Wednesday, May 13, 2009

பணத்தால் விலை போன தமிழக வாக்குகள்

தி.மு.க தொகுதிக்கு முப்பது கோடி என்று அள்ளி தெளித்த ஆயிரது இருனூரு கோடி ரூபாய் இன்று தேர்தல் நாளில் வேளை செய்கிறது.. தமிழகத்தில் பதிவாகும் வாக்குகளில் சுமார் 20 முதல் 30 சதவீத வாக்குகள் தி.மு.க கூட்டணியால் விலைக்கு வாங்கப்பட்ட ஓட்டுகள்...

இப்போதைய கள நிலவரப்படி தி.மு.க கூட்டணி விலைக்கு வாங்கிய ஓட்டுகளால் அதன் எதிர்ப்பு ஒட்டுகளை முந்துகிறது... தமிழக பாமர மக்கள், பெண்கள் ஆட்டு மந்தைகளை போல் ஐனூருக்கும்,ஆயிரத்திற்க்கும், இருனூருக்கும் விலை போய் உள்ளது வருந்ததக்கது..


ஈழ உணர்வாளர்களை தி.மு.க ஆயிரம் கோடி வரை செலவழித்து விலைக்கு வாங்கிய ஒட்டுகளால் நம் அனைவராலும் ஆயுளுக்கும் செரிக்க இயலாத செய்திகள் 16 அம் தேதி காத்திருக்கிறது..

இன்று காலை வாக்களித்து விட்டு நாற்காலியில் வந்த துரோகியின் முகத்தில் ஒரு கபட புன்சிரிப்பும்,குதுகாலிப்பும் பொங்க மீடியாக்களுக்கு நாற்பதிலும் வெற்றி என கூற்யதன் பின்னனி விலைக்கு வாங்கக்ப்பட்ட ஒட்டுகளின் மீது உள்ள நம்பிக்கையும், உளவு துறை கொடுத்த ரிப்போர்ட்டும் தான்...

தி.மு,க , காங்கிரஸ் தனது எதிர்ப்பு ஒட்டுகளை விலைக்கு வாங்கிய ஓட்டுகளால் சரி கட்டிவிட்டது.. இனி தேர்தலின் முடிவுகள் முழுவதும் தொகுதி வாரியாக பிரியும் வாக்குகளை வைத்து தான் நிர்னயம் செய்யப்பட போகின்றன

1 comment:

லக்கிலுக் said...

ஓ!

தோல்வி உறுதின்னு தெரிஞ்சதும் இப்படி கெளப்பி விடுறீங்களா? :-)

Post a Comment