கும் இடையில் சிறிலங்காப் பயங்கரவாத அரசின் ஆழ ஊடுருவும் படை நடாத்திய ‘கிளைமோர்’த் தாக்குதலால் 6 சிறார்கள் உட்பட்ட 16 பேர் அநியாயமாய் அவலச்சாவடைந்து விட்டதைப் பற்றியும் புதூர் நாகதம்பிரான் கோவில் விழாவுக்குச் சென்று கொண்டிருந்த மக்கள் மீது இரவு நேரத்தில் மாங்குளத்திற்கும் கரிப்பட்டமுறிப்பிற்கும் இடைப்பட்ட 19 ஆம் கட்டைப்பகுதியில் ‘கிளைமோர்’த் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை பற்றியும் அறிந்து நீங்கள் மிகவும் பயந்ததாகவும் கவனமாக இருக்கும்படியும் எழுதியிருந்தீர்கள்.

அப்பா! அன்றைய சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களின் உடல்கள் மறு தினம் சனிக்கிழமை மக்கள் வணக்கத்துடன் ஓரே இடத்தில் பெருங் கதறல்களுடன் அடக்கம் செய்யப்பட்டதை என் கண்களால் நேரிற் கண்டேன் என்று நான் உங்களுக்கு எழுதிய மடலை அனுப்ப முன், நானும் அம்மாவும் எமது அக்கராயன்குளப் பிரதேசத்தை விட்டு இடம்பெயர வேண்டியவர்களாகி விட்டிருந்தோம்
அதன் பின் நிகழ்ந்த கோழைத்தனமான - அப்பாவி மக்கள் மீதான சிறிலங்காப் படையினரின் ஆழ ஊடுருவும் அணியினரின் பல்வேறு கொடூரத்தாக்குதல்களுக்குப் பின்பாகவும் இன்று வரையும் எமது தாயகம் எங்கும் எத்தனையோ சாவடிப்புகள் பல்வேறு வடிவங்களில் சிங்கள அரச படைகளாலும் ஒட்டுக் குழுக்களாலும் குறிப்பிட்ட சில நாடுகளின் போர் உதவிகளுடன் நிகழ்த்தப்பட்டு விட்டன.

கொத்துக் கொத்தாக குடும்பம் குடும்பங்களாக எமது உறவுகள் பல சிங்கள பேரினவாதப் பூதத்தின் இனப்படுகொலையில் உயிரிழந்து விட்டன. எமது மக்கள் பல்லாயிரக் கணக்கில் வயது வேறுபாடின்றி காயப்பட்டு, ஊனமுற்று சிகிச்சை எதுவுமின்றி பட்டினியோடு பரிதவித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

அப்பா! பாருங்கோ, எத்தனை தரம் நாங்கள் அந்தக் கோயிலுக்கு அந்தப் பாதையால் போய் வந்திருக்கிறோம்? நீங்கள் வெளிநாடு போனதன் பிற்பாடு அம்மாவும் நானும் சித்தி வீட்டுக்குப் போகிற போதும் மருத்துவர் பொன்னம்பலம் ஞாபகார்த்த மருத்துவமனைக்குப் போகிற போதும் பல தடவைகள் போய் வந்த பாதை அது.

ஆனால், இங்கு இப்பவுள்ள நிலைமையை நீங்கள் எல்லோரும் தினமும் இணையத்தளங்களூடாக அறிந்து கொண்டுதானே இருப்பீர்கள்? சில வாரங்கள் முன் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் என்னுடன் படித்த பிள்ளை ஒருவர் எறிகணை வீச்சில் காயப்பட்டு இருந்ததை அறிந்து பார்க்கச் சென்றபோது நானும் எதிர்பாராத வகையில் பல்குழல் பீரங்கித் தாக்குதலில் அகப்பட்டுக் கொண்டேன்.

இப்போ நினைத்தாலும் குலை நடுங்குகிறது - அதில் நான் கூட அகப்பட்டு காயப்பட்டோ இறந்தோ இருக்கலாம் தானே? அப்பா, எங்களை மாதிரி நான்கு பேருள்ள ஒரு குடும்பத்தில், தந்தையும் மூத்த மகனும் அந்த இடத்திலேயே சாக, தாயும் இளைய மகளும் அதே சம்பவத்தில் படு காயம் அடைந்து அங்கங்களை இழந்து இருக்கிறார்கள்!!

அரைநூற்றாண்டு காலத்துக்கும் மேலாக, இப்படி எத்தனை எத்தனை துன்பியல் நிகழ்வுகள்…. கற்பனைக்கும் எட்டாத, நம்பவே முடியாத சம்பவங்கள், எமது இனத்தின் வரலாற்றில் கறையாய்ப் படிந்துள்ளன?!

அப்பா! ஐம்பத்தெட்டில் நடந்த இனப்படுகொலையின் போது, இலங்கைத்தீவின் தென் பகுதியில் சிறுவர்களாய் இருந்த நீங்களும் அம்மாவும் எவ்வளவு தூரம் துன்பப்பட்டு, மயிரிழையில் உயிர்பிழைத்தீர்கள் எனப் பாட்டாவும் அப்பம்மாவும் சொன்ன வரலாற்றுக் கதைகள் இன்னும் பசுமரத்து ஆணியாய் என் மனதில் நன்றாகப் பதிந்துள்ளன.
பின், 77ம் ஆண்டு இனப்படுகொலையின் போது அண்ணாவுடன் மலைநாட்டிலிருந்த போது அகதியாகிப் பிரபல பாடசாலையில் உயிருக்கஞ்சி நீங்கள் தஞ்சமடைந்ததும் பிறந்து சில நாட்களேயான பாலகனாய் இருந்த பெரியண்ணா கடும் தொற்று நோயினால் பாதிக்கப்பட்டு எதிர்பாராத வகையில் உயிரிழந்ததும் நீங்கள் சொல்லி நான் நன்கு அறிவேன்.

அதன் பின், மீண்டும் 83ம் ஆண்டு இனப்படுகொலையின் போது எமது வீட்டிற்குக் காடையர் கூட்டம் தீயிட ஒருவாறு தப்பிப் பிழைத்துக் கப்பலில் வடக்கு நோக்கி அகதியாய் அனுப்பப்பட்ட அவலமும், மாற்றுடையின்றி நீங்கள் தவித்ததும், பக்கத்து வீட்டு ஆட்கள் உதவியுடன் குடிசை போட்டு அவர்கள் வளவுக்குள் தற்காலிகமாய்த் தங்கியதும், பங்கீட்டு அட்டை உணவுக்காகச் சங்கக்கடை வாசலில் விடிய முன்பே போய் நின்றது பற்றியும் நீங்களும் அம்மாவும் சின்னண்ணாவும் அவ்வப்போது கூறிய அநுபவக்கதைகள் இன்னும் என் மனப்பாறையில் ஆழப் பதிந்து அழியாது உறைந்துள்ளன.

இருபதாண்டுகள் முன், ‘அன்பு வழி’ யில் ‘பூமாலை’யோடு என்று கூறிக் கொண்டு அயல் நாட்டிலிருந்து வந்திறங்கிய ஆக்கிரமிப்புப் படையினன் ஒருவன், ஒரு நாள், தேசம் காக்கின்ற காவற் தெய்வங்களுக்கு உணவு கொடுத்த ஒரு மூதாட்டி பற்றித் தெரியுமா என்று கேட்டுப் பள்ளி சென்ற அண்ணாவின் காதைப் பொத்தி அடித்ததில், அண்ணாவின் செவிப்பறை வெடித்துக் குருதி கசிந்தது, அண்ணாவுக்கு, மறந்திருக்காது தானே?

அதன் பின், நான் பிறந்த பின்பு குடாநாட்டுக்குள்ளேயே எத்தனை தரம் சொந்த வீட்டை விட்டு இடம் பெயர்ந்து அலைந்து திரிந்து இருக்கிறோம் என்று உங்களுக்கும் நினைவிருக்கும் தானே?

அப்பா! நீங்களும் அண்ணாவும் உங்களுக்கு ஒரு (வீட்டுக்) கடமை, பொறுப்பு இருக்கிறது என்று கூறியபடி அதைச் செய்திடீங்கள். ஆனால் நான்..? இதுவரை உங்களதும் அம்மாவினதும் ஆசைப்படி, பல துன்பங்களிற்கு இடையில் படித்து முடித்து விட்டேன். இப்போது பல்கலைக்கழகம் போகக் கூடிய தகுதி எனக்கு இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும்.ஆனால் யோசித்துப் பாருங்கோ, பல்கலைக்கழகம் போவதற்கு உரிய சூழ்நிலை இருக்கிறதா, போனவர்களுக்குப் பாதுகாப்பு உத்தரவாதம் இருக்கிறதா என்று?கடந்த ஒரு வருடத்தில் மட்டும், அங்குள்ள அரச படையும் அதன் கூலிப் பட்டாளங்களைச் சேர்ந்தவங்களும் எத்தனையெத்தனை மாணவர்களைச் சுட்டுத் தள்ளிவிட்டங்களென்று உங்களுக்குத் தெரியுமா?
எத்தனை அப்பாவி மாணவியரை மானபங்கப்படுத்தி இருக்கிறாங்கள் தெரியுமா?யுத்த நிறுத்தம் வந்தபின் சமாதானம் வந்து விட்டது, சுகவாழ்வு கிடைத்து விட்டது, பிரச்சனை தீர்ந்து என்று நீங்களும் மற்றவர்கள் மாதிரி உவ்விடமிருந்து நம்பி நம்பி ஏமாறி இருக்க மாடீர்கள் என்றே நினைக்கிறேன். யுத்த நிறுத்தத்தைக் கண்காணிக்க வந்தவர்களே தாக்கப்பட்டதும், தாங்கள், யுத்தத்தைத் தான் கண்காணிப்பதாக அவர்களே அறிக்கை விட்டதும் நீங்கள் அறிந்திருப்பீர்கள் தானே?

இதைவிட வேறென்ன வேண்டும் இங்கு இருந்த நிலை பற்றிக் கூற? ஆனால் தற்போது, சமரசம் பேசி தூது வந்து பேச்சுவார்த்தைக்கு இடைத்தரகராய் இருந்தவரே அண்மையில், எங்கள் தரப்பு, எமது மக்களின் சுயபங்களிப்பிலும் எதிரியிடமிருந்து கைப்பற்றியும் சிறுகச் சிறுகச் சேகரித்த ஆயுதங்களைக் கீழே வைக்க வேண்டும் என்று கூறி அறிக்கை விட்டதை அறிந்த போது எமக்கு அழுவதா சிரிப்பதா என்றே தெரியவில்லை.யுத்த நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்தாகி இரண்டாயிரத்து ஐந்நூற்றுக்குச் சற்று மேற்பட்ட இன்றளவுமான நாட்களுக்குள் இந்த சர்வதேசத்தின் உண்மை முகம் எது என்பதும் உள்நோக்கம் என்னவென்பதும் எமக்குப் புரியவில்லை என்று இனியும் நாங்கள் கூற முடியுமா?

அப்படி நினைத்து, நம்மை நாமே, ஏமாற்றலாமா? உங்கள் தலைமுறைத் தலைவர்கள் போல நம் தலைமுறைத் தலைமையுமில்லை; உங்கள் தலைமுறை போல ஏமாற்றுப்பட நாங்களும் தாயாராக இல்லை. ஏனெனில்,பெரும்பாலும் பெற்றோர்கள் விடும் பிழைகளால் பாதிக்கப்படுவது அவர்களது பிள்ளைகளைவிடப் பேரப் பிள்ளைகளே என்பது எமது வாழ்வின் பெரும் பட்டறிவு.

அம்மாவுக்கு ஏனோ நாம் கடைசியாகக் கட்டி வாழ்ந்த நம் சொந்த வீட்டை விட்டு வெளியேறும் வரை யதார்த்தம் புரியவில்லை…. இலையில்லை, புரியாத மாதிரி இருந்திருக்கிறா என்று தான் சொல்ல வேண்டும். அவ கூட இருந்ததால், என்னால் எங்களுடைய தாய் நாட்டுக்குச் சின்ன சின்னப் பங்களிப்புத்தான் செய்ய முடிந்தது.

பதுங்கு குழி வெட்டுவது, உடுப்புச் சேர்ப்பது, இளநீர் சேர்ப்பது ‘கிபிர்’ தாக்குதல்களில் காயப்பட்டவர்களுக்கு முதலுதவி செய்வது, குருதித் தானம் வழங்குவது போன்றவற்றை மட்டும் தான் இதுவரை நான் செய்து இருக்கிறேன்.

அதுவும் அம்மாவிடம் ‘நல்லா வாங்கிக் கட்டிக் கொண்டு தான்’!இப்படியான வேலைகளைப் பொதுவாக எல்லாருமே செய்யலாம். ஆனால், எல்லையில் நிற்க, எல்லாராலும் முடியாது. என்னைப் போல இள வயது ஆட்கள் தான் இப்போ அதற்கு அவசியம் தேவை.
இந்த நிலை என்று மாறுமோ எனக்குத் தெரியாது. ஆனால், நிச்சயம் மாறும். அதற்குரிய காலம் கனிந்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும்.அவர்களுக்குள்ளேயே குத்து வெட்டுகளும் குளறுபடிகளுமாய் அசுரரின் ஆட்சி விரைவில் ஆட்டம் காணப்போகிறது.

பேரினவாதப் பூதம் கக்குகின்ற தீக்கங்குகள் அதனைச் சுற்றியுள்ள கூட்டத்தைப் பொசுக்கத்தான் போகிறது. புலம்பெயர்ந்து வாழும் நம் மக்களினதும் தமிழக மக்களினதும் எழுச்சி மிகு செயற்பாடுகள் நமது விடுதலைக்கு கட்டியம் கூறி நிற்கின்றன.

இனியென்ன, சந்தேகமே வேண்டாம்… அஞ்சி அஞ்சி… அடங்கி ஒடுங்கி நாம் ஊரூராக ஓடத் தேவை இல்லை. எதிரிக்குப் பயந்து குலை நடுங்கின காலம், காலமாகி விட்டது!நம் சேனைகள் சாணக்கியத்துடன் சாண் இறங்குவது, முழம் முழமாய் முன்னேறி எம் மண்ணை முழுமையாய் மீட்டுச் சாதனை படைக்கவே!!

சுற்றிவளைப்புகளும் தேடுதல்களும் சித்திரவதைகளும் வன்புணர்வுகளும் அநியாயக் கருவழிப்புகளும் காணாமற் போகச் செய்தல்களும் கடத்தல்களும் கொள்ளையடிப்புகளும் கொத்துக் குண்டுவீச்சுத் தாக்குதல்களும், பதுங்கு குழி வாழ்க்கையும் இனி, நமக்கில்லை!

பட்டினி போட்டு, பாதைகளை மூடி, நோய் தீர்க்கும் மருந்துகளைத் தடை செய்து, மருத்துவ வசதிகளை நிறுத்தி, குண்டுகளை மழையாய்ப் பொழிந்தும் கிளைமோர்த் தாக்குதலால் அப்பாவிகளைக் கொன்றழித்தும் நம் சுதந்திர தாகத்தை நசுக்கிட எண்ணுபவனுக்கு, நாம் எல்லோரும் இறுதிப் பதிலடியைப் பரிசாகக் கொடுக்கின்ற காலம் கனிந்து நெருங்கி வந்து விட்டது.

அதற்காக, ஆயிரமாயிரமாய்த் தம்முயிர் ஈய்ந்த மாவீரர் கனவை நனவாக்கிடவும் உலகெங்கும் அகதியாய் அலைந்து வாழுகின்ற நம் தமிழர் மானத்துடன் தலை நிமிர்ந்து எங்களுடைய சொந்த மண்ணில் வாழ்வதற்காகவும் நானும் என்னை எதிர்வரும் “மகளிர் எழுச்சி நாள்” முதல் முழுமையாய் - முழு நேரப் போராளியாய் மண் மீட்புப் போரிலே இணைத்துக் கொள்ளப் போகிறேன்
இதுவரை நான் முழு நேரப் பங்காளியாவதற்கு இருந்த ஒரே தடை எனது வயது. அதுவும் அன்றுடன் தீர்வது உங்களுக்குப் புரியும் தானே? நீங்களும் அண்ணாவும் தாயகம் நீங்கி அகதியாகப் புகலிடம் நாடிப் பனி விழும் தேசமொன்றுக்குச் சென்று ஏறத்தாழ எட்டாண்டுகள் ஆகி இருந்தாலும், இவ்வளவு நாளும் இங்கு நடந்த சம்பவங்கள், சண்டைகள், இடப்பெயர்வுகள், தாக்குதல்கள், மரணங்கள், வீரச்சாவுகள் எல்லாம் பள்ளி மாணவியாய் இருந்த என்னை எத்தனை தூரம் பாதித்து இருக்கும் என்று உங்களுக்கும் நன்றாக விளங்கும் தானே?

என்னைப் பொருத்தவரையில், எமது பெருமதிப்புக்குரிய தேசியத் தலைவர் அவர்கள், ஏறத்தாழப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன் தீர்க்கதரிசனத்துடன் கூறியபடி எமது விடுதலைப் போராட்டத்திற்குக் கல்வி கவசமாகவும் எமது கல்விக்கு எமது போராட்டம் காப்பரணாயும் இருத்தல் இன்றைய நெருக்கடியான சூழ்நிலையில் அத்தியாவசியம் ஆகும். அதற்கு, ஆகக் குறைந்தது, வீட்டிற்கு ஒருவராவது காலமிட்ட கட்டளைப்படிப் போராடினாற்தான் எமது மண் விரைவில் மீட்கப்பட்டு மாணவர் சுமுகமாகக் கற்கக் கூடிய நிலைமை நிரந்தரமாக்கப்படும்.

அப்பா! இப்போதெல்லாம் எமது கிராமத்தவரில், அயல் வீடுகளில், வீட்டுக்கு இரண்டு, மூன்றென மாவீரரும் போராளிகளும் உள்ள குடும்பங்களும் உள்ள நிலையில், வீட்டுக்கு ஒரே பிள்ளையாய் இருந்தும் போராளியாகி உள்ளவர் மத்தியில் அண்ணா இங்கிருந்து செய்யாத பணியை, நானாவது நிறைவேற்றாமல் இருக்கலாமா?

அப்படிச் செய்தால், இந்த மண் எம்மை மன்னிக்குமா? சுதந்திர தமிழீழத்தில் எமது குடும்பமும் எதிர்கால சந்ததியும் தலை நிமிர்ந்து வாழுமா? நீங்களும் அண்ணாவும் உவ்விடமிருந்து எங்கள் தலைவர், கடந்த சில ஆண்டுகளாகத் தனது மாவீரர் நாள் உரைகளில் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டபடி, வழமை போல அல்ல, அதற்கும் மேலாகவும் விரைவாகவும் உங்களுடைய பங்களிப்பை, எந்தெந்த வடிவிலெல்லாம் முடியுமோ அந்தந்த வடிவங்களிலெல்லாம் இயன்றளவு தொடர்ந்து வழங்குங்கோ.

எங்கள் சோகங்களைச் சுகங்களாக்கவும் வலிகளுக்கு நிரந்தர நிவாரணம் தேடவும் ஏமாற்றங்களை முன்னேற்றங்களாக மாற்றவும் உங்களால் முடிந்ததை அவசியமாகவும் அவசரமாகவும் அவதானமாகவும் செய்யுங்கோ
உங்கிருக்கும் எங்கள் உறவினர் மற்றும் உங்கள் பல்லின நண்பர்களுக்கும் இன்றுள்ள நெருக்கடியான போர்ச் சூழ்நிலையில் நம் தேசத்துக்கு உதவி புரியவேண்டியதன் அவசியத்தை எடுத்துக் கூறி, இங்கு நிகழும் தமிழினப் படுகொலையை நிறுத்த உடன் பங்களிக்குமாறு வேண்டிக் கேட்டு ஊக்கமளியுங்கோ.

இந்த உலகத்திற்கு சிறிலங்கா அரசு கூறி வருவது போல நாம் பயங்கரவாதிகள் அல்லர் என்றும் எமது போராளிகளும் தமிழர்களும் வேறு வேறு அல்லர் என்றும் நாம், கால் நூற்றாண்டுக்கும் மேலாக இணைந்து நடாத்துவது அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களின் சுதந்திரத்துக்கான விடுதலைப் போராட்டம் என்றும் அவர்களுக்கு ஓயாது எடுத்துக் கூறுங்கோ.கவனயீர்ப்புப் போராட்டங்களுக்கு அவர்களையும் உங்களுடன் கூட்டிச் செல்லுங்கோ.

அப்போதுதான் எமது போராட்டத்தின் தாற்பரியமும் உண்மை நிலையும் பாராமுகமாக இருக்கும் சர்வதேசங்களுக்கும் பாரபட்சமாக நடந்து கொள்ளும் ஐக்கியநாடுகள் சபையினர்க்கும் மனிதவுரிமைகளுக்காகப் போராட்டம் நடாத்தும் அமைப்பினர்க்கும் தெளிவாகப் புரியும்.அப்பா, அண்ணா! என்றாவது ஒருநாள் எமக்கும் சந்திக்க நிச்சயம் வாய்ப்பு வரும். அது - சுதந்திர தமிழீழத்திலேயா அல்லது அதற்கு முன்னரேயா என்று நீங்களும் உங்கிருக்கும் எம்மவர்களும் தான் தீர்மானிக்க வேண்டும் .

இப்போதும் அம்மா, உங்களையும், அண்ணா, அண்ணியையும், நிழற்படத்தில் மட்டும் பார்த்துள்ள தன் பேரப்பிள்ளைகளையும் எப்போ நேரில் பார்ப்போம் என்று பெரும் ஆவலில் இருக்கிறா. எமக்கருகில் விளையாடித் திரியும் தன் பேரக் குழந்தைகளின் வயதுப் பிஞ்சுப் பாலகர் எதிரியின் தாக்குதல்களில் கண் முன்னே கொல்லப்படும் போதும் காயப்பட்டு குருதி வெள்ளத்தில் மிதக்கும் போதும் அவ படும் பாட்டை எழுத்தில் விவரிக்க என்னால் முடியாது
அவவுக்கு நான் எது பற்றிச் சொன்னாலும் முன்பு விளங்குவதில்லை. ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன் கொடியவன் கோத்தபாய தன் படையினரை உச்சாகப்படுத்தும் வகையில் ஆற்றிய உரையில் “இனிமேல் முல்லைத்தீவில் அகப்படும் பெண்கள் அனைவரும் படையினருக்கு விருந்தாகட்டும்; அங்கு அகப்படும் ஆண்களின் இரத்தத்தினால் இந்து சமுத்திரம் சிவப்பாகட்டும்” என்று கூறியது அவவுக்கு எல்லாவற்றையும் நன்கு தெளிவாக்கி விட்டது.

அப்பா, எங்கட முன் வீட்டுக் கற்பகம் மாமி, பக்கத்து வளவு அருமை மாமா, சந்தைக்குப் பக்கத்து வீட்டு சுந்தரம் சித்தப்பாக் குடும்பம், திருநாவுக்கரசுப் பெரியப்பா குடும்பம் என இப்போ எத்தனையோ குடும்பத்தினர் - முழுமையான பங்காளிகள். தரைப்புலி, கடற்புலி, வான்புலி, கரும்புலி என்று சிறப்புப் படையணிகளுடன் வளர்ந்து பெருவிருட்சமாகியுள்ள எமதியக்கம் தற்போது மக்கள் படை, எல்லைப் படை, மாணவர் படை என்றும் கிளை பரப்பி வியாபித்துள்ளது உங்களுக்கும் தெரியுமென என நம்புகிறேன்.

எனக்கும் மனச்சாட்சி இருக்குத் தானே? நானும் உணர்வுள்ள ஒரு சாதாரண மனிதப் பிறப்புத் தானே? தன் மானமும் இனமானமும் காக்க வேண்டியது எனதும் கடமை தானே? தமிழீழ அன்னை மண் இதனைத்தானே எங்களிடம் எதிர்பார்க்கிறது?முதல் மாவீரன் சங்கர் அண்ணா, தியாக தீபம் திலீபன் அண்ணா, முதல் பெண்புலி மாலதி அக்கா, வான் கரும்புலிகள் ரூபன் அண்ணா, சிரித்திரன் அண்ணா உட்பட ஏறத்தாழ இருபத்து நான்காயிரம் மாவீரரும் ஆயிரமாயிரம் போராளிகளும் எமதருமைத் தேசியத் தலைவரும் இத்தனை இலட்சம் மக்களுக்கும் எதனை எதிர்பர்த்து உள்ளார்களோ அதனை நிறைவேற்றுவது எனதும் கடைமை அல்லவா?
மேலும் அப்பா, அண்ணா, அண்ணி, மருமக்களுக்கு எனதன்பைத் தெரிவியுங்கோ.பேரப்பிள்ளைகளு??்கு தமிழை நன்கு கற்பியுங்கோ. அவர்களுக்கு எங்களுடைய வரலாற்றைச் சரியான முறையில் சொல்லிக் கொடுங்கோ. தேசப்பற்றோடு தமிழர்களாய்த் தமிழ் உணர்வுள்ளவர்களாய் வீரமும் மானமும் உள்ள மனிதர்களாய்த் தொப்பூழ்க்கொடி உறவுகளை மறவாதவர்களாய் வளரச் செய்யுங்கோ.

வேறென்ன அப்பா?

இதை எழுதத் தொடங்கும் நேரத்தில்தான் வான் புலிகளின் முதற் கரும்புலித் தாக்குதல் பற்றிய வெற்றிச் செய்தி புலிகளின் குரலினூடாக என் காதுகளில் வந்து வீழ்ந்தது. இப்போது எமக்கு அண்மையிலுள்ள மைதானத்தில் அந்தக் கரும்புலிகள் இருவரதும் நினைவாகவும் வேறும் சில மாவீரர் நினைவாகவும் வீரவணக்க நிகழ்வு தொடங்கி விட்டது. ‘இந்த மண் எங்களின் சொந்த மண்’ என்ற பாட்டுக் கேட்கிறது.

அம்மா உட்பட எல்லோரும் புறப்பட்டு விட்டார்கள். முடிந்தால், மீண்டும் இன்னுமொரு மடலில் சந்திப்போம்.

நன்றி.

“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”

இப்படிக்கு,

என்றும் உங்கள் அன்பு மறவாது
தேசம் விடுதலை காண உழைக்கின்ற

அன்பு மகள் தேவகி