Sunday, March 8, 2009

இஸ்லாம் மாணவிகள் வீதியில் ஆடை மாற்றும் அவல காட்சிகள் - சிங்கள இனவெறி பள்ளியின் அட்டகாசம்..

இஸ்லாமிய மாணவியர்களை வீதியில் ஆடை மாற்ற செய்யும் சிங்கள பெவுத்த இனவெறி பள்ளிகள் .

இந்த காணொளி காட்சியை கண்ட போது கண்களில் சில துளி கண்ணீர் .. உலகின் அத்தனை இனவெறி கொடுமைகளும் இலங்கையில் பவுத்த சமயத்தை பின்பற்றும் இனவெறி இலங்கை அரசால தான் நடைபெற வேண்டுமா!!

குழந்தைகளயும் ஈவு இரக்கமின்றி கொன்ரு குவிக்கும் இலங்கை இனவெறி பவுத்த அரசு இப்பொது இஸ்லாமிய சகோதரிகளை வீதியில் தங்கள் ஆடைகளை சரி செய்ய விட்ட கொடுமை ..

இந்த சகோதரிகளுக்கு ஒரு மறைவிடம் தான் கட்டி கொடுக்க கூடாதா.. இல்லை அவர்கள் தங்கள் மத வழக்க படி உள்ள ஆடைகளில் பள்ளிகளுக்கு அனுமதிக்கலாம் அல்லவா . அமைதியை விரும்பிய புத்தர் இப்படி தமிழர் இரத்தங்களையும், இஸ்லாமிய மாணவிகளயும் வீதியில் ஆடைகளையாவா போதித்தார்.

தமிழர்களே சூழுரைப்போம் இந்த இன வெரி சிங்கள அரசின் இன படுகொலைகளை , இன வெறி செய்கைகளை பள்ளிகளில் திணிப்பதற்காக கண்டனமும், உலக நாடுகளின் கவனத்திர்கும் இட்டு செல்வோம்..




Racism at its worst.. Srilanka is filled with budhist racist doing mass massacres of tamils and also forced Islamic school going girls to correct their dresses in street before attending their schools..

5 comments:

அப்துல் குத்தூஸ் said...

அதிகமான இஸ்லாமிய குடும்பங்கள் தங்களது வயது வந்த பெண்களை பள்ளிக்கு அனுப்பாததற்கு இப்படிப்பட்ட செயல்களே காரணம். இன்னும் அதிகமான கொடுமைகள் பள்ளிகளில் நடப்பதால் பெண்களே தங்களின் கல்வியை நிறுத்திக் கொள்ளும் அவலம் உள்ளது.

முஸ்லிம் என்பதால் அவர்களை ஏகடியம் பண்ணுவதும், அந்த மார்க்கத்தை பின்பற்றும் பெண்களை இழிவு படுத்துவதாலும் இதையெல்லாம் எதிர்க்க வழியின்றி தங்களின் கல்வியை பாதியில் நிறுத்தும் அவலம் உள்ளது.

வசந்தசேனன் said...

அப்துல்,
இந்த வருத்தம் எனக்கும் உள்ளது.. இந்தியா மற்றும் உலகில் உள்ள ஏனைய நாடுகளில் கடும் உடை கட்டுபாடு கொண்ட பள்ளிகளில் கூட மானவிகளை பள்ளி வளாகத்திற்குள் சென்று உடை மாற்ற அனுமதிபார்கள்.

இந்த சிங்கள பவுத்த இனவெறி இலங்கை பள்ளிகள் மாணவியரை வளாகத்திற்குள் அனுமதிப்பது இல்லை போல .. பாவம் குழந்தைகள் வீதியின் ஒரங்களில் நெளிந்து கொண்டு சரி செய்கிரார்கள்

manikandan said...

ஒண்ணு போடா நாயிங்களான்னு ஸ்கூல திட்டிட்டி வேற ஸ்கூல்ல சேக்கணும். இல்ல, இது தான்னு கண்டிப்பா தெரிஞ்சா நீங்க சொன்னா மாதிரி ஒரு changing ரூம் வைக்க சொல்லி வற்புறுத்தனும். ஆனாலும் இது ரெண்டும் இல்லாத போது தெருவுல டிரஸ் மாத்த வைக்கிற குடும்பத்த உதைக்கணும். தன்னோட பொண்ணு comfort (மானத்த) விட யாரோ மதத்துல விதிச்ச சட்டம் பெருசா இருக்கு இவங்களுக்கு !

வசந்தசேனன் said...

மணிகண்டன் உங்கள் ஆதங்கம் நியாயமானதே..

வாசகன் said...

கேணத் தனமான ஒரு பதிவு.

வீட்டிலிருந்தே அவர்கள் பள்ளிக்கான சீருடையை அணிவதை யார் அல்லது எது தடுத்தது? அனைத்து மாணவிகளும் வீட்டிலிருதேதானே அணிந்து செல்கிறார்கள்?அல்லது அப்படி அணிய முடியாத அளவுக்கு அது என்ன ஆபாசமாக இருக்கிறதா?

அவர்களுக்கு தனி உடைமாற்று அறை வேண்டுமென்றால்,சீருடை அணிவதன் கொள்கையே கேலிக்குள்ளாகிறது.


ஒரு வகையில் பள்ளியின் பாரபட்சமற்ற தன்மை பாராட்டுக்குறியது.

Post a Comment