Friday, April 10, 2009

சிவகங்கை செட்டியாரின் புலி வருது புரளியால் கேவலப்படும் காங்கிரஸ்

சீக்கியர்களின் விவகாரத்தில் காங்கிரஸ் ஒரு ஆட்டம் ஆடி விட்டது.. பஞ்சாப்பில் இன்ன பிற மா-நிலங்களில் சீக்கியர்களின் வாக்குகள் சிதறுவதை கண்ட காங்கிரஸ் தமிழகத்தில் இருந்தும் தொடர்ந்து கண்டனம் வருவதால் திக்கு முக்கு ஆடி போய் மக்களை எப்படி திசை திருப்புவது என யோசித்த வேளையில் ஒரே கல்லில் இரண்டு
மாங்காய் என்று சிவகங்கை செட்டியார் போட்ட தப்பு கணக்கால் --நேற்று சோனியா குடும்பத்தார்க்கு புலிகளால் ஆபத்து என்று ஒரு புரளியை கிளப்பி விட்டு மக்களை சீக்கியர் பிரச்சனையில் இருந்து திசை திருப்ப முயன்று இன்று இந்தியர்களிடையே கேவலப்பட்டு உள்ளது..

காங்கிரஸின் இந்த சீப்பான அரசியல் பொய் பிரசாரத்தின் பிண்ணனியை அறிந்த வட இந்தியர்கள் இதனை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை.. தமிழக மக்கள் இதனை பொருட்படுத்தவே இல்லை ... இப்படி புஷ்ஷ்ஷ்ஷ் ஆகி போன புரளியால் காங்கிரஸ் பீதியாகி உள்ளது.. இன்ரு புலிகளின் தொடர்பாளர் நடேசன் சிஎன் என் தொலைகாட்சிக்கு தங்கள் இயக்கம் அப்படி எந்த ஒரு அச்சருத்தலை இந்திய தலைவர்களுக்கு கொடுப்பதில்லை என்ரு விளக்கிய பின் வால் அகப்பட்ட குரங்கை போல் சிவகஙகை செட்டியார் சிதம்பரம் மாட்டி கொண்டு முழிக்கிறார்.. அவர் இன்னும் பத்து தினங்களுக்கு தமிழகம் வர பொவதில்லையாம்.. தமிழர்கள் குறி தவறாமல் செருப்பை வீசி விடுவர் என ஒரு பயமாம்

சில குசும்பு வட இந்தியர்கள் இந்த புரளியை கேட்டு இந்தியாவை சோனியாவிடம் இருந்து காப்பாற்ற புலிகள் தான் இறுதி வழி என நையாண்டி செய்யும் அளவு கேவலப்பட்டு உள்ளார் செருப்படி சிதம்பரம்

1 comments:

சங்கொலி said...

well done very very good blog posting.

www.mdmkonline.com Team

Post a Comment