Sunday, February 15, 2009

நாசமா போக!! இதை பார்க்காதீர்கள் ஈரக்குலை வெடிக்கும்

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள "மக்கள் பாதுகாப்பு வலய" பகுதிகளான புதுமாத்தளன், முள்ளிவாய்க்கால், அம்பலவன்பொக்கணை, புதுக்குடியிருப்பு ஆகிய பகுதிகளிலும் மற்றும் கோம்பாவில் பகுதியிலும் சிறிலங்கா படையினர் நடத்திய வான் மற்றும் பீரங்கி தாக்குதல்களில் 134 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 208 பேர் காயமடைந்துள்ளனர்.
புதுமாத்தளன் - சனிக்கிழமை இரவு

சிறிலங்கா படையினரின் "பாதுகாப்பு வலயம்" என்ற அறிவிப்பை அடுத்து புதுமாத்தளன் பகுதியில் மக்கள் மிகச் செறிவாக அடைக்கலம் புகுந்துள்ள நிலையில் அவர்களை கொன்றொழிக்கும் நோக்குடன் தாக்குதகள் சிறிலங்கா படையினரால் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகின்றன.

புதுமாத்தளன் நோக்கி நேற்று சனிக்கிழமை இரவு இடம்பெயர்ந்து கொண்டிருந்த மக்களை இலக்கு வைத்தும் அப்பகுதி மக்கள் வாழ்விடங்களை இலக்கும் வைத்தும் சிறிலங்கா படையினர் செறிவான ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை மற்றும் பீரங்கித் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

இதில் 12 சிறுவர்கள் உட்பட 78 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 132 பேர் காயமடைந்துள்ளனர்.




No comments:

Post a Comment